Posts

Showing posts from August, 2025

அம்பாள் மன்மதனுக்கு ஔக்ஷதம் ஆனாள்.

Image
எதற்காக அம்பாள் மன்மதனுக்கு ஔக்ஷதம் ஆனாள். இதைதான் லலிதா சஹஸ்ர நாமம் #ஹரநேத்ராக்னிஸந்தக்தகாமஸஞ்ஜீவநெளஷதி# ஈசன் காலாக்கினி ருத்ரனாகத் தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்தபோது, அம்பிகையானவள் தன் குளிர்ந்த நோக்கால் , சஞ்சீவனி மருந்து போலச் செயல்பட்டு மன்மதனைப் பிழைக்க வைத்தாள்.  அத்தகைய சஞ்சீவனி போலவே ருத்ரன் உலகங்களை எரிக்கும்போது, எரிந்த உலகிற்குக் குளிர்ச்சியைத் தன் பார்வையால் கொடுத்து மன்மதனைப் பிழைக்க வைத்தது போல் அனைவரையும், உலகங்கள் அனைத்தையும் பிழைக்க வைக்கிறாள்.  இதன் உள் சூக்ஷமம் தனது கணவன் சிவப்பெருமான் கொடுத்த சாபத்தை மாற்ற இயலாது. ஆனால் தனது பக்தையான ரதி தேவியின் பக்தியைப் பொருட்டு அவன் உயிர்பித்து எழுப்பி மன்மதன் ரதிதேவியின் கண்ணுக்கு மட்டும் தெரியும் மாறி அவனுக்கு சாப விமோசனம் கொடுத்தால்.  அதனால் மன்மதனின் கரும்ப வில்லையும் மலர் அம்புகளையும் அம்பாளிடம் வந்தது. மன்மதன் என்பவன் ஆசையை துண்டுபவன்,அவன் காமத்துக்கு உரியவன் அந்த காமம்/ஆசை நம்முள் எழும்போது ஆசையை அறுப்பவள் அம்பாள். அதனால் அவள் கையில் பாசமும் மற்றும் அங்குசமும் மறாறெரு கையில் கரும்பு அம்புமா மற்றும் மலர்...

காமாக்ஷி :

Image
 காமாக்ஷி : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)-2 காமாக்ஷியின் நாலு கைகளில் ஒன்றில் ஒரு வில்லும், இன்னொன்றில் ஐந்து அம்புகளும் இருக்கும்.  அந்த வில் கரும்பினால் ஆனது. அம்புகள் புஷ்பங்களால் ஆனவை. சாதாரணமாக கெட்டியான இரும்பினால் வில் அமைந்திருக்கும்; இங்கோ மதுரமான கரும்பு அம்பாளுக்கு வில்லாக இருக்கிறது. கூரான அம்புகளுக்குப் பதில் மிகவும் மிருதுவான மலர்களைப் பாணங்களாக வைத்திருக்கிறாள். அந்தக் #கரும்புவில்_மனஸ்# என்ற தத்துவத்தைக் குறிப்பதாகும். மதுரமான மனம் படைத்த அம்பாள் நம் மனங்களையெல்லாம் இந்த வில்லைக் காட்டி வசப்படுத்திக் கொண்டு விடுகிறாள்.  அவளுடைய ஐந்து புஷ்ப பாணங்களும் நம் #ஐம்புலன்களை# ஆகர்ஷித்துச் செயலற்றுப் போகும்படி செய்வதற்காக ஏற்பட்டவை.  ‘மனோ ரூபேக்ஷூ கோதண்டா – பஞ்ச தன்மாத்ர ஸாயகா’ என்று,  இதையே “லலிதா ஸஹஸ்ர நாமம்” கூறுகிறது.  நம்முடைய மனோவிருத்தியும், இந்திரிய விவகாரங்களும் அடங்குவதற்கே பராசக்தியானவள் காமாக்ஷியாகி கரும்பு வில்லும் மலர்ப் பாணமும் தாங்கி வந்திருக்கிறாள். மீதி இரண்டு கைகளில்  பாசமும் அங்குசமும் வைத்திருக்கிறாள்.  பாசமானது நம் ப...

