Posts

Showing posts from October, 2025

செங்கனூர் பகவதி கோவில்-1

Image
முந்தைய நாள் பதிவில் குறிப்பிட்டது போல் செங்கனூர் பகவதி கோவில் பற்றிய பதிவு. செங்கன்னூர்  பகவதி கோவில் பற்றி சுவையான கதைகள் தொடர்ச்சி கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற  108 கோவில்கள்- கதை  ஸ்ரீ ஆயில்யம் திருநாள் மகாராஜாவின் (1860-1880) காலத்தில் அவரிடம்  சூரிய நாராயணன் என்பவர் பணியில் இருந்தார். அவர் காலத்தில்தான் திருவங்கூர் ஒரு முன்னுதாரண ராஜ்யமாக மாறியது மன்னருக்கும் சூரிய நாராயணனுக்கும் இடையே மனத்தாங்கல் ஏற்படவே ,  அவரும் கம்பன் போல கோபித்துக்கொண்டு ‘உண்டோ குரங்கேற்றுக்கொள்ளாத கொம்பு?’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். கற்றவருக்கு சென்றவிடம் எல்லாம் சிறப்பு அல்லவா !  திருவல்லாவில் வித்துவான் பட்டத்திரி யிடம்  சென்று மந்திரம் ஒன்றைக் கற்றார். அதை செங்கன்னூர் பகவதி/ மகா தேவன் கோவிலில் உரு ஏற்றினார் ; 41 நாட்கள் ஆயின;  இதே நேரத்தில் மன்னர் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டது;  எப்படியாவது சூரிய நாராயணனைக்  கண்டுபிடித்து  அழைத்து வாருங்கள்   என்று உத்தரவிட்டார் மகாராஜாவின் ஆட்கள் எங்கெங்கோ தேடி,  கடைசியில், பகவதி கோவிலில் அவரைக...

மஹாபெரியவா கூறிய இருகடமைகள்.

Image
 மஹாபெரியவா கூறிய இருகடமைகள். ஒன்று பித்ருக்களுக்கு செய்ய வேண்டியக்கடமை மற்றொன்று குலத்தெய்வ வழிபாடு. கடந்த 15தினங்கள் மிகவும் அற்புதமான நாட்கள். ஒன்று நவராத்திரி மற்றொன்று புரட்டாசி சனிக்கிழமை குலத்தெய்வம் ஏழுமலையானுக்கு மாவிளக்கு ஏற்றுதள். எங்களுக்கு அடிமை காவு செங்கனூர் பகவதி.  காரணம் எங்கள் மூதாதையர் origin, கேரளா வர்கலா அதாவது கழகூட்டம் என்கிற கிராமத்தை சேர்ந்தவர்கள். அதனால் அம்பாள் செங்கனூர் பகவதி எங்களுக்கு பெண் தெய்வம் ஆவாள். அம்பாள் சிவன் பார்வதி சொரூபமாக இந்த சந்நிதியில் எழுந்தளியுள்ளார். இந்த கோவில் பெண்களுக்கு மிகவும் விசேஷம்.  காரணம் ஏற்படுகின்ற மாத விலக்கு மாதிரி அம்பாளுக்கு ஏற்படும் போது . அம்பாளுக்கு தனி அறையில் வைத்து பூஜை நடக்கும்.  அப்போது அம்பாள் மூலவர் சந்நிதி மூடப்பட்டு இருக்கும். மூன்று நாட்கள் முடிந்த பிறகு ஆராட்டு விழா முடிந்து அம்பாள் சந்நிதிக்கு எழுந்து அருளும்போது சுவாமி அம்பாளை எதிர்க்கொண்டு அழைப்பார். அப்போது அவர்கள் இருவருக்கும் ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அவர்கள் இருவரும் யானை மீதி ஏறி உளபிராகாரம் பவனி வரும்போது இருவரும் குலுங்...

#அபிராமிஅந்தாதி-52 பாடல்

Image
 #அபிராமிஅந்தாதி-52 பாடல் வையம் துரகம் மதகரி  மாமகுடம்  சிவிகை பெய்யும் கனகம்  பெருவிலை ஆரம்  பிறை முடித்த ஐயன் திருமனையாள்  அடித் தாமரைக்கு  அன்பு முன்பு செய்யும் தவமுடையார்க்கு  உளவாகிய சின்னங்களே. ஏ, அபிராமி!  உன்னிடம் அன்பு கொண்டு தவம் செய்யும் ஞானிகள் உன் திருவடித் தாமரைகளையே வணங்குகிறார்கள். அத்திருவடிகளைக் கண்டுகொள்ள அடையாளம் எதுவென்றால், பிறையணிந்த சிவபெருமானின் துணைவியே!  கேள்:  வையம், தேர், குதிரை, யானை, உயர்ந்த மணிமுடிகள், பல்லக்குகள், கொட்டும் பொன், உயர்ந்த முத்து மாலைகள் - இவையே நின் திருவடிச் சின்னம்! வையம் - ஆளுவதற்குப் பெரும் பூமி துரகம் - ஏறி ஊரையும் நாட்டையும் வலம் வர அழகிய குதிரைகள் மதகரி - பெரிய பெரிய யானைகள் மாமகுடம் - உயர்ந்த மணிமுடிகள் சிவிகை - அழகிய பல்லக்கு பெய்யும் கனகம் - சிற்றரசர்கள் வந்துப் பணிந்து, கப்பமாகக் கொட்டும் தங்கம் பெருவிலை ஆரம் - விலை மதிப்பு வாய்ந்த மணி மாலைகள் பிறை முடித்த ஐயன் திருமனையாள் - நிலாத்துண்டைத் திருமுடியில் சூடிய ஐயனின் மனையாளாகிய அன்னையின் அடித் தாமரைக்கு - திருவடித்தாமரைகளுக்கு...