Posts

Showing posts from October, 2025

#அபிராமிஅந்தாதிபாடல்60 :

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்60 : பாலினும் சொல் இனியாய்!  பனி மா மலர்ப் பாதம் வைக்க மாலினும், தேவர் வணங்க நின்றோன்  கொன்றை வார் சடையின் மேலினும்,  கீழ்னின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒருநாலினும்,  சால நன்றோ அடியேனுடை  நாய்த் தலையே? என்னை தண்டித்து விடாதே அம்மா என்று முந்திய பாடலில் சொன்ன அபிராமி பட்டர்,  இந்தப் பாடலிலே,  அபிராமி அன்னையின் அருளைப் பற்றிப் பேசுகிறார். உன்னை நெஞ்சில் நினைக்க இயலாத என்னை நீ தண்டிப்பது முறையா?  என்று சென்ற பாடலில் கேட்ட பட்டரின், தலையிலே தனது  பத்மபாதங்களை வைத்து அந்த அபிராமி அன்னை அற்புதம்  அல்லவா நிகழ்த்தி விட்டாள்! நான் உன் குழந்தை,  தனது குழந்தையை எந்தத் தாயாவது தண்டிப்பாளா? என்று முந்திய பாடலிலே கேட்ட பட்டருக்கு தனது பாத கமலங்களையே அல்லவா அளித்து விட்டாள் அந்தத் தாய்!  அந்த அருளை நினத்து நினைத்து உருகிப் பாடுகிறார் பட்டர். அம்மா! நீ என் தலையிலே உனது பாதங்களைப் பதித்து விட்டாய். இந்தப் பாத கமலங்களது தரிசனமாவது கிடைக்காதா என ஏங்குவோர் பலருண்டு. "அம்மா! பாலை விட இனிய சொல் அல்லவா உனது சொல்!...

#அபிராமிஅந்தாதிபாடல்59

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்59 பலன்: குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்கள் வளரும் தஞ்சம் பிறிது  இல்லை ஈது  அல்லது,  என்று உன் தவனெறிக்கே நெஞ்சம் பயில நினைகின்றிலேன்;  ஒற்றை நீள்சிலையும் அஞ்சம்பும் இக்கலராகி நின்றாய்:  அறியார் எனினும் பஞ்சு அஞ்சு  மெல் அடியார்,  அடியார் பெற்ற  பாலரையே  அபிராமி அன்னையின் தாளன்றி வேறொரு தஞ்சம் இல்லை என்று தெரிந்தும்கூட,  அந்த சரணங்களிலே மனம் பயில மறுக்கின்றதே -  இந்த மனதை நான் என்ன செய்வது அம்மா? என்று கேட்டு  இந்தப் பாடலைத் தொடங்குகிறார் அபிராமி பட்டர். அந்த அபிராமியானவள் கைகளிலே கரும்பு வில் வைத்துக் கொண்டு இருக்கிறாள்.  ஐந்து மலர்களால் ஆனபாணரங்களையும் கொண்டிருக்கிறாள்.  காமத்தாலும்,  கோபத்தாலும்,  க்ரோதத்தாலும்  அலைபாயும்  மனதை அடக்க,  அவளது திருவடிகளை நினைப்பது அன்றி வேறொரு உபாயம் எதுவும் இல்லை.  ஆனாலும், இந்த மனது அந்த தவ சரணங்களை நினைக்காமல் மற்ற எல்லாவற்றையும் நினைக்கின்றது. அந்த அபிராமியின் மேல் உள்ள தவம் உறுதியானதாக இருந்தால்,  மனமும்,...

#அபிராமிஅந்தாதிபாடல்58

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்58 அருணாம்புயத்தும்  என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும் தருணாம்  புயமுலைத்தையல்  நல்லாள் தகை சேர்  நயனக் கருணாம்புயமும் வதனாம்புயமும்  கராம்புயமும் சரணாம்புயமும்  அல்லால்  கண்டிலேன்  ஒரு தஞ்சமுமே அம்பாளை ஒரு தாமரை மலராக வர்ணிக்கிறார். அன்னை அபிராமியைத் தாமரை மலரிலேயே வைத்துப் பின்னர், தாமரை மலராகவே பார்த்து,  அழகு பார்க்கிறார், பட்டர். அன்னை செந்தாமரை மலரிலே வீற்றிருக்கிறாள்.  அந்த செந்தாமரை மலர்,  சூரியனை ஒத்து இருக்கிறது.  அதைப் பார்க்கும்போது,  சூரியனே ஒரு செந்தாமரை மலராக வந்தது போல இருக்கிறது.  அந்த அருணனால்,  சூரியனால் செயப்பட்ட தாமரை மலரின் மீது வீற்றிருக்கும் அந்த அன்னை,  எனது மனத் தாமரையிலும் அமர்ந்து இருக்கிறாள். அந்த அன்னையின் இரு ஸ்தனங்களும் கூட,  குவிந்த இரு தாமரை மலர்கள் போலக் காட்சி தருகின்றன. அந்த மாதர்களில் சிறந்த பெண்மணியான என் அன்னையின் கண்களும் கருணை பொழிந்து கொண்டு,அழகிய இரு தாமரை மலரக்ளையே ஒத்து இருக்கின்றன.  அவளது முகமும்,  அரவிந்த மலரின...