மஹாபெரியவா

Image
மஹாபெரியவா திருவடிகளே சரணம். எனது நண்பர் அவரின் அனுபவ பதிவு. மஹா பெரியவா எங்கள் அகத்துக்கு வருகை புரிந்த  அற்புத அனுபவம். 1960 ஆண்டு பெரியவா தஞ்சை ஜில்லாவில் பல இடங்களுக்குச் சென்று அனுக்ரஹம் செய்த சமயம்.  திப்பிராஜபுரம் என்ற வாத்திம்மா கிராமத்தில் ஓர் அகத்தில் பிக்ஷா வந்தனம்.  சிஷ்யர்கள் சூழ சென்று கொண்டிருந்தார். திடீரென அவர் பாதை மாறி வேறொரு வழியில் செல்ல ஆரம்பித்தார். உடன் இருந்தவர்கள்   " பெரியவா இது ஸ்வாமி‌மலை செல்லும் பாதை அல்ல என்று தடுத்தும் அவர் மேலே சென்று கொண்டிருந்தார்.  ஸர்வேஸ்வரனுக்கு வழி காட்ட முடியுமா? கொஞ்ச தூரத்தில் ஸ்வாமி மலை . அங்கு அக்ரஹாரத்தில் என் பெரியம்மா. அகம். அந்த இடம் வந்த உடன்   ப்ரேக் போட்டார் போல் நின்று  வீட்டின் உள்ளே செல்லும் முன்  "இது ஸ்வாமிநாதன் அகம் தானே " என் தன்னை ச்சுட்டிக் காண்பித்து தன் பூர்வாச்ரமப் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்டார்.  என் பெரியப்பா பெயரும் ஸ்வாமி நாதன் தான். வெகு வேகமாக உள்ளே சென்று ஸ்வாமி அலமாரி முன்பு தண்ட நமஸ்காரம் செய்தார்.  "இது கோவில் டா அம்பாள் கோவில் " என்று ச...

#அபிராமிஅந்தாதிபாடல்41

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்41                                                                                                              புண்ணியம்  செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக் கண்ணியும்  செய்ய கணவரும் கூடி  நம் காரணத்தால் நண்ணி  இங்கே வந்து  தம் அடியார்கள்  நடு இருக்கப்பண்ணி  நம் சென்னியின் மேல்  பத்ம பாதம்  பதித்திடவே புண்ணியம் செய்தனமே மனமே - ஆகா.  என்ன பாக்கியம்?. என்ன பாக்கியம்?.  புண்ணியம் செய்திருக்கிறாய் மனமே. அன்னையும் அத்தனும் அபிராமிபட்டரிடம் அன்பு கொள்ளக் காரணமாக இருந்தது எது?  அவர் முன் செய்த புண்ணியம். அந்தப் புண்ணியம் அவர்களிடம் அன்பு செலுத்த, அந்த அன்பு,  இவரை அடியார் நடுவுள் இருத்திற்று. இதனை மனத்துக்குள் சொல்லி மகிழ்கின்றார்....

