Posts

Showing posts from May, 2025

#அம்பாள்உபாசனை#

Image
 அம்பாளை நாம் பிராதிக்கவேண்டும் பிரபுசர்மா அண்ணாவின் அருமையான விளக்கம்.   #ஶ்ரீகுருவாக்கிய_பரிபாலனம்* #அம்பாள்உபாசனை# """"""""""'''''''''""""""""""""""""""""""" அம்பாளை உபாஸிப்பதே ஜன்மா எடுத்ததின் பெரிய பலன்.  அன்பு மயமான அம்பிகையைத் தியானிப்பதைவிடப் பேரானந்தம் எதுவும் இல்லை.   எல்லாவற்றுக்கும் முடிவாகக் கிடைக்கிற பெரிய பலன் அம்பாளைத் தியானிப்பதால் லகுவாகக் கிட்டிவிடுகிறது.  *"அம்மா!  நான் எத்தனையோ தோஷம் உள்ளவன். என்றாலும் உன்னை நம்பி விட்டேன்.  நீ கடாக்ஷித்துவிட்டால் எத்தனை தோஷமானாலும் தூர ஓடிவிடும்.  நான் எப்படி இருக்க வேண்டுமோ அந்த மாதிரியாக இருக்கும் படியாக நீயே பண்ணம்மா" என்று அவளிடம் நம்மை ஓயாமல் ஒப்புக்கொடுத்துக் கொண்டிருந்தாலே போதும் - அதைவிடப் பெரிய, சித்தாந்தமோ, அநுஷ்டானமோ இல்லை.  எல்லாம் அவள் சித்தப்படி ஆகட்டும் என்று விட்டு விட்டு,  நாம் பஞ்சு மாதிரி மனசில் எந்த கனமு...

அபிராமிஅந்தாதிபாடல்-19#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-19# #பேரின்பம்அளிக்கும்# வெளிநின்ற நின்  திருமேனியை பார்த்து, என் விழியும் நெஞ்சும், களிநின்ற  வெள்ளம் கரைகண்டது இல்லை, கருத்தின் உள்ளே தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுள்ளமோ , ஒளிநின்ற கோணங்கள்  ஒன்பதும் மேவி உறைபவளே ஒளிநின்ற கோணங்கள்  ஒன்பதும் மேவி உறைபவளே -  இங்கு ஓம்பது என்பது அம்மை அப்பனின் இணைவே. அதாவது மேல் நோக்கிய நான்கு முக்கோணம்  கீழ்நோக்கியே ஐந்து முக்கோணம். இதன் இணைவே ஶ்ரீசக்ரம், நான்கு முக்கோணம் மேல்நோக்கி என்பது பரபிரம்மத்தையும் கீழ்நோக்கிய முக்கோணம் குண்டலி சக்தியையும். எப்போது குண்டலி சக்தி மேல் எழுந்து சஹஸ்ராத்தில் அப்பனுடன் அதாவது ஜீவாத்மா பராமாத்வுடன் இணைவை இது குறிக்கிறது. அதாவது பிந்து ஸ்தானத்தில் அம்மை அப்பனின் இணைவு. ஒன்றானவன் - அர்த்தநாரீஸ்வரர் அவன் உருவில் இரண்டாணவன் - அம்மை மற்றும் அப்பன் ஒளி நிறைந்த ஸ்ரீ சக்ரம்  (மேரு என்று சொல்லப்படும் வடிவம்  (3 Dimension )  ஒன்பது நிலைகள் (படிகள்) கொண்டது.  அதனை மேலிருந்து பார்க்கும்போது  (Top view ) நமக்கு கிடைக்கக்கூடிய வடிவம்  ...

