Posts

Showing posts from April, 2025

ஆசார்யாள் காட்டும் அம்பாள் : பகுதி 3

Image
ஆச்சாரியர் பகவத்பாதாள் பார்வையில் அம்பாள். ஆசார்யாள் காட்டும் அம்பாள் :  தெய்வத்தின் குரல் (முதல் பகுதி) பகுதி 3 த்ருசா த்ராகீயஸ்யா’ என்ற சுலோகத்தில். இப்படியே அம்பாளுடைய சரண கமலங்களைத் துதிக்கிறபோது  “வேதங்கள் தங்கள் சிரசுக்கு ஆபரணமாக எந்த உன் பாதங்களைத் தாங்குகின்றனவோ,  அந்தப் பாதங்களை என் சிரஸிலும்கூட வைப்பாய் அம்மா” என்கிறார். இப்படிக் கேட்பது நியாயமில்லையே என்றால், நியாயம் – அநியாயம் என்பவை காரிய – அகாரியங்களை எடை போடுகிறபோதுதான்.  தயை என்பதோ இப்படி குணங்களை எடைபோட்டுப் பார்ப்பதில்லை.  நீயோ தயையே வடிவமானவள். எனவே, அந்த தயையால் என் தலைமீதும்கூட உன் திருவடிகளை வைப்பாய்” என்கிறார் (தயயா தேஹி சரணௌ) வேதத்தின் சிரஸில் அம்பாளின் பாதம் இருக்கிறது என்பதில் ஒர் உள்ளர்த்தம் உண்டு.  உபநிஷத்துக்களுக்கே சுருதி சிரஸ், வேதங்களின் முடி என்கிற பெயர் இருக்கிறது.  முன்பே நான் ஞானாம்பி கையையைப் பற்றிச் சொல்கிற போது  கேநோபநிஷத்தில் அவளுடைய ஆவிர்பாவத்தைப் பற்றி வருகிறது என்று சொல்லி இருக்கிறேன்.  தேவர்கள் அகம்பாவம் அடைந்தபோது,  அதைப் போக்கி அவர்களுக்கு ஞா...

#அபிராமிஅந்தாதிபாடல்-11#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-11# இல்வாழ்க்கை இன்பமாய் அமையும் ஆனந்தமாய்,  என் அறிவாய்,  நிறைந்த அமுதமுமாய், வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும் தான் அந்தமான,  சரணாரவிந்தம் -  தவள நிறக்கானம்  தன் ஆடரங்காம்  எம்பிரான் முடிக் கண்ணியதே  அன்னை அபிராமி அனந்த வடிவினள்.  எனது அறிவாகவும் திகழ்பவள். எங்கும் நிறைந்திருக்கும் அமுதமானவள்.  நிலம்,  நீர் நெருப்பு, காற்று  மற்றும்  ஆகாயம்  எனும் ஐம்பெரும் பூதங்களால் ஆன வடிவுடையவள். நான்கு மறையின் முடிவும் அவளே. அவளே வேதமாதா அப்படிப்பட்ட அன்னையின்  பாதகமலங்கள்,  அம்பாளின் மலர் பாதங்கள். திருவெண்காட்டில் நடனம் புரியும் நடராஜ பெருமானின் தலையின் மேல்  உள்ளது, தவள நிற கானம் -  வெள்ளை நிற காடு  - திருவெண்காடு சிதம்பரத்தில் நடனம் புரியும் முன்பு, பெருமான்,  திருவெண்காட்டில் நடனம் புரிந்ததாக புராணம் கூறுகின்றது. திருவெண்காடு,  ஆதி சிதம்பரம் என்றே அழைக்கப்படுகிறது. அங்குள்ள நடராஜ திருமேனியும் பெருமை வாய்ந்தது. சிவனின் இருப்பிடம் சுடுகாடு என்று கூறுவார்....

