Posts

சக்திபீடம்காமக்யா

Image
 #சக்திபீடம்காமக்யா சக்திபீடம்காமக்யா காமாக்யா என்பதன் அர்த்தம் மற்றும் விளக்கம்: பொருள்: 'காம' (ஆசை) + 'ஆக்யா' (புகழ்பெற்ற/அவள்) = ஆசைகளை நிறைவேற்றுபவள் அல்லது ஆசைகளின் தேவி. வடிவம்: இந்த தேவி படைப்பு சக்தியின் (Creator) வடிவமாக, குறிப்பாக 'யோனி' சக்தியாக (யோனி ரூபத்தில்) வணங்கப்படுகிறார். தாந்த்ரீக முக்கியத்துவம்: காமாக்யா தந்திர சாதனாவின் மிக முக்கியமான மையமாகக் கருதப்படுகிறது, மேலும் அவர் மகா மாயா, காளி மற்றும் மகா திரிபுர சுந்தரி என்றும் அடையாளம் காணப்படுகிறது. காமாக்யாவின் ஒத்த பெயர்கள் #ஆதிசக்தி (Adi Shakti) - #முதன்மைசக்தி . #யோனிசக்தி (Yoni Shakti) - பிரபஞ்ச படைப்பின் இருப்பிடம் #காளி / துர்கா (Kali/Durga) - சக்தி தேவியின் பிற வடிவங்கள். #காமரூப (Kamarupa) - காமரூபம் என்று அழைக்கப்படும் புனிதமான இடம் எனது நண்பரின் பதிவு, தற்போது பதிவிடும் பதிவிற்கு ஏற்ற பதிவு. #செவ்வாய் அன்று #செங்னூர் பகவதியைக் கண்டோம். #இன்று #காமக்யா இரத்தமாக மாறும் நீர்! -  காமாக்யா தேவி கோயிலின் தீர்க்கப்படாத மர்மம்!  இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில்...

ஸ்ரீசூக்தம் - ஹிரண்ய-வர்ணாம் ஹரிந்நீம்

Image
 #ஹிரண்யவர்ணம் நேற்று மஹாபெரியவா கொடுத்த விளக்கம். அவர் நமக்கு கலங்கரை விளக்கமாக இருந்து நம்மை கரையேற்றியவர். வெள்ளிக்கிழமையன்று மஹாலெக்ஷ்மிப் பற்றி விளக்கத்தை சற்று விரிவாக காணலாம். #Hiranyavarnam) என்பது செல்வத்தின் தெய்வமான மகாலட்சுமியை போற்றும் புகழ்பெற்ற #ஸ்ரீசூக்தம்  (Sri Suktam) மந்திரத்தின் தொடக்கமாகும்.  ஹிரண்ய-வர்ணாம் ஹரிந்நீம் சுவர்ண்ண-ரஜத-ஸ்ரஜாம் | சந்த்ராம் ஹிரண்மயிம் லக்ஷ்மிம் ஜாதவேதோ ம ஆவஹ ||1|| பொருள்: 1.1:  (ஹரிஹ் ஓம். ஓ ஜாதவேதோ,  அந்த லக்ஷ்மியை எனக்காக அழைக்கவும்). யார் தங்க நிறமும் ,  அழகானவர் மற்றும்  தங்கம் மற்றும் வெள்ளி மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவர் . (தங்கம் சூரியனையோ அல்லது  தபஸ் என்னும் நெருப்பையோ குறிக்கிறது;  வெள்ளி சந்திரனையோ  அல்லது  தூய சத்துவத்தின் ஆனந்தத்தையும் அழகையும் குறிக்கிறது.) 1.2:  பொன்னிற ஒளிவட்டத்துடன் கூடிய சந்திரனைப் போன்றவர் யார்,  ஸ்ரீயின் வடிவமான லட்சுமி யார்;  ஓ ஜடவேதோ ,  தயவு செய்து எனக்காகஅந்த லட்சுமியை ஆவாஹனம் செய் .  (சந்திரன் தூய சத்துவத்தின் ஆனந்தத்தையு...

