Posts

Showing posts from March, 2025

சகலும் அவளே ,அவளே ஆதிபராசக்தி

Image
சகலும் அவளே ,அவளே ஆதிபராசக்தி . இன்றைய பதிவில் பரமாச்சாரியாள் தெளிவாக விளக்கி இருந்தார். அம்பாளை வணங்குவதற்கே  பாக்கியம் செய்து இருக்க வேண்டும். அது சத்தியமான வார்த்தை. பரமாச்சாரியாளின் நேற்றைய அருளுரைக்கும், இன்றைய  அருளுரைக்கும்  நிறைய தொடர்பு உள்ளது. அம்பாளை யாருக்கு தரிசிக்கும் பாக்கியம் உள்ளதோ அவர்களுக்கு தான் அம்பாளை தரிசிப்பதற்கான எண்ணத்தை தோன்றி வைப்பாள் அம்பாள். நாம் உன்னிடம் சரணகதி அடைந்து விட்டேன். நாம் ஒரு சிறு துரும்பு என்கிற எண்ணம் வேண்டும். காரணம் அனைத்திற்கும் மூலம் அவள். மஹான்கள் எப்போதும் தன்னை ஒரு துரும்பு என்று தங்களை சிறுமைபடுத்தி கொள்வார்கள். அவ்வாறே நேற்றைய பதிவில் சௌந்தயலஹரி என்ற மாபெரும் காவிய கிரந்ததை படைத்துவிட்டு. நீ கொடுத்த அக்ஷ்ரத்தால் நான் உனக்கு சௌந்தயலஹரி எனும் மாலையை தொடுத்தேன் என்று பவ்யமாக கூறுவார் சங்கபகவத்பாதாள். இதில் என் திறமை ஒன்றுமில்லை, அனைத்திற்கும் காரண கர்த்தா நீ, நான் ஒரு கருவி என்பதை தனது 90வது பாடலில் சரணாகதி தத்துவத்தில் கூறி, 100பாடலின் நான் ஒரு சிறு துரும்பு என்பதை வெளிபடுத்து இருப்பார். இதையே தான் பரமாச்சாரி...

மஹாபெரியவாள் அம்பாளை பூஜிப்பதற்கு பாக்யம் பெற்றவர்கள் யார்

Image
 மஹாபெரியவாள் அம்பாளை பூஜிப்பதற்கு பாக்யம் பெற்றவர்கள் யார்  என்பதை  தனக்கே உரிய பாணியில் விளக்குகிறார் அதன் பதிவு. அம்பாளை    உபாஸிப்பதே   ஜன்மா   எடுத்ததன்   பெரிய   பலன்.    அன்பு மயமான    அம்பிகையைத்  தியானிப்பதை   விடப்   பேரானந்தம்  எதுவும்  இல்லை.  அம்பாளை    உபாஸிப்பதற்கு   வேறு  பலன்   எதுவும்  வேண்டாம்.    அதுவே  அதற்குப்   பலன்.    ஆனாலும்,  இந்த  லோகத்தின்    மாயையில்   நாம்  எல்லோரும்    சிக்கிக்  கொண்டிருப்பதால்,  #நான்# என்பதை  விட்டு,அவளை   அவளுக்காகவே   உபாஸிக்கிற    ஆனந்தம்   நமக்கு  ஆரம்ப தசையில்   புரிய மாட்டேன்  என்கிறது.  "அம்மா!   நான்   எத்தனையோ   தோஷம்   உள்ளவன்.   என்றாலும்   உன்னை...

அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன்? பகுதி 1

Image
 பரமச்சார்யாளின் தெய்வத்தின் குரல் அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன்? : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)பகுதி-1 ‘நாம் இதைச் சாதித்தோம், அதைச் சாதித்தோம்’ என்று அகம்பாவப்பட கொஞ்சம்கூட நியாயம் இல்லை.  நாம் எதையும் சாதிப்பதற்கான புத்தியோ, தேக பலமோ எங்கிருந்து வந்தது?  இந்தப் பிரபஞ்ச காரியங்கள் அனைத்தையும் செய்கிற ஒரு மஹா சக்தியிடமிருந்தே நம்முடைய, சக்தி எல்லாம் வந்திருக்கிறது.  அது இல்லாவிட்டால் நம்மால் ஒரு சுவாசம்கூட விடமுடியுமா?  ஒருநாள், இத்தனை சாதித்ததாக எண்ணிக் கர்வப்படுகிற நம்மைவிட்டுச் சுவாசம் போய் விடுகிறது.  அதைப் பிடித்து வைத்துக் கொள்கிற சாமர்த்தியம் நமக்குக் கொஞ்சம்கூட இல்லை. அப்போது நம் சக்தி எல்லாமும் சொப்பனம் மாதிரிப் போய்விடுகிறது.  கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்கூட, சக்தி சமுத்திரமாக இருக்கப்பட்ட அம்பாளின் ஒரு சிறு துளி அநுக்கிரகத்திலேயே நடக்கிற காரியங்களை, நம்முடையதாக நினைத்து அகம்பாவப்படுவது அசட்டுத்தனம்தான் என்று தெரியும். எத்தனைக்கெத்தனை இதை அநுபவத்தில் தெரிந்துகொண்டு அம்பாளுக்கு முன் ஒரு துரும்பு மாதிரி அடங்கிக் கிடக்கிறோமோ அத்தனைக்கத்தனை ...
Image
 நேற்றைய பதிவில் விநாயகர் காப்பு என்ற பதிவு. காரணம் உலகே அம்மையும் அப்பனின் இணைவே.. அது எவ்வாறு உடல் அப்பன், உயிர் அன்னை,  இரண்டின் இணைவே உடலின் அசைவு. உடலில் தனியாக மற்றும் உயிர் தனியாக இருந்தால் எந்த பிரோஜனமும் இல்லை. இரண்டும் இணைந்தால் தான் உலகத்தின் இயக்கம். கணபதியின் இந்த உலகு என அழைப்பர். அவர் தான் முழு முதற் கடவுள் என்பதால் இந்த விநாயகர் காப்பு. காமேஸ்வரா முகலோக கல்பித ஸ்ரீ கணேஸ்வரா. கணேஷ் கடவுளை தன் இறைவனின் முகத்தினால் படைத்தவள் காமேஸ்வரர் . அம்பாளை முகத்தை காமேஸ்வரர் பார்த்தவுடன் கணேசர் தோன்றினார். வாம பாகத் துமை மைந்தனே உல கேழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி காரர் கணபதி நிற்க கட்டுரை யே. உலகத்தை தமது கர்பத்தில் வைத்து படைத்தால் சகல சகல ஜீவராசிகளுக்கும் அம்பாளுக்குள் அடக்கம். அதனால் அவள் லோகமாதாவானாள். உலகு என்பது கணபதி என்பதால் உலகில் தோன்றிய மண்ணை வைத்து பிள்ளையார் செய்து கணபதி விஜர்சனம் என்று நீரில் பிள்ளையாரை கரைபத்தின் தாத்பர்யம். அதில் தோன்றிய முதல் தாவரம். பூல், அதை அவருக்கு அருகம்பூல் மாலையாக அணிவிக்கிறோம். புல்லிலிருந்து மனிதன் தோன்றினான். இதைதான் திருவாசம் தெ...

