அபிராமி அந்தாதி முன்னுரை-1
நேற்றைய பதிவு அந்தாதி பற்றிய ஒரு முன்னுரை.
அது ஏன் அந்தாதி.
அது அந்தம்+,ஆதி.
அதாவது முடிக்கின்ற எழுத்தில் தொடருக்கின்ற பாடல்.
உதாரணத்திற்கு
#உதிக்கின்ற# செங்கதிர் உச்சித்
திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்
போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி மென்கடிக்
குங்கும தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி
என்றன் விழுத் #துணையே#
விழுத்துணையே என்று முடிக்கின்ற வரியில் அடுத்த பாடலின் தொடக்கம்.
#துணையும்# தொழும் தெய்வ மும்பெற்ற
தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட
வேரும் பனிமலர்ப்பூங்
கணையும் கருப்புச் சிலையும்மென் -
பாசாங் குசமும்கையில்
அணையும் திரிபுர சுந்தரி
ஆவ தறிந்தனமே.
கடைசி பாடலின் முடிவு முதல் பாடலின் தொடக்கம்
குழையத் தழுவிய கொன்றையந்
தார்கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்
தோளும் கருப்பு வில்லும்
விழையப் பொருதிறல் வேரியம்
பாணமும் வெண்ணகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில்எப்
போதும் #உதிக்கின்ற#வே.
இவ்வாறாக மாலையை ஆரமாக தொடுத்தது போல் இலக்கணத்தோடு கூடிய வரிசை அமைப்பு.
அதுவே இதன் சிறப்பு.
இது அம்பாளின் அருள் இல்லாமல் சாத்தியமில்லை. தான் பாடுக்கின்ற தருணம் அவ்வாறு இருந்தது.
இது எவ்வாறு சாத்தியம் ஆனது.
சித்த புருஷர்களுக்கே இது சாத்தியம்.
அது எவ்வாறு
Comments
Post a Comment