ஆச்சாரியர் பகவத்பாதாள் பார்வையில் அம்பாள்

Image
 ஆசார்யாள் காட்டும் அம்பாள் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி) பகுதி -1. நம்முடைய ஆசாரியர்களான  ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் அம்பிகையை ஸ்தோத்திரம் செய்யும் அநேக கிரந்தங்களை அநுக்கிரஹம் பண்ணியிருக்கிறார்கள்.  ஸெளந்தர்ய லஹரியைத் தவிர,  ‘ஆனந்த லஹரி’, ‘ தேவி புஜங்கம்’, ‘ த்ரிபுர ஸுந்தரி மானஸ பூஜா ஸ்தோத்திரம்’,  ‘த்ரிபுர ஸுந்தரி வேத பாத ஸ்தவம்’ –  இந்த மாதிரி பெரிய ஸ்தோத்திரங்களும்  ‘அன்ன பூர்ணாஷ்டகம்’, ‘அம்பாஷ்டகம்’ மாதிரி சின்னச் சின்ன ஸ்தோத்திரங்களும் தேவீபரமாகச் செய்திருக்கிறார்.  இவைகளை நாம் பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தாலே போதும். அம்பாளின் அநுக்கிரஹ வெள்ளத்தில் ஆனந்தமாக மிதந்து கொண்டிருக்கலாம்.  பரம அற்புதமான வாக்கிலே இவை அமைந்து இருக்கின்றன.  ஆனாலும், இவற்றைச் செய்த ஆசார்யாளோ துளிக்கூடக் கர்வப்படாமல், எல்லா சக்திகளுக்கும் ஆதாரமாக, சக்தி சமுத்திரமாக இருக்கப்பட்ட அம்பாளை நிரம்பவும் விநயத்தோடு துதிக்கிறார்கள்.
Image
 தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்) அம்பாள் தத்துவம் கடைசிப் பகுதி -8 ஸெளந்தர்யலஹரி'யில் என்ன வருகிறது? அதில் அம்பாளின் கண்களை அநேக ஸ்லோகங்களில் ஒன்றில் (56) முதலிரண்டு வரிகள்: தவாபர்ணே கர்ணே ஜபநயன பைசுன்ய சகிதா : நிலீயந்தே தோயே நியதம் அநிமேஷா : சபரிகா : அபர்ணே - அபர்ணா என்ற பெயருடைய அம்பிகையே! தவ -  உன்;  கர்ணே - காதில் (காதிடம்) ;  ஜபநயன - பேசுவது போன்ற கண்கள்;  பைசுன்ய சகிதா : - (தங்களைப் பற்றிக்) கோள் சொல்கின்றன என்று பயமடைந்தவையான;  சபரிகா :- பெண் மீன்கள்;  அநிமேஷா :- கண் மூடாதவையாக;  தோயே - ஆற்றுக்குள்; நிலீயந்தே - முழுகி விடுகின்றன (என்பது) , நியதம் - நிச்சயம். மீன் ஏன் எப்போதும் ஆற்றின் மேல் மட்டத்தில் நீந்தாமல் உள்ளுக்குள்ளேயே நீந்திக் கொண்டிருக்கிறது? இதற்கு இங்கே ஆசார்யாள் ஒரு காரணம் கல்பிக்கிறார்.  காதளவோடும் அம்பாளின் கண்களை மீன்கள் பார்த்தன. லோகத்தில் ஒரு புல் பூண்டு புழு பூச்சிகூட விட்டுப் போகாமல் ஜகன்மாதா விழிகளை ஸகல திக்குகளிலும் திருப்பிக் கொண்டிருக்கிறாள்.  அப்போது ஒவ்வொரு சமயம் அவை கண் கோடிக்கு வரும்போது காதைத் தொட்டு...