காமாக்ஷி

Image
 காமாக்ஷி காமதாயினி காமாக்ஷி : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)-1 ஒரு காரியமும் இல்லாமல், தன்னைத்தானே அநுபவித்துக் கொண்டிருக்கிற பிரம்மத்தையே சிவன், சிவம் என்று சொல்கிறோம். காரியமில்லாமல், ரூபமில்லாமல், வருணமில்லாமல், குணமில்லாமல் இருக்கிற அந்த சாந்த மயமான பிரம்மத்திலிருந்தான் , இத்தனை காரியங்கள், ரூபங்கள், வர்ணங்கள், குணங்கள் எல்லாம் உண்டாகி இருக்கின்றன.  மாயா சக்தியினால் ஒரே பிரம்மம் இத்தனை உருவங்களும் குணங்களும் உள்ள பிரபஞ்சங்களாகவும், ஜீவராசிகளாகவும் தோன்றி இருக்கிறது.  ஒன்றான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகக் காட்டுகிற அந்த மாயாசக்தியைதான் அம்பாள், அம்பாள் என்று சொல்லுகிறோம். இந்தச் சக்தியினால்தான்,  நாம் எல்லாம் தோன்றியிருக்கிறோம். உண்மையில் நாமும் பிரம்மத்தைத் தவிர வேறு இல்லை.  ஆனால், வேறாக நினைக்கிறோம். இதற்குக் காரணம்,  பிரம்ம சக்தியான அம்பாளின் மாயைதான். இப்படி நம்மை மாயையில் போட்டு எடுப்பது அவளுடைய லீலை. அவள் மாயையில் நம்மைக் கட்டிப்போடுகிறவள் மட்டும் அல்ல. மனமுருகி அவளை எந்நாளும் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தால், அவளே இந்த மாயை முழுவதையும் நீக்கி ...

தஞ்சாவூர் மாநகர் உருவான விதம் மற்றும் அதன் நீர்மேலாண்மைப் பற்றிய பதிவு.

Image
 தஞ்சாவூர் மாநகர் உருவான விதம் மற்றும் அதன் நீர்மேலாண்மைப் பற்றிய பதிவு. தஞ்சாவூர்:  ஆஹா என்ன அழகு எத்தனை அழகு...  கண்ணையும், மனதையும் தழுவி நெஞ்சை நிறைக்கும் தஞ்சையில் உள்ள அனைத்தும் அழகோ அழகுதான். நம் முன்னோர்கள் சிறந்த அறிவு ஜீவிகள்.  முக்கியமாக #நீர்மேலாண்மையில் சிறந்தவர்கள்.  அதனால்தான் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் பொருட்டு தஞ்சையில் குளங்கள் வெட்டினர். சோழமன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தஞ்சை நகரை சுற்றிலும் நான்குபுறமும் தொடர்ச்சியாக தண்ணீர் பயணிக்கக்கூடிய அகழிகள் அமைக்கப்பட்டன.  அன்றே தண்ணீரின் அவசியத்தையும், மேன்மையையும் உணர்ந்து பரந்து, விரிந்து சென்றது. இப்படி பல கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த அகழியில் காவிரி நீரும் மழைநீரும் சேமிக்கப்பட்டன. இதுமட்டுமல்ல பெரிய கோவில் அருகே சிவகங்கை குளம், அய்யன் குளம், சாமந்தன் குளம் உருவாக்க ப் பட்டது.  பெரியக்கோவிலில் விழுக்கின்ற மழை நீரானது வீணாகமல் அருகில் உள்ள சிவகங்கை குளத்திற்கு  சென்றடையும்.  சிவகங்கை குளம் நிரப்பினால் அதிகபடியான நீர் ஊரின் மத்தியில் உள்ள ஐயன் குளத்தில் சேரும் படியான நீ...

தஞ்சாவூர் மேலவீதி கோயிலாகள்

Image
 கடந்த இரு தினங்களாக தஞ்சை பங்காரு காமாக்ஷியைப் பற்றிய பதிவுகளை கண்டோம். தஞ்சை பங்காரு காமாக்ஷியை தவிர மற்றும் கோவில்களை எவ்வாறு நம் முப்பாட்டன் அமைத்துள்ளான்  என்பதை இந்த பதிவில் காணலாம். காரணம் கோவில் இல்லாத ஊரில் குடி இருக்கவேண்டாம் என்பது பழமொழி. அதற்கேற்ப தஞ்சாவூரின் மாநகரின் அமைப்பு அவ்வாறு இருக்கும். அதன் அழகை இராஜக்கள் காலத்தில் நாம் வாழ்ந்து இருந்தால் என்பதை கற்பனைச் செய்து இந்த பதிவை வாசித்தால் நமது மணகண்ணில் மிக அழகாக தோன்றும். ஊரின் அமைப்பே மிக அலதியான அழகு. ஊரின் கட்டமைப்பு என்பது நாலு ராஜ வீதிகளுக்கு நடுவே ஊரின் அமைப்பை. அவை பல சந்துக்களைக் கொண்டு ஒரு தெருவையும் மற்றொரு தெருவையும் இணைப்புதற்கு வசதியாக அமைத்து இருப்பார்கள். ஒவ்வொரு சந்து வெளிபுறமும் கழிவுநீர் வெளியேறுவதற்கு வசதியாக சிறு சாக்கடை அமைப்பு. இந்த ஒவ்வொரு சந்திகள் வழியாக நான்கு வீதிகளை அடையலாம். ஓவ்வொரு சின்ன சின்ன சாக்கடைகளும் வெளிபுரத்தில் உள்ள பெரிய சாக்கடைகளையுடன் இணைப்பு இருக்கும். வெளிபுர சாக்கடை அடுத்து நான்கு வீதிகள். அவை கம்பீரமாக ஊரின் அழகை வெளிச்சம் போட்டு காட்டுகின்ற மாதிரி நாலு பெரிய இராஜவீ...