இந்துக்கள் கற்பூரத்தை பூஜையில் உபயோகப்படுத்துவது ஏன்

Image
இந்துக்கள் கற்பூரத்தை பூஜையில் உபயோகப்படுத்துவதின் காரணம் மற்றும் தனிச்சிறப்பு என்ன? தற்சமயம் நிறைய கோவில்களில் கற்பூரம் தவிர்த்து நெய்விளக்கே மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. தற்சமயம் கற்பூரத்தில் மெழுகு கலக்கப்படுவதால் கற்பூரம் எரிந்த பின்னர் சாம்பல் மற்றும் கரியை ஏற்படுத்தும் காரணத்தால்,  ஆலய தூய்மையை கருத்தில் கொண்டு பெரும்பாலான கோயில்களில் கற்பூரம் பயன்படுத்துவதில்லை. தூய கற்பூரம் முழுவதும் எரிந்த பின்னர் எந்த விதமான சுவடும் இல்லாமல் கரைந்துவிடும். பொதுவாக நெருப்பானது எந்த ஒரு பொருளை எரித்தாலும் எரிந்த பொருளின் சாம்பல் மீதம் இருக்கும். தூய கற்பூரமானது முழுவதும் எரிந்து ஒன்றுமில்லாமல் போய்விடும். ஆன்மீகத்தின் நோக்கமும் அது தான் கடைசியில் ஒன்றுமில்லாமல் கரைந்து போவது. முக்தி என்பது என்ன திரும்பி பிறக்கும் அடிப்படை கட்டமைப்பே தகர்த்து பிறவாநிலை அடைவதே ஆகும். தத்துவ விளக்கம். ஆத்மா, பரமாத்மாவோடு கலப்பதைக் குறிக்கும்.  கற்பூரம் வெண்மையானது. அது சுத்த சத்துவ குணமுள்ள ஆத்மாவைக் குறிக்கும்.  கற்பூரத்தை ஏற்றியவுடன் தீபம் போல் எரிவது ஞானாக்கியால் மலம் நீங்கப் பெற்ற ஆன்மாவானது சிவ...

#அபிராமிஅந்தாதிபாடல்-18#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-18# மரண பயம் நீங்கும் வவ்விய பாகத்து இறைவனும்  நீயும் மகிழ்ந்திருக்கும், செவ்வியும்  உங்கள் திருமண கோலமும், சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்து  என்னை ஆட்கொண்ட  பொற்பாதமும் ஆகிவந்து வெவ்விய காலன் என்மேல் . வரும்போது  வெளிநிற்கவே வவ்விய பாகம் -  எஞ்சிய பாகம் -  வலது பக்கம் - சிவன்,  உமையம்மை இருவரும் மகிழ்ந்திருக்கும் கோலம் - அர்த்தநாரீஸ்வர கோலம். அம்மையப்பர் கோலம் என்றும் சொல்வர். கொடிய காலன் என் மேல் பாசக்கயிற்றை விடும்போது,  நம் சிந்தனையுள் இருக்கவேண்டியவை: 1. அர்த்தநாரீஸ்வர திருக்கோலம் (திருச்செங்கோடு என்னும் ஸ்தலத்தில் இக்கோலம் ப்ரசித்தி) 2. சிவன் - பார்வதி கல்யாண கோலம்  (திருமணஞ்சேரி, திருவீழிமிழலை போன்ற ஸ்தலங்களில்  இக்கோலம் ப்ரசித்தி) 3. நம் அறியாமையினை அகற்றும் அம்பாளின் பொற்பாதம் இம்மூன்றும் தன் முன்னே நிற்க வேண்டும் என்று பட்டர் வேண்டுகிறார். மேலே கூறப்பட்டுள்ள  அர்த்தநாரீச்வர கோலம்,  திருமண கோலம் ஆகியவை  சிவனின் 64 வடிவங்களில் இரண்டு. சிவனின் 64 கோலங்கள் படங்களுடன் பார்க்க வலைத்தளம் இங...