அபிராமிஅந்தாதிபாடல்57

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்57 ஐயன் அளந்த படி  இரு நாழி கொண்டு  அண்டம் எல்லாம் உய்ய அறம் செயும்  உன்னையும் போற்றி  ஒருவர் தம் பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு  சென்று பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய்  இதுவோ உந்தன் மெய்யருளே. ஏ, அபிராமி!  எந்தத் தமிழ்ப் பாமாலையால் உன்னைப் பாடினேனோ,  அதே தமிழ்ப் பாமாலையால், மனிதர்களைப் பற்றிப் பாடவும், அவர்களிடம் பொய்யும் மெய்யும் பேசவும் வைத்துவிட்டாயே அன்று அங்கலாய்த்துக் கொள்ளுகிறார். இங்கும், நிறைய உள்ளர்த்தம் பொதிந்து காணப்படுகின்றது. அமாவாசை அன்று, 'இன்று பௌர்ணமி' என்று சொன்னது பொய் வாக்குதானே.  ஆனாலும், அந்தப் பொய் வாக்கும், அன்னையின் கடைக்கண் பட்டுவிட்டால், மெய் வாக்காகிவிடாதா என்ன?  இந்தப் பொருள் படும்படி, 'பொய்யும், மெய்யும் இயம்ப வைத்தாய்' என்று பாடலிலே வந்தது. உன்னைப் பாடிய வாயினால், சாதாரண மனிதர்களிடம் பேச வைத்து விட்டாயே,  அவர்களைப் பற்றிய இருப்பதையும், சில இல்லாததையும் ப்ற்றியெல்லாம் பாடும்படி,  அப்படிப் பாடுவதனால் அவர்கள் கொடுக்கும் பொருளைக்கொண்டு வாழும்படி வைத...

மஹேஷ்வரமஹாகல்பமஹாதாண்டவசக்ஷிணியில்

Image
 #மஹேஷ்வரமஹாகல்பமஹாதாண்டவசக்ஷிணியில் # நேற்று பட்டரின் 56வது பாடலின் சற்று விரிவான பதிவு  ஶ்ரீலலிதா சஹஸ்ர நாமம் மற்றும் சௌந்தயலஹரி ஸ்லோகம் 26லிருந்து மஹா-பிரளய-சக்ஷிணி  மகா-महा-प्रलय-सक्षिणी (571) மஹா-பிரளயம் என்பது நாமம் 232  #மஹேஷ்வர-மஹாகல்ப-மஹா-தாண்டவ-சக்ஷிணியில்# விவாதிக்கப்பட்ட முழுமையான கலைப்பு ஆகும்.  அழிவு வெளிப்படும்போது, ​​ முழு பிரபஞ்சமும் சிவனில் கரைந்துவிடும். இது படைப்பின் தலைகீழ் செயல்பாட்டில் சரியாக நிகழ்கிறது. படைப்பின் போது ஆகாஷம் பிரம்மனில் இருந்து பிறந்தார்,  காற்று ஆகாஷத்தில் இருந்து பிறந்தது,  முதலியன.  அழிவின் போது, ​​காற்று ஆகாஷித்திலும்  ஆகாஷம் சிவத்திலும் கரைந்துவிடும். இந்த செயல்முறை பரிணாம வளர்ச்சிக்கு மாறாக ஊடுருவல் என்று அழைக்கப்படுகிறது, இது படைப்பின் போது நடக்கும் ஒரு செயல்முறையாகும். இந்த நாமம், அவள் மட்டுமே அந்த மகா பிரளயத்திற்கு சாட்சி என்று கூறுகிறது.  இவ்வளவு பெரிய பிரளயம் சிவனின் கட்டளைப்படி வெளிப்படுகிறது.  அவர் அழிவின் போது தனது புகழ்பெற்ற அண்ட நடனத்தைத் தொடங்குகிறார்.  #பேரண்டம்(#மேக்ரோக...