ஆதியும் அந்தமும்

Image
 இதன் சிறப்பே அந்தாதி பெயர் என வரக் காரணம்.  அப்படி என்ன சிறப்பு இந்த அந்தாதி எனும் பெயருக்கு. எதற்கும் ஆதியும் அந்தமும் இல்லாததோ அதைப் பற்றி பாடியதால் அந்தாதி என்று அழைக்கப்பட்டது. எது ஆதியும் அந்தமும் இல்லாதது , அந்த பரம்பொருள். பரம்பபொருள் என்பது #சிவசக்தி# இணைவு ஐக்கிய சொரூபம். அது எவ்வாறு அம்பாள் சிவனை நோக்கி தவமிருந்ததால். திருவண்ணாமலையில் அம்பாளுக்கு காரத்திகை பௌர்ணமி அன்று காட்சிக் கொடுத்து தனது இடபாகத்தையும் கொடுத்தார். அதுவே கார்த்திகை தீபம். கார்த்திகை தீபத்தின்று சிவசக்தி ஐக்கிய சொரூபமான அர்த்தநாரீஸ்வரர் ஆடி ஆடி சந்தோஷத்துடன் வந்த பிறகு தான் மலைஉச்சியில் மலை தீபம். இதன் தாத்பர்யம் அப்பனும் அம்மையும் இணைந்து இருக்கும்போது தான் அம்மைக்கு மிக ஆனந்தமான மனநிவையில் இருப்பாள் அப்போது தான் தீப சொருபமான ஐயனை மலை உச்சியில் அக்னி சொரூபமாக காணலாம். அது ஆதியும் அந்தமும் இல்லாத ஜோதி பிளம்பு.  அந்த ஜோதியின் அடியை காண தான் மஹாவிஷ்ணு வராஹ அவதாரம் எடுத்து பூமியை துளைத்து சென்றார். ஆனால் முடியைக் காண மேல் பிரம்மா நோக்கி சென்றார். அடிமுடியை காண இயலவில்லை என்பதே இதன் தாத்பர்யம். ஆ...

அபிராமி அந்தாதி முன்னுரை-1

Image
 நேற்றைய பதிவு அந்தாதி பற்றிய ஒரு முன்னுரை. அது ஏன் அந்தாதி.  அது அந்தம்+,ஆதி. அதாவது முடிக்கின்ற எழுத்தில் தொடருக்கின்ற பாடல். உதாரணத்திற்கு #உதிக்கின்ற# செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை துதிக்கின்ற மின் கொடி மென்கடிக் குங்கும தோயம் என்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத் #துணையே# விழுத்துணையே என்று முடிக்கின்ற வரியில் அடுத்த பாடலின் தொடக்கம். #துணையும்# தொழும் தெய்வ மும்பெற்ற தாயும் சுருதிகளின் பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங் கணையும் கருப்புச் சிலையும்மென் - பாசாங் குசமும்கையில் அணையும் திரிபுர சுந்தரி ஆவ தறிந்தனமே. கடைசி பாடலின் முடிவு முதல் பாடலின் தொடக்கம் குழையத் தழுவிய கொன்றையந் தார்கமழ் கொங்கைவல்லி கழையைப் பொருத திருநெடுந் தோளும் கருப்பு வில்லும் விழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண்ணகையும் உழையைப் பொருகண்ணும் நெஞ்சில்எப் போதும் #உதிக்கின்ற#வே. இவ்வாறாக மாலையை ஆரமாக தொடுத்தது போல் இலக்கணத்தோடு கூடிய வரிசை அமைப்பு.  அதுவே இதன் சிறப்பு.  இது அம்பாளின் அருள் இல்லாமல் சாத்தியமில்லை. தான் பாடு...

சோமாஸ்கந்தர்

Image
 *சோமாஸ்கந்தர் என்பவர் யார் ?* *அவருடைய சிறப்புகள் என்ன ?* *பஞ்சாட்சரமலை சிவாலயத்தில் இடம்பெற காரணம் என்ன *சோமாஸ்கந்தர் என்பவர் யார் ?* *அவருடைய சிறப்புகள் என்ன ?* *பஞ்சாட்சரமலை சிவாலயத்தில் இடம்பெற காரணம் என்ன என்பதை வாருங்கள் காணலாம் .....* *சோமாஸ்கந்தர் என்பவர் அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும்.* சிவ பார்வதி தம்பதிகள் தங்கள் குழந்தையான கந்தனுடன் காட்சியளிப்பதை சோமாஸ்கந்தர் என்று அழைக்கிறோம்.  இவ்வடிவத்தில்  *சைவம் (சிவன்),*  *சாக்தம் (உமை),*  *கௌமாரம் (கந்தன்)* ஆகியவற்றின் பிரதானத் தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன. காக்கும் கடவுளான திருமால், இந்த சோமாஸ்கந்த மூர்த்தியை தன்னுடைய மார்பில் வைத்து பல்லாயிரம் ஆண்டுகள் வழிபாடு செய்து வந்ததாக,  புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்து சமயம், சைவம் (சிவன்),  வைணவம் (விஷ்ணு), சாக்தம் (சக்தி),  கவுமாரம் (முருகன்),  சவுரம் (சூரியன்),  காணாபத்தியம் (விநாயகர்) என ஆறுபிரிவுகளைக் கொண்டது. இதில் *சிவன்,* *சக்தி,* *முருகன் மூன்றும் இணைந்த வடிவமாக இருப்பது ‘சோமாஸ்கந்தர்...