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்) பகுதி -6

Image
 தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்) பகுதி -6 தெய்வ தத்துவம் ;  தெய்வங்கள் இப்படி இருக்கிறது மீனாக்ஷியின் பெருமை.  மிகவும் உயர்ந்தவர்களாக இருக்கிற குமர குருபரர், நீலகண்ட தீக்ஷிதர் ஆகியவர்களுக்கு மட்டுமில்லாமல்,  'இந்த அம்பாளுக்கு என்ன சக்தி இருக்கிறது?'என்று கேலி பண்ணின ஒரு வெள்ளைக்கார கலெக்டருக்கு* கூடப் பரம கருணையோடு அநுக்ரஹம் பண்ணியிருக்கிறாள். அந்த துரை படுத்துக் கொண்டிருந்த பங்களாவின் மீது இடி விழ இருந்த போது, தூக்கத்திலிருந்தவனை எழுப்பி வெளியேறும்படி எச்சரிக்கைப் பண்ணிக் காப்பாற்றியிருக்கிறாள் அம்பாள். ஸஹஸ்ர நாமத்திலும் ஸெளந்தர்ய லஹரியிலும் ரஹஸ்யமாகச் சொல்லியிருப்பதாலேயே அவளுக்கு விசேஷ மதிப்புக் கொடுத்ததாகிறது. ரொம்பவும் ப்ரியமானவர்கள், ரொம்பவும் மரியாதைப்பட்டவர்கள் ஆகியோரின் பெயரைச் சொல்வதில்லையல்லவா? இப்படித்தான் பாகவத்தில் கூட ராதையின் பெயரைச் சொல்லாமலே ஒரு இடத்தில் மட்டும் ஸ¨சனையாகக் கோடி காட்டியிருக்கிறது என்று சொல்வதுண்டு.  ராதாகிருஷ்ண பக்திக்காரர்கள் கிருஷ்ணனைவிட ராதை ஒரு படி உசத்தி என்பார்கள். கிருஷ்ணனே அவள் காலில் விழுந்து பிரணய கலஹத்தை (ஊடலை) த் த...

அம்பாள் தத்துவம் என்பது,

Image
அம்பாள் தத்துவம் என்பது, பல விஷயங்களை ஒன்றினைந்தது,அவை இந்து மதத்தில் தேவி அல்லது அம்பிகை என்று அழைக்கப்படும். இறைவனுடைய சக்தி, தத்துவம், மற்றும் குணங்களை விளக்கும் ஒரு தத்துவக் கோட்பாடு ஆகும்.  இது,அம்பாளைப் பற்றிய ஆன்மீகப் பார்வையை அளித்து, அவளின் குணங்கள், சக்திகள் மற்றும் வழிபாட்டு முறைகளை விளக்குகிறது.  அம்பாள் தத்துவம், தேவியின் பிரபஞ்ச சக்தியையும், அவளின் அனைத்துப் பரிமாணங்களையும் விளக்குகிறது. அம்பாள் தத்துவம், அம்பாளைப் பற்றிய பல அரிய உண்மைகளையும், ரகசியங்களையும் வெளிப்படுத் துகிறது.  அம்பாளைப் பற்றிய தத்துவத்தை விளக்கும் சில முக்கிய விஷயங்கள்: 01.பிரபஞ்ச சக்தி: அம்பாள், பிரபஞ்சத்தின் சக்தியாகக் கருதப்படுகிறாள். அவள் பிரபஞ்சம் முழுவதையும் ஆளுகிறாள், உருவாக்குகிறாள், பாதுகாப்பவள் மற்றும் அழிப்பவள். 02.சக்தி உருவம்: அம்பாள், இறைவனுடைய சக்தியின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறாள். அவளின் வெவ்வேறு உருவங்கள், அவளுடைய பல்வேறு சக்திகளையும், குணங்களையும் வெளிப்படுத்துகின்றன. 03.வழிபாட்டு முறைகள்: அம்பாளைப் போற்றி, வணங்குவதற்கு பல வழிபாட்டு முறைகள் உள்ளன.  அவற்றில், ஸ்ரீ ...

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்).பகுதி -4

Image
 தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்) பகுதி -4 தெய்வ தத்துவம் ;  தெய்வங்கள் தீக்ஷிதர் ஏதோ கொஞ்சம் தீர்க்கமாக யோசனை பண்ணி னார்.  அப்புறம் "அப்பா அழாதே! நீ பண்ணின சிலை தத்ரூபமாக இருக்க வேண்டுமென்றுதான் இம்மாதிரி சில்லு தெறித்துப் போகும்படி அம்பாள் பண்ணியி ருக்கிறாள்.  அதனால் அது இருக்கிறபடியே இருக்கட்டும். அப்படியே மண்டபத்தில் வைத்துவிடலாம்"என்று சொல்லி விட்டார். ராணிக்கு அந்த இடத்தில் மச்சம் இருந்திருக்கிறது. தீக்ஷிதருக்கு இது ஸ்புரித்ததால்தான், flash ஆனதால் தான் அப்படிச் சொன்னார். ஸாமுத்ரிகா லக்ஷணப்படி உத்தம ஸ்திரீகளுக்கு இம்மாதிரி மச்சம் இருக்கவேண்டும் என்பதன் படியே ராணிக்கும் இருப்பதைத் தெரிந்து கொண்டார். ஆசாரியும் அதேபோலச் சிலையை மண்டபத்தில் வைத்துவிட்டார். இப்போதும் ஏழு பத்தினிகளோடு இருக்கிற திருமலை நாயகர் சிலையில் பட்ட மஹிஷியின் சிற்பத்தில் இந்த பின்னம் இருக்கிறது. வேலைகளை மேற்பார்வையிட நாயகர் வந்தார். ராணியின் சிலையைப் பார்த்துவிட்டு ஆசாரியிடம்,  "ஏன் இந்த மூளியைச் சரி பண்ணாமலே வைத்திருக்கிறீர்?" என்று கேட்டார். "அந்த இடத்தில் அம்மாதிரி இருப்பதுதான் சரியென்...