ஆத்தாளை,எங்கள் அபிராம வல்லியை

Image
 #நூற்பயன்: ஆத்தாளை,  எங்கள் அபிராம வல்லியை ,  அண்டம் எல்லாம் பூத்தாளை,  மாதுளம் பூ நிரத்தாளை, புவி அடங்கக் காத்தாளை,  அங்குச பாசம் குசுமம் கரும்பும்  அங்கை செர்த்தாளை,  முக்கண்ணியைத்,  தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே. #பொருள் எங்கள் தாயானவளை,  அபிராமி வல்லியை,  எல்லா உலகங்களையும் பெற்றவளை,  மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை,  உலகமெல்லாம் காத்தவளை,  திருக்கரங்களில் மலர் அம்புகள்  ஐந்தையும்,  பாசத்தையும்,  அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு  ஒரு தீங்கும் நேராது;  உலகில் வளமும் நலமும் பெற்று  வாழ்வர். ------------- #பொருளுரை இது, கி.வா.ஜ, அவர்களின் முறைப்படி கொடுக்கப்பட்டுள்ளது.  சில புத்தகங்களிலே,  "அங்கையில், பாசாங்குசுமம் கரும்புவில்லும் சேர்த்தாளை" என்றும் காணப்படுகிறது.  என்றாலும், சாக்த உபாசனையும், தமிழ் வல்லமையும் ஒருங்கே நிரம்பிய கி.வா.ஜ. அவர்கள் விளக்கிய படி,  மேலே சொன்னவாறு பாடலை எடுத்துக் கொண்டால், இன்னும் அழகிய...

அபிராமி அந்தாதி பாடல்100

Image
 அபிராமி அந்தாதி பாடல்100. குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி கழையைப்  பொருத திருனெடுந் தோளும்,  கரும்பு வில்லும் விழையைப் பொரு  திறல் வேரியம்  பாணமும் வெண் நகையும் உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்பொதும்  உதிக்கின்றவே    . #பொருள் ஏ, அபிராமி!  குழையிலே தவழும்படியாகவுள்ள கொன்றை மலரால் தொடுத்த மாலையின் மணம்கமழும் மார்பகங்களையும் தோளையும் உடையவளே!  மூங்கிலை ஒத்த அழகிய கரும்பு வில்லும்,  கலவிபோருக்கு விரும்பக்கூடிய மணம் மிகுந்த ஐவகை மலர் அம்பும், வெண்மையான முத்துப்பல் இதழ்ச் சிரிப்பும்,  மானை ஒத்த மருண்ட கண்களுமே எப்பொழுதும் என் நெஞ்சில் நிறைந்திருக்கிறது.  அத் திருமேனியையே நான் வழிபடுகின்றேன் #பொருளுரை 'தாரமர் கொன்றையும்' என்ற காப்புப் பாடலுடன் தொடங்கியவருக்கு, அந்தாதியின் இறுதிப் பாடலிலே, அதே கொன்றரை மலர் ஞாபகத்திற்கு வந்தது ஆச்சரியம் இல்லைதான்!  இறைவன் அணிந்திருக்கும் அந்தக் கொன்றை மாலை,  இறைவனார், எம் அம்மையைத் தழுவிய போது,  அம்மையின் ஸ்தங்கள் மீது பட்டுக் குழைந்தது. அம்மையின் ஸ்தனங்க...

அபிராமிஅந்தாதிபாடல்99

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்99 . குயிலாய் இருக்கும்  கடம்பாடவியிடை;  கோல இயல் மயிலாய் இருக்கும்  இமயாசலத்திடை;  வந்துதித்த வெயிலாய்  இருக்கும் விசும்பில்;  கமலத்தின்மீது அன்னமாம்; கயிலாயருக்கு  அன்று இமவான்  அளித்த  கனங்குழையே               #பொருள் ஏ, அபிராமி!  அன்று கைலயங்கிரித் தலைவனாகிய சிவபிரானுக்கு  மணம் முடித்த மலையரசன் மகளே! கடம்பவனத்தில் உறைந்த குயிலே! இமயமலையில் தோன்றிய் அழகிய மயிலே! ஆகாயத்தில் நிறைந்திருப்பவளே!  தாமரை மீது அன்னமாக அமர்ந்திருக்கும் திருக்கோலத் தையுடையவளே!  மதுரையில் குயிலாகவும்,  இமயத்தில் மயிலாகவும், சிதம்பரத்தில் ஞானசூரிய ஒளியாகவும்,  திருவாரூரில் அன்னமாகவும் அம்பிகை விளங்குகின்றாள்  என்பது வழக்கு). #பொருளுரை அன்னை எப்படி எல்லாம் இருக்கிறாள்?  எவ்வாறெல்லாம் அருள் பாலிக்கிறாள்?  ஒரு பட்டியல் போடுகிறார் பட்டர். கடம்ப வனத்திலே அவள் குயில் போன்று இருக்கிறாள் #கதம்பவனவாசினி' என்றே அவளுக்குத் திரு நாமம்.  இமய மலையின் மீதோ,  அ...