சௌந்தயலஹரி உருவான விதம் மற்றும் 100வதுஸ்லோகம்

Image
 சௌந்தயலஹரி உருவான விதம் ஆதிசங்கரர் விஜயயாத்திரை செய்துகொண்டு வரும்பொழுது, கயிலாயத்திற்கு சென்றார். கயிலாயத்தில் அவர் மெளனமான நிலையில் தியானம் செய்து கொண்டிருந்த சமயம்,  பார்வதி, பரமேஸ்வரர் இருவரும் தங்களுக்குள், " கீழே பூலோகத்திலிருந்து நமது கயிலாயத்திற்கு ஒரு குழந்தை வந்திருக்கிறது". இந்த இளம் வயது பாலகனைப் பார்த்தால் ஏதாவது நாம் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது "என்று பேசிக் கொண்டார்கள். இவர்கள் இருவரும் பேசி கொண்டிருந்தது ஆதி சங்கரருக்கு தெரியாது. திடீரென்று இரண்டு சுவடிகளைப் பார்வதி பரமேஸ்வரர் இருவரும் மேலே இருந்து ஆதி சங்கரரிடம் தூக்கி எறிந்தனர். அவரது இரு கைகளிலும் சுவடிகள் பட்டன.  ஆனால் ஒன்றைத்தான் அவர் பிடித்தார்.  மற்றொன்றை நந்தி பகவான் கயிலாயத்திலிருந்து பறி போகிறதே! என்று பிடுங்கி விட்டார்.  நந்தியின் ஸ்பரிசம் பட்டதும் சங்கரர் கண்ணைத் திறந்து பார்த்தார். கையில் ஒரு சுவடிதான் இருந்தது. இன்னொன்றைக் காணவில்லை. சங்கரர் மனம் நொந்து அழுது மேலே பார்த்த போது, அங்கு பார்வதி, பரமேஸ்வரர் தரிசனம் கிடைக்க பெற்றார். அம்பாளை நோக்கி "அம்மா" இது என்ன லீலை? ஒரு சுவ...

பெண் என்பவளே சக்தியின் சொரூபம்

Image
 பெண் என்பவளே சக்தியின் சொரூபம் . இதைத்தான் பாரதியும் தன் கண்ட அனைத்து பெண்களையும், ஆதிபராசக்தியின் ஸ்வரூபமாக கண்டார். பட்டரின் பாடலும் இதுவே ஒன்றாய் அரும்பி  பலவாய் விரிந்து இவ்வுலகு  எங்குமாய் நின்றாள்  ஒரே சக்தியாய் அரும்பி,  பல்வேறு சக்திகளாய் விரிந்து, அவளே ஆதிபராசக்தி/,மாகமாயி/காமாக்ஷி/மீனாக்ஷி/விலாக்ஷி/அகிலாண்டேஸ்வரி/லலிதாம்பிகை/திரிபுரசுந்தரி/இராஜராஜேஸ்வரி அனைத்து சக்தியும். இவ்வுலகம் எங்கும் பரந்து நீக்கமற நிறைந்து நின்றாள்.. பிற சக்திகளிடமிருந்து நீங்கி தனித்தும் நிற்பாள்.  இப்படிப்பட்ட தன்மையுடைய மஹாசக்தி...  சிறியேனான என்றன் இதயத்தில் என்றென்றும் நீங்காமல் நின்று அருளாட்சி புரிகின்றாள் அவளே ஒன்றை பல ஆக்குவாள். எதை ஒன்றை பலவாக்குவள். கருவில் உள்ள குழந்தைக்கு கை,கால் மூகம்,மூக்கு மற்றும் கண்கள் போன்றவை வளர்வதற்கு தனது கருவில் சுமந்து குடும்பத்தை விருத்தி ஆக்குபவள். அவளே தான் அந்த குடும்பத்தின் தலைவி. நேற்று ஒரு காணொளி அசுரனுக்கு எவ்வாறு காளி உதவினாள். (அரக்கர் குல தலைவன் ரம்பா ஒரு எருமையை மணம் முடித்து அவர்களிருவருக்கும் பிறந்த குழந்தையே மகிஷ...