அபிராமி அந்தாதியும் ஆச்சாரியரின் தெய்வத்தின் குரலும்

Image
 அபிராமி அந்தாதியும் ஆச்சாரியரின் தெய்வத்தின் குரலும் கடந்த சில தினங்களாக அபிராமி அந்தாதி மற்றும் அம்பாள் தத்துவம் பற்றிய பதிவுகளை காண்கிறோம். அதில் ஓவ்வொரு பாடலிலும் அம்பாளின் பாதாரவிந்தில் சரணடைவதை குறிப்பிடுகிறார் பட்டர். அதற்கு காரணம் எந்த இக்கட்டான நிலையிலும் அம்பாளை சரணடைந்தால் அவள் நம்மை காப்பாற்றுவாள் என்பதை பரிபூர்ணமாக நம்பிக்கிறார் பட்டர். காரணம் இந்த சம்சாரசாஹரத்தில் பாசத்தில் சுற்றி திரியும் இந்த ஆவி தயிர்கடையும் மத்தில் சூழுலும் இந்த ஆவி அதாவது சம்சாரசார பந்ததில் சூழலுகிறது. அதிலிருந்து கரையேறுவதற்கு அம்பாளின் பாதாரவிந்ததில் சரணடைவது மிகவும் முக்யம் என்கிறார். ஆச்சாரியரின் தெய்வத்தின் குரலை முன்பு படித்த போது புரியாத விஷயம். லலிதாசஹஸ்ர நாமம்,சௌந்தயலஹரி மற்றும் அபிராமி அந்தாதியை கற்க கற்க தற்போது தெய்வத்தின் குரலை ஒரளவு புரிந்துக்கொள்ளும் ஞானம் வந்துள்ளது என்பதை உணர முடிகிறது. ஆதனால் இடை இடையே ஆச்சாரியரின் தெய்வத்தின் குரலில் கூறிய பாகங்களை பதிவிட்டு வருகிறேன். அதில் ஆச்சாரியர் பல நுட்பமான விஷயங்களை தனக்கே உரிய பாணியில் பல உதாரங்களுடன் விளக்கியுள்ளார். அதைத் தொடர்ச்சியை...

#அபிராமிஅந்தாதிபாடல்7#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்7# #பெரும்துன்பம்யாவும்நீங்கும்# ததியுறும் மத்திற் சுழலும் என்ஆவி  தளர்விலதோர் கதியுறு வண்ணம்  கருதுகண்டாய்   கம லாலயனும் மதியுறு வேணி  மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும் துதியுறு சேவடி யாய் சிந்துரானன சுந்தரியே. பொருள்: கமலாலயன் - தாமரையில்  உதித்தவன் - பிரம்மன் மதியுறு வேணி மகிழ்நன் - மதி - சந்திரன் (பிறை சந்திரன்).  வேணி - வீணை உடையவள்.  பிறை சந்திரனை அணிந்தவள் - சரஸ்வதி. பிரம்மனை கமலாலயன், மதியுறு வேணி மகிழ்நன் என்று பட்டர் கூறுகிறார். மால் - விஷ்ணு அதாவது, பிரம்மனும், விஷ்ணுவும் வணங்கி, என்றும் துதிக்கும் சிவந்த பாதங்களை உடையவளே, சிந்தூர திலகம் நெற்றியில் அணிந்த அழகியே, அபிராமியே, (ததி - தயிர்) - தயிரை கடையும் மத்து போல, இவ்வுலகில் பிறப்பு - இறப்பு என்று என் ஆவி சுழலாமல் முக்திக்கு வழி வகுப்பாய். சௌந்தர்ய லஹரியில் ஆச்சர்யாள் தேவியின் பாத தூளியின் மகிமையை அவித்யனாம் என தொடங்கும் 3 வது ஸ்லோகத்தில், "ஜன்ம ஜலதௌ நிமக்னானம் தம்ஷ்ட்ரா முரரிபு வராஹஸ்ய பவதி"  என்று கூறியுள்ளார். அதாவது, சம்சாரம் என்னும் கடலில் மூழ்கியவனுக்...