அம்பாளின் பாதாரவிந்த்தில் சரணாகதி?

Image
எவ்வாறு அம்பாளின் பாதாரவிந்த்தில் சரணாகதி? எனது நண்பர் திரு.இராஜராஜம் அவரது கூற்று தான் எனது சிந்தனையில் உதிக்கின்றது. அவர் கூறியது பகவான் நமது வாழ்க்கையை சிறு சிறு வட்டங்களாகி ஒரு வட்டத்தில் நம்மை விட்டு சில பல சிக்கல்களைக் கொடுத்து அதிலிருந்து மீள்கிறோமா என பார்பார். அதிலிருந்து மீண்டு வந்தாள். நம்மை அடுத்த வட்டத்தில் எடுத்துச் செல்வார் தற்போது எனது அனுபவத்திலிருந்து புலப்படுகிறது. அவ்வாறாகவே என்னை ஒவ்வொரு வட்டத்தில் இட்டு அடுத்த வட்டத்துக்கு எடுத்துச்செல்கிறாள். அவ்வாறான அடுத்த வட்டம் இந்த பதிவு. இந்த காலகட்டம் சுமார் 2021 எனது மாமியாரின் மரணம்.  அவர்கள் கிட்டத்தட்ட 50வருட காலம் சௌந்தயலஹரி லோகம் பாரயணம் செய்தவர்கள் அவர்கள் கூட எனது மனைவி மற்றும் இரு சகோதரிகளும் பாராயணம் செய்து வந்தனர். எனது மாமியார் மரணம் செவ்வாய் கிழமை அன்று  இராகு காலத்தில் அதாவது 3 to 4.30மணிவாக்கில் எனது மனைவியை விட்டு அம்பாளுக்கு விளக்கு ஏற்றச் சொல்லி மற்றும் எனது மனைவி கையால் குங்குமத்தை வாங்கி இட்டுக் கொண்ட பிறகு அவர்களது மரணம் சம்பாவித்து. அதன் பிறகு அவர்கள் பூஜை செய்த அனைத்து அம்பாகளையும் இன்று நான...

#அபிராமிஅந்தாதிபாடல்55

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்55 மின்னாயிரம் ஒரு மெய் வடிவு  ஆகி விளங்குகின்றது அன்னாள் அகம் மகிழ்  ஆனந்தவல்லி  அருமறைக்கு முன்னாய் நடு  எங்குமாய் முடிவாய  முதல்வி தன்னை உன்னாது ஒழியினும்  உன்னினும் வேண்டுவது  ஒன்றில்லையே அபிராமி தாயே!  நீ ஆயிரம் மின்னல்கள் சேர்ந்தாற் போன்ற வடிவுடையவள்!  தன்னுடைய அடியவர்களுக்கு அகமகிழ்ச்சி தரக்கூடிய ஆனந்த வல்லி!  அருமையான வேதத்திற்கு தொடக்கமாகவும் நடுவாகவும், முடிவாகவும் விளங்கும் முதற் பொருளானவள்!  உன்னை மானிடர் நினையாது விட்டாலும்,  நினைத்திருந்தாலும், அதனால் உனக்கு ஆகக்கூடிய பொருள் ஒன்றும் இல்லையே! மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது அன்னாள் -  ஆயிரம் மின்னல்கள் ஒரே நேரத்தில் உண்மை வடிவாகி விளங்குவதைப் போல் ஒளியுடையத் திருமேனி கொண்டவளை அகம் மகிழ் ஆனந்தவல்லி -  என்றும் உள்ளத்தில் மகிழ்ச்சியே கொண்டிருக்கும் ஆனந்த வடிவானவளை அருமறைக்கு முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி தன்னை -  எல்லா வேதங்களுக்கும் தொடக்கமாகவும் நடுவாகவும் முடிவாகவும் மற்ற எந்த நிலையாகவும் நிற்கின்ற முத...