அபிராமி அந்தாதி பாடல் 98.

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்98. தைவந்து நின் அடித் தாமரை  சூடிய சங்கரர்க்கு கைவந்த தீயும், தலை வந்த ஆறும்,  கரந்தது எங்கே?- மெய் வந்த நெஞ்சின்  அல்லால்  ஒருகாலும் விரகர்  தங்கள் பொய்வந்த நெஞ்சில்,  புகல் அறியா  மடப் பூங்குயிலே!         #பொருள் ஏ, அபிராமி!  நீ உண்மை பொருந்திய நெஞ்சைத் தவிர வஞ்சகர்களுடைய பொய் மனத்தில் ஒருபோதும் வந்து புகுந்தறியாதவள்.  பூங்குயில் போன்றவளே! உன்னுடைய பாதத்தாமரையைத் தலையில் சூடிக் கொண்ட சிவபெருமானாகிய சங்கரனின் கையிலிருந்த தீயும்,  முடிமேல் இருந்த ஆறும்  (ஆகாய கங்கை) எங்கே ஒளிந்து கொண்டனவோ? #பொருளுரை அன்னை ஊடல் கொண்டிருக்கிறாளாம்.  அந்த ஊடலைத் தணிக்க அந்த மகேசன் வருகிறான்.  அன்னையின் திருப்பாதங்களை வருடுகிறான்.  ஊடல் தணிகிறது. அம்மையும் அப்பனும் இணந்து காட்சி தருகிறார்கள். ஆனால்,  அம்மையின் குழந்தையான அபிராமி பட்டருக்கோ சில சந்தேகங்கள் எழுகின்றன.  வேடிக்கையான சந்தேகங்கள்! அந்த சங்கரனார்க்கோ, கையிலே நெருப்பு இருக்கிறது.  அந்த நெருப்புடனே அவன் தண்டவம்...

அபிராமிஅந்தாதிபாடல்97

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்97 . ஆதித்தன்,  அம்புலி,  அங்கி குபேரன்,  அமரர்தம் கோன், போதிர் பிரமன்  புராரி,  முராரி  பொதியமுனி, காதிப் பொருபடைக் கந்தன்,  கணபதி,  காமன்  முதல் சாதித்த புண்ணியர்  எண்ணிலர் போற்றுவர்,  தையலையே      #பொருள். என்னுடைய அன்னை அபிராமியை, புண்ணியம் பல செய்து,  அவற்றின் பயனையும் அடைந்த  சூரியன்,  சந்திரன்,  அக்கினி,  குபேரன்,  தேவர்களின் தலைவன் இந்திரன்,  தாமரை மலரில் உதித்த பிரம்மன்,  முப்புரங்களை எரித்த சிவபெருமான்,  முரனைத் தண்டித்த திருமால்,  பொதியமலை முனியாகிய அகத்தியர்,  கொன்று போர் புரியும் கந்தன்,  கணபதி,  மன்மதன்  முதலாகிய  எண்ணற்ற தேவர்கள்  அனைவரும்  போற்றித்  துதிப்பர். #பொருளுரை       அவளைப் போற்றி வழிபட்டால்,  ஏழு உலகங்களுக்கும் அதிபராகலாம். உண்மை.  ஆனால்,  அவ்வாறு வழிபட்டு பெறும் பேறு அடைந்தவர்கள் யாரும் உண்டோ? அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமா?...