தஞ்சாவூர் காஞ்சி காமாக்ஷி

Image
 காஞ்சி காமாக்ஷி தஞ்சாவூரில் எவ்வாறு பங்காரு காமாக்ஷி ஆனால் என்ற வரலாறு. செவ்வாய்கிழமை பங்காரு காமாக்ஷி  வரலாற்று மற்றும் பக்தி பின்னணி  &  சரண் நவராத்திரிக்கான அழைப்பு காஞ்சிபுரத்திலிருந்து பங்காரு காமாக்ஷி இடம்பெயர்வதற்கு முன்பு,  அவளுக்கு மட்டுமே சேவார்த்தி பூஜை (தினசரி சேவைகள்) அங்கு செய்யப்பட்டன. முகலாயர் படையெடுப்புகளின் போது,  கோயில் அழிவு மற்றும்  கொள்ளையிலிருந்து தெய்வத்தைப் பாதுகாக்க,  காஞ்சிபுரத்திலிருந்து செஞ்சி (காஞ்சிக்கு அருகிலுள்ள  ஒரு கிராமம்) மற்றும்  உடையார் பாளையம் வழியாக அவள்  மாற்றப்பட்டாள்.  உடையார்பாளையம் ஜமீனில்,  காஞ்சிபுரத்தின் கோயில்களில்  இருந்து பல உற்சவ மூர்த்திகள் (திருவிழா சிலைகள்) அடைக்கலத்தில் வைக்கப்பட்டன, ஏனெனில் அந்த நேரத்தில் காஞ்சியில் உள்ள அனைத்து கோயில்களும் மூடப்பட்டிருந்தன.  மூலஸ்தான சக்தி  (பிரதான தெய்வத்தின் ஆன்மீக  சாராம்சம்)  இடம் பெயர்வதற்கு   முன்பு அந்தந்த உற்சவ மூர்த்திக்கு சடங்கு ரீதியாக மாற்றப்பட்டது  (ஆகார்ஷணம்). முகலாயப் படைகள் ...

அம்மையும்அப்பனும்

Image
 இந்த மனித பிறவியின் நோக்கம் என்ன?. #அம்மையும்அப்பனும் "அம்மையும் அப்பனும்" என்பது  பொதுவாக "சிவபெருமானும் பார்வதியும்" அல்லது  "இறைவனும் இறைவியும்" என்று பொருள்படும்.  இது இந்து மதத்தில், குறிப்பாக சைவ சமயத்தில்,  பிரபஞ்சத்தின் ஆண்பால் மற்றும் பெண்பால் அம்சங்களைக் குறிக்கும் ஒரு சொல்லாடலாகும்.  மேலும் விளக்கம்:  அம்மை: இது பார்வதி தேவியைக் குறிக்கிறது. சக்தி மற்றும் பிரபஞ்சத்தின் தாய் சக்தியாக கருதப்படுகிறார். அப்பன்: இது சிவபெருமானைக் குறிக்கிறது. பிரபஞ்சத்தின் தந்தை மற்றும் அழிக்கும் கடவுளாகக் கருதப்படுகிறார். அம்மையும் அப்பனும்: இந்தச் சொல்,  பிரபஞ்சத்தின் இருமைத் தன்மையையும்,  ஆண், பெண் அம்சங்களின் ஒன்றிணைப்பையும் குறிக்கிறது.  இது சிவ-சக்தி தத்துவத்தின் ஒரு பகுதியாகும். இந்து மதத்தில் முக்கியத்துவம்: இது இந்து மதத்தில், குறிப்பாக  சைவ மதத்தில், ஒரு முக்கிய கருத்தாகும்.  இது பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் இயக்கம் ஆகியவற்றில்  ஆண், பெண் சக்திகளின் பங்களிப்பை விளக்குகிறது. பரம்பொருள் என்பது பிரபஞ்சத்தின் உயர்ந்த சக்தியைய...