தெய்வ தத்துவம் ; பகுதி 1

Image
 தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்) பகுதி - 1 தெய்வ தத்துவம் ;  தெய்வங்கள் #மீனாக்ஷி# அம்பாள் ஸ்தோத்திரங்கள் என்று சொன்னால் உடனே இரண்டு நினைவுக்கு வருகின்றன.  ஒன்று #லலிதாஸஹஸ்ரநாமம்# மற்றது #ஸெளந்தர்யலஹரி# அம்பாள் ரூபங்களில் பிரஸித்தமாகக் காஞ்சி காமாக்ஷி,  மதுரை மீனாக்ஷி ,  காசி விசாலாக்ஷி  என்ற மூன்றைச் சொல்கிறோம். #காமாக்ஷி# #காமதாயினீ # என்று ஸஹஸ்ர நாமத்தில் வருகிறது. ஸெளந்தர்யலஹரியில்காமாக்ஷியின் பெயர் வராவிட்டாலும், அதில் த்யான ஸ்லோகம் மாதிரி அம்பாளை வர்ணிக்கிற  #அபிராமிஅந்தாதி #க்வணத்காஞ்சீதாமா#என்ற ஸ்லோகத்தில் காமாக்ஷியின் ஸ்வரூபத்தைத்தான் - தநுர், பாண, பாச, அங்குசங்களுடன் சதுர் புஜையாகக் காமாக்ஷி எப்படியிருக்கிறாளோ  அப்படிப்பட்ட ஸ்வரூபத்தைத்தான் - சொல்லியிருக்கிறது.  பேர் சொல்லாவிட்டாலும் சிலேடையாக ஊரைச் சொன்ன மாதிரி, 'காஞ்சீ தாமா'என்று வருகிறது. 'காஞ்சீ தாமா'என்றால் ஒட்டியாணப் பட்டை என்று அர்த்தமானாலும் காஞ்சீபுரத்தின் நினைவும் வருகிறது. மீனாக்ஷியின் பெயர் ஸஹஸ்ர நாமத்தில் வருகிறதா என்று பார்த்தால் வரவில்லை.  'ஸெளந்தர்ய லஹரி'யில்...

கலியுகத்தில் ப்ரத்யக்ஷம் அம்பாள் லீலை களும் அனுக்ரஹமும் !

Image
 கலியுகத்தில் ப்ரத்யக்ஷம் அம்பாள் லீலை களும் அனுக்ரஹமும் !   இந்த நிகழ்ச்சி சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் திருச்சி பெல் குடியிருப்பில் நடந்தது !  ஒரு வைஷ்ணவ தம்பதினருக்கு அன்னை சமயபுரத்தாள் எப்படி லீலைகள் புரிந்தாள் என்பது மிக ஆச்சரியமான நிகழ்ச்சி!   கடவுளைத் தூற்றும் கும்பல்களுக்கு ஓர் பாடம் புகட்டும் நிதர்சனம் இது ! தெய்வம் எப்போதும் நம்மை வழி நடத்தி வருவதன் அத்தாக்ஷி என்றால் மிகையில்லை! இந்த வைஷ்ணவ ஸ்த்ரீ பகலில் வேலை எல்லாம் முடித்து தரையில் படுத்து உறங்கும் பழக்கம் உடையவர். அந்த நேரத்தில் யாரோ பேசுவது போல் நித்தம் உணர்ந்தார்.  நான் இங்கு இருக்கிறேன் என்னைக் கவனித்து உணவு கொடுக்க மாட்டாயா என்பது கேட்பது நிதம் வாடிக்கையான நிகழ்ச்சி!  ஒன்றும் புரியவில்லை அவர்களுக்கு.  அந்த சமயம் அவர்கள் மூத்த சகோதரி சென்னையிலிருந்து  பேருந்தில் திருச்சி நோக்கிப்பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.  அப்போது அவர்கள் அருகாமையில் யாரோ உட்காரும் உணர்வு ஏற்பட்டது. காதில் நாளை என்னை தர்சனம் செய்ய சமயபுரம் வா, உன் தங்கையையும் உடன் அழைத்துக் கொண்டு.  அங்கு நண...