பகவதியின் பாத நீரும் பாரதியின் தாம்பூல ரஸமும்.

Image
 பகுதி 98. வாக்கு ஸித்தி). பகவதியின் பாத நீரும் பாரதியின் தாம்பூல ரஸமும். Mastery over words, eloquence,magnetic speech. #லலிதாசஹஸ்ரநாமம்# #ச்ருதிஸீமந்தஸிந்தூரிக்ருதபாதாப்ஜதூலிகா#. ஸஹஸ்ரநாமம் ரொம்பவும் அழகாக, வேதமாதாவின் வகுட்டில் அப்பிய ஸிந்தூரமாக எந்தக் குங்குமம் இருக்கிறதோ. அதையே தன் பாததூளியாகப் பண்ணிக் கொண்டவள்:  #ச்ருதி-ஸீமந்த-ஸிந்தூரி-க்ருத- பாதாப்ஜ தூளிகா# என்று வர்ணிக்கிறது. #தாம்பூலபூரிதமுகீதாடிமீகுஸீமப்ரபா# தாம்பூல பூரித முகீ -   வாய் சிவக்க சிவக்க  கோவைப்பழம்போல வெற்றிலை பாக்கு  தாம்பூல தரித்து சுகிப்பவள் அம்பாள்  என்கிறார் ஹயக்ரீவர். அவள் ஏற்கனவே சிவந்த மேனியள். மேலும் கேட்கவேண்டுமா தாம்பூலத்தால் சிவந்த இதழ்கள் அவளுக்கு  கூடும் தனி அழகை.  அது மேலும் நல்ல தாம்பூலம் தரிக்கும்போது கம்மென்று ஒரு மணம் சேர்ந்துவிடும். கிராமத்துப்பக்கம் சுமங்கலி பெண்கள் செக்கசிவந்த வாய் கூடுதலாக தாம்பூல தரித்து செக்க சிவந்த வாய் இதைதான் ஞாபக படுத்துகிறது அதே அழகில் அம்பாள். #தாடிமீ குஸுமப்ரபா# அம்பாளின்  நிறத்தை எதற்கு ஒப்பிடலாம் என்று யோசித்தால் உ...

ஏன் அம்பாளைப் பற்றிய இவ்வளவு பதிவுகள்.

Image
 ஏன் அம்பாளைப் பற்றிய இவ்வளவு பதிவுகள். காரணம் லலித சஹஸ்ரநாமம்/சௌந்தயலஹரி/அபிராமி அந்தாதி இவற்றை படிக்க படிக்க பலவிதமான அர்த்தங்கள் எமக்குள் பிறக்கிறது. பலரின் வியாக்கியாணங்கள் அதன் அர்த்தம் பல விதமானது இருக்கிறது. உதாரணத்திற்கு திருக்குறளை 5ம் வயத்தில் படித்து இருப்போம் அந்த வயத்திற்கு தகுந்த விளக்கம் கொடுத்து இருப்பார்கள். அதே மாதிரி 8வது /10வது/12வது மற்றும் கல்லூரிகளில் ஆனால் திருக்குறள் ஒன்றே அதன் விளக்கம் வயது தகுந்தற் போல் வேறுபடும் அதை தான் அபிராமி பட்டர் கீழே உள்ளது போல் விளக்கிறார். அது அள்ள அள்ள குறையாத அமுத சுரபி போல இருக்கிறது. அபிராமி பட்டரின்  கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பக்தி பண்ணியது. கண்ணியது உன் புகழ் -  நான் எப்போதும் பாடல்கள் கொண்டு பாடுவது உன் புகழ் கற்பது உன் நாமம் -  நான் எப்போதும் கற்பது உன் நாமம் கசிந்து பக்தி பண்ணியது உன் இரு பாத அம்புயத்தில் -  என் மனம் கசிந்து பக்தி  பண்ணுவதோ  உன் இரு திருவடித் தாமரைகளில் (அம்புயம் -  அம்புஜம் என்னும் வடமொழிப் பெயரின் திரிபு;  அம்பு - நீர்,  ஜம் - பிறந்தது;...