#அபிராமிஅந்தாதிபாடல்# - 37

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்# - 37 நவமணிகளை பெற்று தரும் கைக்கே அணிவது கன்னலும் பூவும்,  கமலம் அன்ன மெய்க்கே அணிவது  வெண்முத்து மாலை,  விட அரவின் பைக்கே அணிவது  பண்மணிக் கோவையும்  பட்டும்,  எட்டுத்திக்கே  அணியும் திருவுடையானிடம்  சேர்பவளே இங்கே அம்பாள் என்னென்னவெல்லாம்  அணிகிறாள் என்பது கூறப்பட்டுள்ளது. கைகளில் - கரும்பு வில், மலர் அம்பு  அவள் நான்கு கைகளிலும் எதை  வைத்துள்ளாள் #லலிதாசஹஸ்ரநாமத்தில்# விளக்கம் [கன்னல் - கரும்பு] [கமலம்-  தாமரை]  சதுர் பாஹு சமன்விதா -  நான்கு கைகள் கொண்டவள். ராக ஸ்வரூப பசாத்யா  கயிறு (பாசா) வடிவ அனைவரையும் நேசிக்கும் அவள் - அவள் இடது கைகளில் ஒன்றில் இதை வைத்திருக்கிறாள் க்ரோதாகரன்குசோஜ்வாலா வலது கைகளில் ஒன்றில் அங்குசா   வடிவில் மினுமினுத்து கோபம் கொண்டவள். மனோ ரூபேசு கோதண்டா  அவள் இடது கைகளில் ஒன்றில் மனம் கொண்ட இனிப்பு கரும்பு  வில் கொண்டவள் மாத்ரா சாயக்காவை விட  பஞ்சா தொடுதல், வாசனை, செவிப்புலன், சுவை மற்றும் பார்வை ஆகிய ஐந்து வில்களைக் கொண்ட அவள் சீர்காழி கோவிந...

கங்கைகொண்ட சோழபுரம்

Image
 கங்கைகொண்ட சோழபுரத்திற்கு கடன் தீர்த்த காஞ்சி சங்கர மடம். தெற்காசிய நாடுகளை ஆண்ட சோழ பேரரசர்களின் தலைநகராக இருந்த பெருமைக்குரியது கங்கைகொண்ட சோழபுரம்.  இங்கு மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன், சோழீசுவரர் கோவில் என்ற சிவலாயத்தை கட்டினார்.  மாமன்னர் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோவிலை மாதிரியாக கொண்டு,  கட்டப்பட்ட சோழீசுவரர் கோவில், ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் சோழ மன்னர்களின் கட்டிடக் கலைக்கு சான்றாக நிமிர்ந்து நிற்கிறது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புகள் கொண்ட, கலையம்சம் மிக்க சோழீசுவரர் கோவில்,  இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் 1983-ம் ஆண்டுக்கு முன்பாக பெரிய அளவில் பராமரிப்பு இல்லாமல் இருந்தது. பூஜைகள், திருவிழாக்களும் பெரிய அளவில் நடக்கவில்லை. 1983ல் வாரணாசி சென்று திரும்பிய காஞ்சி சங்கர மடத்தின் பக்தர்கள், புனித கங்கை நீருடன், காஞ்சி மகாபெரியவரை சந்திக்க, காஞ்சிபுரம் வந்தனர்.  கங்கை நீரை மகாபெரியவரிடம் கொடுத்தபோது,  "எனக்கு கங்கை நீரை கொண்டு வந்திருக்கிறீர்கள். ஆனால், கங்கைகொண்ட சோழபுரத்தில், கங்கைபெயரைக் கொண்ட சிவபெருமான்...