#மனம்உடல்மற்றும்ஆன்மா#

Image
 #மனம்உடல்மற்றும்ஆன்மா# GOD G -Generator  O -Operator D -Destroyer  "படைப்பவர், காப்பவர், அழிப்பவர்" என்ற வார்த்தையை சில விளக்கங்களின்படி,  "கடவுள்" என்பது ஒரு சுருக்கமான சொல் அல்ல,  ஒவ்வொரு கூறுகளையும்  இன்னும் விரிவாகப் பார்ப்போம்: #மனம்# இது நமது  எண்ணங்கள்,  உணர்ச்சிகள்  மற்றும்  அறிவாற்றல் செயல்பாடுகளைக் குறிக்கிறது. இது நமது  உணர்தல், பகுப்பாய்வு செய்தல் (பகுத்து ஆய்தல்) மற்றும் முடிவுகளை எடுப்பது. #உடல்# இது நமது உடல் சுயம்,  இடத்தை ஆக்கிரமிக்கும் உறுதியான நிறுவனம். #ஆன்மா# இந்த கருத்து மிகவும்  அகநிலை மற்றும்  ஆன்மீகமாக இருக்கலாம்,  பெரும்பாலும் நமது முக்கிய அடையாளம், நமது  நோக்க உணர்வு  மற்றும்  நம்மை விட பெரிய ஒன்றுடனான நமது தொடர்பைக் குறிக்கிறது. நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் இங்கே: நேர்மறையான மனநிலையுடன் கவனம் செலுத்துங்கள்: ஊக்கமளிக்கும் எண்ணங்களைத் தேர்ந்தெடுத்து,  உங்கள் சொந்த உற்சாகத்தலைவராக இருங்கள். உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உணர்ச்சியையும் உணருங்கள்:  ஒரு கணம் ஒதுக...

மனம்ஆன்மாமற்றும்உடல்#

Image
 #மனம்ஆன்மாமற்றும்உடல்#  மனம் /ஆன்மா/உடல்  இவைகளுக்கும் GOD என்ன சம்பந்தம் GOD G -Generator  O -Operator D -Destroyer  படைப்பவர்,  காப்பவர்,  அழிப்பவர்"  என்ற வார்த்தையை சில விளக்கங்களின்படி,  "கடவுள்" என்பது ஒரு சுருக்கமான சொல் அல்ல,  மாறாக ஒரு உயர்ந்த கடவுள்  அல்லது தெய்வத்தைக் குறிக்கும் பெயர்ச்சொல் என்று கூறுவது மிகவும் துல்லியமானது.  இந்து மதத்தில், இந்தக் கருத்து பெரும்பாலும் முறையே  படைப்பு, பாதுகாப்பு மற்றும்  அழிவைக் குறிக்கும்  திரிமூர்த்தியுடன்  பிரம்மா, விஷ்ணு, சிவன் பிரம்மா - மனம் விஷ்ணு - ஆன்மா சிவன் -உடல் தொடர்புடையது என்ற கருத்து. நமது உள்அனுபவம் மற்றும் வெளிப்புற யதார்த்தத்தின் ஒன்றோடொன்று இணைந்து #திருப்பதை# வலியுறுத்துகிறது.  நமது  மன நிலை, உடல் ஆரோக்கியம்  மற்றும்  ஆன்மீக சாராம்சம்  அனைத்தும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து செல்வாக்கு செலுத்துகின்றன என்பதை இது அறிவுறுத்துகிறது.  இந்த தொடர்பைப் புரிந்துகொள்வது என்பது நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறைக்கும் மிகவ...