லலிதா அன்னையின் ஆயுதங்கள்

Image
 லலிதா அன்னையின் ஆயுதங்கள் ஸ்ரீலலிதா அம்பிகையின் ஆயுதம். பகுதி 2. 1.பாசம் 2.அங்குசம் மற்ற இரு ஆயுதங்கள் 3 .புஷ்பபானம் ============== சப்தம், ஸ்பரிசம், ரஸம், ரூபம், கந்தம்  என்ற பஞ்ச தன்மாத்திரைகளே ஸ்ரீஅன்னையின் புஷ்ப பானம். புஷ்பபானத்தின் அதிஷ்டான தேவதை ஸ்ரீ வாராஹி அம்பிகையின்  புஷ்ப பானத்திலிருந்து தோன்றிய அன்னை ஸ்ரீவாராஹி.  அன்னையின் சதுரங்க படையின் தலைவி..  #க்ரியாசக்தி#யின் வடிவம். ஸ்ரீலலிதா அன்னை தன் புருவ நெறிப்பிலிருந்து ஒரு தண்டத்தை உருவாக்கி ஸ்ரீவாராஹி தேவிக்கு கொடுத்தாள். அதனால் #தண்டநாதா# என்ற பட்டம் ஸ்ரீவாராஹி தேவிக்கு வந்தது. கோபம் வந்தால் நாம் என்ன செய்கிறோம் நமக்கு தெரியாது. #,மஹாபாவங்களைசெய்யதூண்டுவதுகோபம்#. "க்ருத்தோ ஹன்யாத் குரூன்னபி" இந்த வாக்யத்திற்கு அர்த்தம் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் கோபத்தினால் செய்யபடும் இப்பாவத்திற்கு உலகம் அழியும் வரை நரக வாசத்தை தருவது.  மனதால் கூட நினைக்க கூடாத பாவம். எல்லா பிராணிகளை  விட வராகத்திற்கு பலம் ஜாஸ்தி. அதனால் இந்த ரூபம் அன்னைக்கு. கோபத்தை அடக்குவதற்கும்   சத்ரு ஜெயம் ஏற்பட ஸ்ரீவாரா...

ஸ்ரீலலிதா அம்பிகையின் ஆயுதம்

Image
 லலிதா அன்னையின் ஆயுதங்கள் ஸ்ரீலலிதா அம்பிகையின் ஆயுதம் ================================= 1.பாசம் ======= ஆசையின் வடிவம் பாசம்.   "பற்றுக பற்றற்றான் பற்றினை" என்பர்.  அம்பிகையிடம் பற்றாகிய பக்தியையும்.  அவள் காலடியில் ஆசைவைத்தால் மற்ற பற்றுகளும்  ஆசையும் அறுபடும்.  அம்பிகையிடம் உண்மையான பக்தி செலுத்துவோர்க்கு நற்கதிஅடைய வழி வகுக்கும் ஆயுதம்.  #ராகஸ்வரூபபாசாட்யைநம#.  ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம நாமம் ஆசையின் வடிவமான பாசத்தை இடது கையில் தாங்கி நிற்பவள்  "இச்சாசக்தி மயம் பாசம் அங்குசம் ஞானரூபிணம்  கிரியாசக்திமயே பாணதனுஷீ ததஜ்வலம்"  என்ற ஸ்லோகத்தின் படி   பாசம்= #இச்சாசக்தி#ஆகும்.  இந்த  இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியாக   மூன்று சக்திகளும் எல்லா தெய்வங்களும் இயங்க  காரண சக்திகள்.  சில புருஷ தெய்வங்களுக்கு   மூன்று சக்தியின் ஒன்றே.  சில புருஷ தெய்வங்களுக்கு   இரண்டு அம்பிகை   இம்மூன்று சக்தியாக விளங்குவர்.  (அம்பிகை என்பது அந்தந்த தெய்வங்களின் பத்னிகள்)...