லலிதா சகஸ்ரநாமம்

Image
 லலிதா சகஸ்ரநாமம் கூறும் பொழுது நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் லலிதா சகஸ்ரநாமத்தில் என்ன விசேஷம் என்றால், ஒருமுறை கூப்பட்ட நாமம் மற்றொருமுறை உபயோகப்படுத்தப் பட்டிருக்காது.  ஶ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில் மட்டும் தான் தேவி ஸ்வரூபம், தோன்றிய வரலாறு, அவளை வழிபட யந்திரம், மந்திர பரிவார தேவதைகளின் நிலை, வழிபாட்டு முறை, அவள் அருளால் பெறக்கூடிய மேன்மைகள் ஆகியவைகளை வாக்தேவதைகளே கூறுவதால், வேதத்திற்குச் சமமாகக் கூறப்படுகிறது. “ஸ்ரீ மாதா” என்று அழைக்கப்படும் ஸ்ரீ லலிதையானவள்,  எப்படித் தோன்றினாள்? அசுரர்களின் இடையூறுகளையும்,  இன்னல்களையும் தாங்கமுடியாமல்,  தேவர்கள், யாகம் வளர்த்து, அம்பாளைவேண்டி நின்றனர்.  அவளை வரவழைக்க,  தங்களின் தேகத்தையே யாகத்தில் அர்ப்பணிக்கத் தயாரானார்கள். அப்பொழுது ஞானமாகிய குண்டத்திலிருந்து ஆதி சக்தியானவள் தோன்றினாள். சக்திகளுக்குள் ஸ்ரீ லலிதா போல் வேறெந்த சக்தியும் இல்லை என்று கூறுவார்கள்.  ஸ்ரீவித்யையைப்போல்,   நகரங்களில் ஸ்ரீ புரம் போல்,  ஸ்ரீ வித்யை உபாசகர்களில் ஸ்ரீ சிவனைப்போல், சகஸ்நாமங்களில் லலிதா சகஸ்ரநாமம் போல் என...

#அபிராமிஅந்தாதிபாடல்54#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்54# இல்லாமை சொல்லி  ஒருவர் தம்பால்  சென்று இழிவுபட்டு நில்லாமை நினைகுவிரேல்  நித்தம் நீடு தவம கல்லாமை  கற்ற கயவர் தம்பால்  ஒரு காலத்தும் செல்லாமை வைத்த  திரிபுரை  பாதங்கள் சேர்மின்களே ஏ, வறிஞர்களே!  நீங்கள் வறுமையால் பாதிக்கப்பட்டு, ஒருவரிடத்திலே பொருளுக்காகச் சென்று,  அவர்கள் உங்களை இழிவு படுத்தாமல் இருக்க வேண்டுமா? என் பின்னே வாருங்கள்.  முப்புர நாயகியின் பாதங்களையே சேருங்கள்.  தவத்தையே செய்யாத பழக்கமுடைய கயவர்களிடத்திலிருந்து என்னைத் தடுத்தாட் கொண்டவள் அவளே! இல்லாமை சொல்லி -  வறுமையைச் சொல்லிக் கொண்டு ஒருவர் தம்பால் சென்று -  முன்பின் தெரியாத ஒருவரிடம் (தெரிந்திருந்தாலும் உதவி கேட்க வருவதால் தெரியாதவர் போல் நடந்து கொள்ளும் ஒருவரிடம்) சென்று உதவி கேட்டு இழிவுபட்டு -  அவரால் அவமானப்படுத்தப்பட்டு நில்லாமை நினைகுவிரேல் -  நிற்கும் நிலையை அடையாமல் இருக்க நினைப்பீர்களானால் நித்தம் நீடு தவம் -  எப்போதும் பெருமை மிக்க தவத்தை கல்லாமை கற்ற கயவர் தம்பால் - செய்யாமல் இருப்பது எப்படி என்று நன...

செங்கனூர் பகவதி கோவில்-1

Image
முந்தைய நாள் பதிவில் குறிப்பிட்டது போல் செங்கனூர் பகவதி கோவில் பற்றிய பதிவு. செங்கன்னூர்  பகவதி கோவில் பற்றி சுவையான கதைகள் தொடர்ச்சி கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற  108 கோவில்கள்- கதை  ஸ்ரீ ஆயில்யம் திருநாள் மகாராஜாவின் (1860-1880) காலத்தில் அவரிடம்  சூரிய நாராயணன் என்பவர் பணியில் இருந்தார். அவர் காலத்தில்தான் திருவங்கூர் ஒரு முன்னுதாரண ராஜ்யமாக மாறியது மன்னருக்கும் சூரிய நாராயணனுக்கும் இடையே மனத்தாங்கல் ஏற்படவே ,  அவரும் கம்பன் போல கோபித்துக்கொண்டு ‘உண்டோ குரங்கேற்றுக்கொள்ளாத கொம்பு?’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். கற்றவருக்கு சென்றவிடம் எல்லாம் சிறப்பு அல்லவா !  திருவல்லாவில் வித்துவான் பட்டத்திரி யிடம்  சென்று மந்திரம் ஒன்றைக் கற்றார். அதை செங்கன்னூர் பகவதி/ மகா தேவன் கோவிலில் உரு ஏற்றினார் ; 41 நாட்கள் ஆயின;  இதே நேரத்தில் மன்னர் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டது;  எப்படியாவது சூரிய நாராயணனைக்  கண்டுபிடித்து  அழைத்து வாருங்கள்   என்று உத்தரவிட்டார் மகாராஜாவின் ஆட்கள் எங்கெங்கோ தேடி,  கடைசியில், பகவதி கோவிலில் அவரைக...