#அபிராமிஅந்தாதிபாடல்-16#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-16# முக்காலமும் உணரும் திறன் கிடைக்கும் கிளியே,  கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்  ஒளியே, ஒளிரும் ஒளிக்கிடமே, எண்ணில் ஒன்றுமில்லா வெளியே,  வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே, அளியேன் அறிவளவிர்க்கு அளவானது அதிசயமே முந்தைய பாடலில், பட்டர் , அன்னையை பைங்கிளியே என்று அழைத்தார்.  இந்த பாடலிலும் கிளியே என்று அழைக்கிறார்.  பொதுவாக ஒரு பெண் அழகாய் இருக்கிறாள் என்றால், நாம், கிளி போல இருக்கிறாள் என்று சொல்வோம் அல்லவா?  அதுபோல், அன்னை பேரழகி. அதனால் கிளியே என்று வர்ணிக்கிறார்.  மேலும் மீனாக்ஷி அம்மையின் கையில் உள்ளது கிளி.  ஆண்டாளின் கையில் உள்ளது கிளி. பல பறவைகள் இருப்பினும், கிளிக்கு அம்பளிடத்தில் தனி இடம் உண்டு. லலிதா சஹஸ்ரநாமத்தில் "சுககரி" என்று கையில் கிளியை வைத்துள்ளாள் என்று ஒரு நாமம் வருகிறது. (சுமங்கலி சுககரி சுவேஷாட்யா சுவாசினி) ஆதலால் அன்னையே, கிளி போன்ற அழகு கொண்டவளே,  உன்னை வணங்குவோரின் மனதில் குடிகொண்டு பிரகாசிக்கும் சுடர் ஒளியே,  அந்த ஒளிக்கு ஆதாரமே, வெற்றிடமான வெளியே (vacuum - space - ether) - ஆக...

மாத்ருகா பஞ்சகம் ஐந்தாவது ஸ்லோகம்

Image
மாத்ருகா பஞ்சகம் ஐந்தாவது ஸ்லோகம். மாதா பிதா முதலில் மாதா பின்பு தான் பிதா. காரணம் 10மாத கர்ப்பகிரஹமான கர்ப்பையில் நம்மை சுமந்து வளர்க்கிறாள். கோயில் கர்ப்பகிரஹத்து ஈடனான தாயின் கர்ப்பபை குறிப்பிடுக்கின்றனர். அந்த கர்ப்பகிரஹத்தில் மூலமாக என்னை ஈன்றெடுத்த தாயின் பாதாரவிந்தங்களுக்கு இதை சமர்ப்பிக்கிறேன். 5.அம்பேதி தாதேதி சிவேதி தஸமின் ப்ரஸ¨திகாலே யதவோச உச்சை :I க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தே – த்யஹோ ஜநந்யை ரசிதோsயமஞ்ஜலி :II தாயே,  தாங்கள் பிரசவ வலியால் துடிக்கும் பொழுது கோவிந்தா கோபாலா என அரற்றினீர்கள். அந்த துன்பங்களுக்கு ஈடாக என்னால் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் தங்கள் திருவடித் தாமரைகளுக்கு என் சிரசை தங்கள் பாதங்களில் தண்டனிட்டு அஞ்சலி செய்கிறேன். கருணாசாகரமான தாங்கள் அதனை ஏற்று என் தவறுகளை க்ஷமித்து அருள வேண்டும் என பிரார்த்திக்கிறார். இந்த ஐந்து ஸ்லோகங்களால் சங்கரர் தாயன்பின் மகோன்னத்தை விளக்குகிறார். பகவத்பாதர் போன்ற மஹானே தாயன்பிற்கு தன்னால் ஈடு செய்ய இயலாது என்று கூறினால் பாமரர்களான நம்மால் என்ன செய்ய இயலும். நாம் செய்ய கூடியதெல்லாம் நம் பெற்றோர்களின் கண்கலங்காமல் அவர்களை பே...