ஓம் மஹா சதுஷ்ஷஷ்டிகோடி

Image
 அம்பாளின் ஶ்ரீ சக்ரம் அதில் உள்ள ஓவ்வொரு நவாவரணத்தில் உள்ள யோகினி தேவதைகள்ப் பற்றிய பதிவு ஸ்ரீ மாதாவின் பரிவாரதேவதைகள் : ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அம்பாளை ஓம் மஹா சதுஷ்ஷஷ்டிகோடி யோகினிகண ஸேவிதாயை நம: என்று போற்றுகிறது மகா என்றால் ஒன்பது என்றும் மகா என்றால் எண்ணிலடங்கா என்றும் பொருள். சதுஷ்ஷஷ்டி கோடி என்றால் அறுபத்துநான்கு கோடி ஆகும் அதை ஒன்பதால் பெருக்க 576 கோடி வரும் அப்பேற்பட்ட 576 கோடி யோகினி சக்திகளை தன் பரிவார தேவதைகளாக கொண்டுள்ளவள் ஆவாள் அத்தகைய எண்ணிலடங்கா தேவிகளின் பிரதிநிதிகளாக விளங்கும்125 சக்திகள் ஸ்ரீசக்ரத்தில் பிறந்து அதன் மத்தியில் வீற்றிருக்கும் ஸ்ரீ லலிதா மஹாதிரிபுரசுந்தரியை சுற்றி வீற்றிருக்கின்றனர் அவர்களின் நாமாக்கள் பின்வருமாறு: முதலாவது ஆவரணம் யோகினி ப்ரகட யோகினி இரண்டாவது ஆவரணம் யோகினி குப்தயோகினி மூன்றாவது ஆவரணம் யோகினி குப்ததரயோகினி நான்காவது ஆவரணம் யோகினி ஸம்ப்ரதாய யோகினி ஐந்தாவது ஆவரணம் யோகினி குலோத்தீர்ண யோகினி ஆறாவது ஆவரணம் யோகினி நிகர்பயோகினி ஏழாவது ஆவரணம் யோகினி ரஹஸ்யயோகினி எட்டாவது ஆவரணம் யோகினி அதிரஹஸ்யயோகினி ஒம்பதாவது ஆவரணம் யோகினி பராபர ரஹஸ்ய யோக...

அம்பாளின் இருப்பிடம் :முதல் பகுதி)பகுதி -2.

Image
 அம்பாளின் இருப்பிடம் :  தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)பகுதி -2. பூரண சந்திரனைத் தியானிக்கிற போதே மனசும் அது போல் குளிர்ந்து போகிறது.  அங்கே துக்கத்துக்கும் துவேஷத்துக்கும் இடமில்லாமல் சாந்தமாகிறது. வெளிப் பிரபஞ்சமெல்லாம் ஜீவனுக்குள்ளே இருக்கிறது. அண்டத்திலுள்ளதெல்லாம் பிண்டத்திலும் உண்டு என்பார்கள். சகல ஜீவராசிகளுக்கும் அந்தராத்மாவாக இருக்கிற #பராசக்தியின்# #மனஸே# சந்திரனாக ஆகியிருக்கிறது.  ‘புருஷ ஸூக்த’த்தில் இப்படித்தான் சொல்லியிருக்கிறது.  இதனால் ஜீவராசிகளின் மனத்துக்கும் சந்திரனுக்கும் சம்பந்தம் இருக்கிறது.  இங்கிலீஷில் சித்தப் பிரமை பிடித்தவர்களை #lunatic# என்கிறார்கள்.  #Lunar# என்றாலே சந்திரனைப் பற்றியது என்றுதான் அர்த்தம்.  இது சித்தத்தின் விபரீத நிலையைச் சந்திரனோடு சேர்த்துச் சொல்கிறது. சித்த சுத்திக்கு அதே சந்திர மண்டலத்தில் அம்பாள் தியானத்தை நம் சாஸ்திரங்கள் சொல்கின்றன. சந்திரனில் அம்பாள் அமர்ந்து இருப்பதாகச் தியானிக்க வேண்டும். தியானம் செய்கிறவனுக்கோ புலித்தோலை ஆசனமாக விதித்திருக்கிறது.  சந்திரனுக்கு நேர் எதிராக புலி என்றால் உக்...