மஹாபெரியவாளும் திருகோயிலும்

Image
மஹாபெரியவாளுக்கும் ஓவ்வொரு கோயிலுக்கும் நிறைய சம்பந்தங்கள் உள்ளது. அவ்வாறான நிகழ்வு கடந்த வாரம் நடந்தது. எனது வாடிக்கையாளர் ஒருவருக்கு ஆர்டர் கைபேசி வாயிலாக வரும்,வந்த ஆர்டரை எனது ஊழியர் மூலமாக அவருக்கு கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த முறை அவரை தொடர்ப்புக் கொள்ளும்போது,, என்னை அவரது இல்லத்தில் வந்து கொடுக்குமாறு ஒரு விண்ணப்பம். எனவே அவரது வீட்டை நோக்கி இரண்டு நாட்கள் முன்பு சென்று வந்தேன். அவர் என்ன நினைத்தாரோ என தெரியவில்லை. கிட்டத்தட்ட 45நிமிடங்கள் நிறைய விஷயங்களை பேசினார். அதில் அவர்ச் சொன்ன விஷயம்,நான் மஹாபெரியவா பக்தர், மஹாபெரியவாவிடம் நல்ல பழக்கம் உண்டு. ஒரு நாள் ஹாலில் உட்கார்ந்து எதைய யோசித்துக் கொண்டு இருந்தேன். என்னை யாரே ஒருவர் கூப்பிடுவது போல் ஒரு உணர்வு. என்னை யோசித்துக் கொண்டு இருக்கிறாய். யோசிப்பதற்கு பதிலாக எதாவது எழுதலாமே என்று ஒரு கேள்வி அவரிடமிருந்து. எதைப்பற்றி எழுதுவது என்று என்னிடமிருந்து கேள்வி. அதற்கு அவரிடமிருந்து நான் சென்று வந்த கோவில்களைப் பற்றிய எழுது என்ற பதில். அவ்வாறு எழுத ஆரம்பித்தது எழுத பழக்கம். இது நடப்பதற்கு கிட்டத்தட்ட ஒருவாரத்திற்கு முன்பு தான் கங்க...
Image
 ஸ்ரீமஹா பெரியவா சரணம்  ஹரஹர சங்கர ஜய ஜய சங்கர  ’’இவ்வளவு தெய்வங்கள் ஏன்?’’ - காஞ்சி மகா பெரியவா விளக்கம் ’ஒரு மூர்த்தி இருந்தால் போதாதா? இவ்வளவு மூர்த்திகள் எதற்கு ஸ்வாமி?’ என்று காஞ்சி மகா பெரியவாளிடம் ஒருமுறை கேட்டார்கள். அதற்கு, மகா பெரியவா இப்படியாக அருளினார் என்கிறது ‘தெய்வத்தின் குரல்’. ’’ நாம் சாப்பிடுகிறோம். வயிறு நிரம்புவதற்காகத்தானே சாப்பிடுகிறோம். எதைச் சாப்பிட்டால் என்ன? அன்னத்தை மாத்திரம் சாப்பிட்டால், வயிறு நிரம்பி விடுகிறது. அநேகவிதமான பதார்த்தங்கள் எல்லாம் எதற்காக என்று கேட்டால் என்ன சொல்வது? வயிறு நிரம்ப வேண்டும் என்பது சரி. ஆனால் நாக்கு என்ற ஒன்று இருக்கிறது அல்லவா? அது ருசி பார்க்கிறது.  ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பதார்த்தத்திலே ருசி இருக்கிறது. அந்த ருசியை அனுசரித்து அவரவரும் சாப்பிடுகிறார்கள். அதனால் வெவ்வேறு ருசியுள்ளவற்றைச் சுவைக்கிறார்கள்.  அப்படியே ஒவ்வொருவரும் அவர்களுக்குப் பிடித்த மூர்த்தங்களைக் கொண்டு, தியானம் பண்ணுகிறார்கள். பிரார்த்தனை பண்ணிக்கொள்கிறார்கள். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மூர்த்தியிடத்திலே ருசி இருக்கிறது. அதனால் அநேகவிதமான...