ஸரஸ்வதி கடாக்ஷ்சம் லெக்ஷ்மி கடாக்ஷ்சம்

Image
 பகுதி 96 ஸரஸ்வதி கடாக்ஷ்சம் லெக்ஷ்மி கடாக்ஷ்சம் Attaining knowledge and wealth. லலிதா சஹஸ்ர நாமத்திற்கு ஒப்புநோக்கதக்க சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி பாடல். #லலிதாசஹஸ்ரநாமம்# #ஸதீ# ஸதீ தேவி என்பது தேவி மஹாத்மியத்தில் குறிப்பிடப்படும் ஒரு தேவி. தேவி மஹாத்மியத்தில் குறிப்பிடப்படும் சில தேவிகள்:  உமா, கௌரி, சண்டீ, சுந்தரி, சுபகா, ஷிவா. #ஸதாசிவாகுடும்பிநீ# குடும்பினீ = குடும்பத் தலைவி - மனைவி சதாஷிவ குடும்பினீ = சதாசிவனின் பத்தினி  பிரபஞ்ச தோற்றத்திற்கு காரணமான பரம்பிரம்மம், சதாசிவன்.  அவரே பிரபஞ்ச உயிர்களின் தந்தை.  லலிதாம்பிகையே தாய்.  பரமபுருஷனின் பத்தினி.  #ஸதாசிவபதிவ்ரதா# சிவனுக்கு பல வடிவங்கள் உள்ளன, சதாசிவம் ( சதாசிவம் என்றால் எப்போதும் மகிழ்ச்சியாக அல்லது வளமாக இருக்கிறது) அவற்றில் ஒன்று.  சதாசிவத்தின் சில விளக்கங்கள் பின்வருமாறு .   பிரம்மா , விஷ்ணு , ருத்ரன் , மகாதேவன் மற்றும் சதாசிவம் ஆகியவை ஐந்து கூறுகள்  அதாவது பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகஷி . சிவனின் அனைத்து வடிவங்களிலும் ,  சதாசிவ வடிவம் உயர்ந...

மாயா உலகத்தில் அனைத்தும் மாயை

Image
 எது மாயை என்பதற்கு மற்றொரு விளக்கம் வேந்தாந்ததிலிருந்து. மாயை என்பது வேதாந்தத்தில் முக்கியமாகக் கருதப்படும் விடயமாகும். சங்கர வேதாந்தம், சைவ சித்தாந்தம் ஆகியவற்றில் #மாயை# முக்கியமாகக் கருதப்படுகிறது. மாயையிலிருந்து விடுபட்டு ஞானத்தை நோக்கி செல்வதே #ஆன்மீகம்# என்று சொல்லப்படுகிறது. ஆன்மீகம் என்பது ஆன்மாவை மிகைப்படுத்தல் என பொருள். அது எவ்வாறு இருளாகிய மாயையை நீக்கி உள்ளே இருக்கும் பரம் பொருளை உணர்த்துதல். எது மாயை?  எது ஞானம்? என்பது முதலில் தெரிந்தால்தானே ஞானத்தை நோக்கி செல்வது சாத்தியமாகும். மாயை வயம் நின்று செய்யும்  உலக வாழ்வு மாய வாழ்க்கை எனப்படுதற்கும் இதுவே காரணமாகும். மாயா வாழ்க்கையின் தொடர்பு விலகுதற்கு #இறைவன்திருவருள்# தொடர்பு பெறவேண்டும். அத்வைதிகளின் கருத்துப்படி பிரம்மத்தை மறைத்து, நிலையில்லாத பொருளை நிலையானது எனக் காட்டுவது மாயை.  எது நிலையில்லாதது இந்த உடல் எது நிலையானது உள்ளே இருக்கும் ஆன்மா. மாயை எனும் சொல்லே உலகம் தன்னிலிருந்து தோன்றுவதற்கும், தன்னில் வந்து ஒடுங்குவதற்கும் அடிப்படைத் தத்துவம் ஆகும். எது இல்லை என நினைக்கிறோமோ அது இருக்கு எனவும் எது...