மஹாபெரியவா கூறிய இருகடமைகள்.

Image
 மஹாபெரியவா கூறிய இருகடமைகள். ஒன்று பித்ருக்களுக்கு செய்ய வேண்டியக்கடமை மற்றொன்று குலத்தெய்வ வழிபாடு. கடந்த 15தினங்கள் மிகவும் அற்புதமான நாட்கள். ஒன்று நவராத்திரி மற்றொன்று புரட்டாசி சனிக்கிழமை குலத்தெய்வம் ஏழுமலையானுக்கு மாவிளக்கு ஏற்றுதள். எங்களுக்கு அடிமை காவு செங்கனூர் பகவதி.  காரணம் எங்கள் மூதாதையர் origin, கேரளா வர்கலா அதாவது கழகூட்டம் என்கிற கிராமத்தை சேர்ந்தவர்கள். அதனால் அம்பாள் செங்கனூர் பகவதி எங்களுக்கு பெண் தெய்வம் ஆவாள். அம்பாள் சிவன் பார்வதி சொரூபமாக இந்த சந்நிதியில் எழுந்தளியுள்ளார். இந்த கோவில் பெண்களுக்கு மிகவும் விசேஷம்.  காரணம் ஏற்படுகின்ற மாத விலக்கு மாதிரி அம்பாளுக்கு ஏற்படும் போது . அம்பாளுக்கு தனி அறையில் வைத்து பூஜை நடக்கும்.  அப்போது அம்பாள் மூலவர் சந்நிதி மூடப்பட்டு இருக்கும். மூன்று நாட்கள் முடிந்த பிறகு ஆராட்டு விழா முடிந்து அம்பாள் சந்நிதிக்கு எழுந்து அருளும்போது சுவாமி அம்பாளை எதிர்க்கொண்டு அழைப்பார். அப்போது அவர்கள் இருவருக்கும் ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அவர்கள் இருவரும் யானை மீதி ஏறி உளபிராகாரம் பவனி வரும்போது இருவரும் குலுங்...

#அபிராமிஅந்தாதி-52 பாடல்

Image
 #அபிராமிஅந்தாதி-52 பாடல் வையம் துரகம் மதகரி  மாமகுடம்  சிவிகை பெய்யும் கனகம்  பெருவிலை ஆரம்  பிறை முடித்த ஐயன் திருமனையாள்  அடித் தாமரைக்கு  அன்பு முன்பு செய்யும் தவமுடையார்க்கு  உளவாகிய சின்னங்களே. ஏ, அபிராமி!  உன்னிடம் அன்பு கொண்டு தவம் செய்யும் ஞானிகள் உன் திருவடித் தாமரைகளையே வணங்குகிறார்கள். அத்திருவடிகளைக் கண்டுகொள்ள அடையாளம் எதுவென்றால், பிறையணிந்த சிவபெருமானின் துணைவியே!  கேள்:  வையம், தேர், குதிரை, யானை, உயர்ந்த மணிமுடிகள், பல்லக்குகள், கொட்டும் பொன், உயர்ந்த முத்து மாலைகள் - இவையே நின் திருவடிச் சின்னம்! வையம் - ஆளுவதற்குப் பெரும் பூமி துரகம் - ஏறி ஊரையும் நாட்டையும் வலம் வர அழகிய குதிரைகள் மதகரி - பெரிய பெரிய யானைகள் மாமகுடம் - உயர்ந்த மணிமுடிகள் சிவிகை - அழகிய பல்லக்கு பெய்யும் கனகம் - சிற்றரசர்கள் வந்துப் பணிந்து, கப்பமாகக் கொட்டும் தங்கம் பெருவிலை ஆரம் - விலை மதிப்பு வாய்ந்த மணி மாலைகள் பிறை முடித்த ஐயன் திருமனையாள் - நிலாத்துண்டைத் திருமுடியில் சூடிய ஐயனின் மனையாளாகிய அன்னையின் அடித் தாமரைக்கு - திருவடித்தாமரைகளுக்கு...