#அபிராமிஅந்தாதிபாடல் - 36

Image
 #அபிராமிஅந்தாதிபாடல் - 36 பழவினை வலிமை குறையும் பொருளே,  பொருள்முடிக்கும் போகமே, அரும்போகம் செய்யும் மருளே  மருளில் வரும் தெருளே,  என் மனத்து போகமே இருளேதும் இன்றி  ஒளிவெளியாகி இருக்கும்  உனது அருள் ஏது அறிகின்றிலேன்,  அம்புயா தனத்து அம்பிகையே. பொருள்: அம்புயா தனம் - குவிந்த ஸ்தனங்கள் அதாவது மார்பகங்கள். அம்புஜம் - தமிழில் அம்புயா அதாவது குவிந்த தாமரை மொடாடை போல் ஒத்த ஸ்தனங்கள். அம்பாளை தாமரை மலரைப் போன்று வர்ணிப்பது மஹான்களின் வழக்கம். உதாரணம் தாமரை பாதகமலம். குவிந்த ஸ்தனங்களை உடைய அம்பிகையே,  நீயே பொருள்,  அதனால் கிடைக்கக்கூடிய போகம்,  பொருளே நீ தான் அந்த பொருள் மீதுள்ள போகம் நீதான். பொன்/மண் போன்ற பொருள் ,அதன் மீது நமக்கு உள்ள மோகம்/போகம். அதற்கு காரணகர்தா அவளே அந்த போகத்தால் உண்டாகக்கூடிய மாயை,  இந்த உலகம் மாயை என்ற அழியக்கூடிய பொருள்.  அது மாயை என்று உணராமல் இருக்கும் தன்மை. இதையே சைவசிந்தாந்தம்  ஆணவம் -ஜீவன் கர்மா/கன்மா- மனித பிறப்பு மாயை-இந்த தேகம் அழியக் கூடியது என உணரத தன்மை. அதனால் இந்த தேகத்தின் மீது பற்று. இந்...

குரு என்பவர் யார்?.

Image
 என்னை கவர்ந்த நண்பரின் பதிவு குரு என்பவர் யார்?. பரமாத்மா ஜீவாத்மா சத்து சித்து ஆனந்தம் என்பவை யாவை என்பதைப் பற்றி குருவின் விளக்கம். பரமாத்மா... ஒரு ஆத்மாவாக, ஒரு தேகத்துக்குள் பிரவேசிக்கும் போது... அந்த ஜீவனுக்கான  'ஜீவ ஆத்மாவாக'...  'சத்து - சித்து -  ஆனந்தம்' என்ற நிலையை அடைகிறது. பரமாத்மா...  இவ்வாறாக, ஒரு ஜீவனுக்கான ஆத்மாவாகும் போது...  பரமாத்ம சொரூபத்தின்,  'சத்து' என்ற 'என்றுமிருக்கும் இருப்பு'... மாறாது நிலை கொள்கிறது. பரமாத்ம சொரூபத்தின் 'ஆனந்தம்' என்ற 'எப்போதுமிருக்கும் ஆனந்தமும்'... மாறாது நிலை கொள்கிறது. ஆனால், 'சித்து' என்ற 'ஜீவனின் நிலைப்பாடுதான்'...  அதன் 'கர்ம வினைகளுக்கு ஏற்ப, மனம் - புத்தி - அகங்காரம் என, ஜீவனுக்கு - ஜீவன்  மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த 'சித்தத்தை', பர்மாத்மாவின் கருணையினாலும், தங்களது பெரு முயற்சிகளாலும், 'தெளிவித்துக்' கொண்டவர்களே.  சித்தர்கள் - ரிஷிகள் -  முனிவர்கள் - யோகிகள் - ஞானிகள் - மகன்னீயர்கள் மற்றும் மகான்கள்'. ஆனால்  இந்த ஜீவனோ... 'என்றும் இ...