அபிராமி அந்தாதிபாடல் - 15

Image
 அபிராமி அந்தாதிபாடல் - 15 பெருஞ்செல்வமும் பேரின்பமும் நல்கும் தண்ணளிக்கு என்று  முன்னே பல கோடி தவங்கள் செய்வார், மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? -  மதி வானவர் தம் விண்ணளிக்கும் செல்வமும்,  அழியா முக்தி வீடும் அன்றோ? பண்ணளிக்கும்  சொல் பரிமள யாமளை பைங்கிளியே அன்னை அபிராமி -  இனிய இசையினை எழுப்பக்கூடிய பசுங்கிளி (பச்சை கிளி - பைங்கிளி) அன்னை மீனாக்ஷியை குறிப்பிடுகிறார். பண் - இசை ,  பண்ணளிக்கும் - இசை தரக்கூடிய , சொல் - இனிமை.  எப்படிப்பட்ட இனிமை ?  நல்ல வாசனை போன்ற இனிமை (பரிமள) எவை தலை சிறந்த செல்வங்கள் என்பதை குறிப்பிடுகிறார். அன்னையின் அருளுக்காக முற்பிறவியில் பலகோடி தவங்கள் செய்பவர்களுக்கு கிடைக்கக்கூடியது இவ்வுலகில் இருப்பதற்க்கான செல்வமா?  இல்லை இல்லை. தேவர்களுக்கு இணையான தேவப்பதவி.  பின்னர் என்றும் அழியாத வீடு பேறு - முக்தி.  இவையே தலை சிறந்த செல்வங்கள் ஆகும். இந்த மனித பிறவியின் நோக்கமே கர்மாவை கழித்து முக்தி அடைவது. அதை தான் பட்டர் இங்கு விளக்கிறார். இங்கு முக்தி அனைவருக்கும் கிடைப்பதில்லை. அந்த பேறுபேற்றவர் சிலரே. #ஓம...

மாத்ருகா பஞ்சகம் மூன்றாவது ஸ்லோகம்

Image
மாத்ருகா பஞ்சகம் மூன்றாவது ஸ்லோகம் தாயானவள் தனது உதிரத்தை பாலாகக் நமக்கு கொடுத்து வளர்க்கிறாள். அந்த தாயிக்கு இது சமர்பணம். 3.ந தத்தம் மாதஸ்தே மரணஸமயே தோய மபிவா ஸ்வதாவா நோதேயா மரணதிவஸே ச்ராத்தவிதிநா I ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரகமநு: அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம் II தாயே,  நான் மூன்று தவறுகள் செய்து உள்ளேன்.  முதலாவதாக,  தங்கள் மரணத்தருவாயில்,  தங்களின் உலர்ந்த தொண்டைக்கு கங்கா ஜலமோ, துளசி தீர்த்தமோ தரவில்லை.   ஓர் சத்புத்ரன் தன் தாயையோ, தந்தையையோ,  மரணத்தருவாயில் தன் மடியில் ஏந்தி, வாயில் கங்கா ஜலத்தையோ,  துளசி தீர்த்தத்தையோ தரவேண்டும்.  நான் காசியில் பிரவாகிக்கும் கங்கை கரையில் இருந்தேன்.  ஆயின் தங்களுக்கு ஒரு வாய் கங்கா ஜலம் தந்தேனில்லை.  இரண்டாவதாக,  நான் பிரம்மசாரியாகவோ, கிரஹஸ்தனாகவோ  இருந்தால் தங்களுக்கு உரிய திதியில்,  ஸ்வதா எனும் ஹவிஸையோ, பிண்டப்பிரதானமோ செய்யமுடியும். என் இந்த சந்நியாசத்தால் அதையும் செய்ய இயலாது.  மூன்றாவதாக,  தங்களுக்கு கர்ண மந்திரமான தாரக மந்திரமாகிய ராம நாமாவை கூறவில...