ஸ்ரீ சக்ரம் அமைந்த திருத்தலங்கள் ஒரு பார்வை

Image
வசந்த நவராத்திரி முன்னிட்டு (30.3.2025 முதல் 7.4.2025 வரை) ஸ்ரீ சக்ரம் அமைந்த திருத்தலங்கள் ஒரு பார்வை ***************************************** -------------------------------------------------------------------- *காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்ரத்திற்கே அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன.  லலிதா ஸஹஸ்ரநாமத்தை இயற்றிய வசின்யாதி வாக்தேவதைகள் எண்மரும் இதில் எழுந்தருளியுள்ளனர். *பூந்தமல்லிக்கு அருகே மாங்காட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேருவுக்கு புனுகு, சந்தனம் சாத்தப்படுகிறது. *கும்பகோணம் – மயிலாடுதுறை பாதையில் உள்ள பாஸ்கரராஜபுரம் ஆனந்தவல்லி அம்மன் முன் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. *திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரி தேவியின் ஒரு காதில் ஸ்ரீ சக்ர தாடங்கத்தையும், ஒரு காதில் சிவசக்ர தாடங்கத்தையும் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். *கொல்லூர் மூகாம்பிகையின் மகிமைக்கு காரணம் தேவியின் முன் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ சக்ரமே. *சென்னை காளிகாம்பாள் ஆலய மேருவில் அந்தந்த மாத்ருகா அட்சரங்கள் அந்தந்த ஸ்தானத்தில் செதுக்கப்பட்டுள்ள...

அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன்? :

Image
 பரமச்சார்யாளின் தெய்வத்தின் குரல் அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன்? : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி) பகுதி-3. மூன்றாவதாக இன்னொரு திருஷ்டாந்தம். “சமுத்திரத்துக்கு அதன் தீர்த்தத்தையே எடுத்து ஸ்நானம் செய்விக்கிற மாதிரி,  உன்னை இந்த ஸ்துதியால் புகழ்கிறேன்” என்கிறார். ராமேசுவரத்திற்குப் போனால் சேதுவில் சமுத்திர பூஜை செய்வார்கள்.  அப்போது பூஜா அங்கமாக சமுத்திரத்திற்கு அபிஷேகம் பண்ணுவார்கள் –  அந்தப் பெரிய சமுத்திரத்திலிருந்தே துளிபோல எடுத்து,  அதற்கே ஸ்நானம் செய்வார்கள்.  வாக் சமுத்திரமாக இருக்கிற அம்பிகைக்கு அதிலிருந்தே கொஞ்சத்தை எடுத்து,  துதி செய்வதாக ஆசார்யாள் சொல்கிறார்.  அந்த ஜலம் பூஜை செய்கிறவருக்கா சொந்தம்?  சமுத்திரத்துக்கே சொந்தமானதை எடுத்து அதற்கே மீண்டும் தருகிறாராம்! அவள் கொடுத்த வாக்காலேயே அவளைத் துதிக்கிறோமே ஒழிய, இதில் தாமாகச் செய்தது எதுவுமே இல்லை என்று #அடக்கத்து#டன் சாக்ஷாத் ஈசுவராவதாரமான ஆசார்யாள் சொல்கிறார். ‘சந்திரன் இல்லாவிடில் எப்படி சந்திர காந்தக் கல் ஜலம் வடிக்காதோ அப்படி அவளருளின்றி இந்த வாக்கில்லை.  பெரிய சமுத்திரத்தி...