மனிதன் எதை நோக்கி பயணிக்க வேண்டும்?.

Image
 மனிதன் எதை நோக்கி பயணிக்க வேண்டும்?. அதற்கு அவன் /அவள் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டியவை  எவை ஒரு மனிதனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது ஆன்மீகம்.  நவீன வாழ்க்கையில் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகும் சூழலில் இன்று பலரும் ஆன்மீகத்தை நோக்கி வர ஆரம்பித்து உள்ளனர். அந்தவகையில் ஆன்மீகத்தில் ஒருவர் ஏற்றமிகு பாதையில் செல்ல கடைபிடிக்க வேண்டிய பரிந்துரைக்கப்படும் பழக்கங்கள் சில: ஆன்மீக சாதனாக்கள் செய்ய உகந்த நேரமாக காலை பிரம்மமுகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4 மணி உகந்த நேரம் என சொல்லப்படுகிறது. குருமார்களின் வழிகாட்டுதலின்படி முறையாக கற்றுக் கொண்ட ஏதோ ஒரு ஆசனம்,  உதாரணமாக பத்மாசனம் சித்தாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து தியானம் செய்வது நல்லது. கிழக்கு நோக்கியவாறு அமர்ந்து தியானம் செய்வது மிகவும் நன்மை தரும்.  தினசரி 20 சுற்று பிராணாயாமா சுவாசத்தை புத்துணர்வாக வைத்திருக்கும். தீட்சை பெற்று இருக்கும் மந்திரங்கள் ஏதும் இருப்பின் அதை பரிந்துரைக்கப்பட்ட முறையில் அல்லது 108 முறை சொல்வது நல்ல பலன்களை அளிக்கும். ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் சாத்வீக உணவை உட்கொள்வது நல்லது....

பாதாரவிந்தம் கர்மா கோயில்

Image
 கடந்த சில தினங்களாக மன்னர்கள் ஏன் கோயிலை கட்டினார்கள்,அதன் அவசியம் என்ன, கர்மா பற்றிய பதிவுகள் மற்றும் அம்பாளின் பாதார விந்தங்களில் சரணாகதி அதாவது அபிராமி அந்தாதிப் பற்றிய விளக்கங்கள் போன்ற பதிவை இட்டு வருகிறேன். இவை மூன்றுக்கும் என்ன தொடர்பு எனும் வினா எழும். அவற்றிற்க்கான தொடர்பு நாம் செய்த கர்மா தான், நாம் எங்கு,எப்போது பிறக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது கர்மா தான் என்கிறது ஹிந்து சனாதனதர்மம். இதை தான் சைவசித்தாந்தமும் ஆணவம்/கன்மம்/மாயை என்கிறது. அவ்வாறு மனிதனாக பிறக்கிறோம் என்றால், அது நமது கெட்ட கர்மாவை கழித்து நல்ல கர்மாவை அடைவதற்கான மார்க்கத்தை வழிவக்குகிறது ஹிந்து சனாதனதர்மம் . அந்த கெட்டகர்மா கழித்து, நல்ல கர்மா அடைவதற்கான ஒரு மார்க்கம் அதுவே கோயிலில் பிரார்த்தனை தான். அந்த மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை அடைவதற்கான ஒரு புண்ணிய பூமி கோயில் ஆகும். கோயில் என்பது ஆன்மா இரண்டர+ இலயிக்கும் இடம்.  ஆதலால் அது #ஆலயம்# ஆனது. அல்லது  #கோ# என்றால் #ஆன்மா# அல்லது #இறைவன்# கோயில் என்பதன் பொருள் "இறைவன் வாழுமிடம்"  அல்லது  "இறைவனின் இல்லம்" ஆகும்.  "கோ" என்ப...