சித்ராபௌர்ணமியும் சப்தஸ்தானமும்

Image
 சித்ராபௌர்ணமியும் சப்தஸ்தானமும் சித்ராபௌர்ணமியும் சப்தஸ்தானமும் திருவையாறில் ஸப்தஸ்தானம் மிகவும் விமர்சையாக  கொண்டாடபடுகிற ஒரு விழா. திருவையாறு தர்மசவர்த்தினி சமேத ஐயாறப்பர் தம்பதி சமேதராக கண்ணாடி பல்லாக்கில் எழுந்த அருளுவர். இதன் தாத்பர்யம் ப்ரம்ம உற்சவத்தின் போது திருவையாற்றில் அனைத்து ஊர் ஸ்வாமிகளும் ஒன்று கூடுவர். அவை திருவையாறு திருபழனம் திருவேதிகுடி திருசோற்றுதுறை திருகண்டியூர்  திருப்பத்துருத்தி திருநெய்தானம் திருவையாறு சப்தஸ்தானத்தில் உள்ள ஏழு ஸ்வாமிகள்:  ஐயாறப்பர் (திருவையாறு),  ஆபத்சகாயர் (திருப்பழனம்),  ஓதனவனேஸ்வரர் (திருச்சோற்றுத்துறை),  வேதபுரீஸ்வரர் (திருவேதிகுடி),  கண்டீஸ்வரர் (கண்டியூர்),  புவனநாதர் (பப்பூந்துருத்தி),  நெய்யாடியப்பர் (நெய்த்தானம்).  தேர்திருவிழாயன்று யாரிடமும் சொல்லாமல் தேர் ஏறியதால் அனைத்து ஆறு ஊர் ஸ்வாமிகளும் ஊர் திரும்புவர். அவர்களை சமாதானபடுத்தி ஈவர்களை திருவையாறுக்கு அழைத்து வரும் விழா. ஏழு மாமுனிவர்களான (சப்தரிஷிகள்)  காசியபர் (கண்டியூர்),  கௌதமர் (பூந்துருத்தி),  ஆங்கிரசர் (சோற...

மாத்ருகா பஞ்சகம் முன்னுரை

Image
 மாத்ருகா பஞ்சகம் என்பது ஆதிசங்கரரால் எழுதப்பட்ட ஒரு சிறிய கவிதை அல்லது ஸ்தோத்திரம். இந்த கவிதை தாய்மார்களின் பாசத்தையும், தியாகத்தையும் போற்றி,  மகனாக தன் தாயின் பெருமையை பாடும் ஐந்து ஸ்லோகங்களைக் கொண்டுள்ளது. இது ஆதிசங்கரரின் உணர்ச்சிகரமான வெளிப்பாடாகவும், தாய்மார்களுக்கு ஒரு மகனின் மரியாதையாகவும் பார்க்கப்படுகிறது.  மாத்ருகா பஞ்சகத்தின் அர்த்தம்: இந்த ஸ்தோத்திரத்தில் ஆதிசங்கரர், தன் தாயின் பாசம்,  கருணை,  தியாகம்,  மற்றும் மகனைப் பெற்றெடுத்த தாயின் தியாகம் ஆகியவற்றை உணர்ச்சி பொங்க பாடுகிறார். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்காக எந்த அளவு தியாகம் செய்கிறார்கள் என்பதை இந்த கவிதை மூலம் உணர்த்து கிறார். மாத்ரு பஞ்சகம் முதல் ஸ்லோகம் ... இந்த கவிதை, தாய்மார்களின் மகத்தான பாசத்தை போற்றும் ஒரு கவிதையாக பார்க்கப்படுகிறது.  இது தாய்மார்களுக்கு ஒரு மகனின் மரியாதையாகவும், நன்றி செலுத்துவதாகவும் உள்ளது. மாத்ருகா பஞ்சகம் பந்தங்களில் மிக உயர்ந்தது தாய் எனும் பந்தம்.  அதனை எவராலும் உதற இயலாது. இதற்கு விதிவிலக்கு என்பதே கிடையாது.  உலக பற்றை துறந்த பரமேஸ்வல...

மஹாபெரியவா

Image
 மஹாபெரியவா பெரியவா, காளியா? காமாட்சியா? தொலைந்த பெண் குழந்தை திரும்பக் கிடைத்த அதிசயம் "அங்கே காளி கோயில் மூலஸ்தானத்தில் பெரியவா தான் கண்ணில் பட்டார்கள்.-   இங்கே காளி தான் என் கண்களுக்குப்படுகிறாள்"- பெரியவாளைப் பார்த்து குழந்தையின் தாயார். பத்து வயதுப் பெண் குழந்தையுடன் ஸ்ரீமடம் அருகிலுள்ள பஸ் ஸ்டாப்பில் இறங்கினாள் ஓர் அம்மாள். பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு சாலையைக் கடந்து எதிர்புறம் வந்தாள். கூட்டம் இல்லாமல் இருக்கணுமே? பெரியவா தரிசனம் நிம்மதியாகக் கிடைக்கணுமே?' என்ற கவலை அரித்தது.  மடத்தின் வாசலுக்கு வந்ததும் ஏதோ பொறி தட்டியது. கையைப்  பிடித்திருந்த பெண்ணைக் காணவில்லை. திக்கென்றது.  தேடிப் பார்த்தாள் காணவில்லை. உள்ளே சென்று பெரியவாளிடம்  முறையிட்டாள். பெரியவா சிறிது நேரம் கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்வதுபோல் மௌனமாக இருந்தார்கள். பெரியவா சொன்னார்கள்; "காளிகாம்பாள் கோயிலுக்குப் போ.. ஒரு சீட்டில், 'பெண் குழந்தையைக் காணோம்.  கண்டுபிடித்துச் சேர்ப்பிக்கவும்' என்று எழுதி, ஒரு ரூபாய் காணிக்கையுடன் கோவில் உண்டியலில் போட்டு விட்டு வா!" என்றார்கள...

அபிராமிஅந்தாதிபாடல் -13#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல் -13# வைராக்கியம் தரும் பூத்தவளே  புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம் காத்தவளே,  பின் கரந்தவளே,   கறை கண்டனுக்கு மூத்தவளே,  என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே, மாத்தவளே  உனை அன்றி  மற்றோர் தெய்வம் வந்திப்பதே ஈரேழு = பதினான்கு உலகங்களை படைத்தவளே  (14 உலகம் - பூலோகம் (பூமி), பூமிக்கு மேல் 6 லோகங்கள் - புவர் லோகம், சுவர் லோகம் (சுவர்க்கம்), மஹர் லோகம், ஜன லோகம், தப லோகம், சத்ய லோகம் (பிரம்மா இருப்பிடம்) மற்றும் பூமிக்கு கீழ் உள்ள 7 லோகங்கள் - அதள , விதள, சுதள, தளாதள, ரசாதள, மகாதள, பாதாள  ஆதி சேஷன் இங்கு இருந்துக் கொண்டு அண்டத்தை தன தலையில் தாங்குகிறார்.) லோகங்கள்.), படைத்த வண்ணம் அவற்றை காப்பவளே,  பிரளயத்தின் போது அனைத்துலகினையும் தன்னுள் ஈர்த்துக்கொள்பவளே  (இதுவே அழித்தல் எனப்படும்), கறை கண்டன் - விஷம் அருந்தியதால் நீல நிற கறை உடைய கழுத்து கொண்ட சிவா பெருமான் - கண்டம் - கழுத்து சிவ பெருமானுக்கு மூத்தவளே - ஆதி சக்தியிடமிருந்து மும்மூர்த்திகள் தோன்றினர். விஷ்ணு என்றும் இளமை வடிவானவர்.  அவருக்கு அம்பாள் தங்கை. ...

ஆசார்யாள் காட்டும் அம்பாள் : பாகம் 4

Image
 ஆசார்யாள் காட்டும் அம்பாள் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி) பகுதி 4 இக்கால ஆராய்ச்சியாளர்களில் ரொம்பப் பேர்,  புராண காலத்தில்தான்  பரமேசுவரன்,  பார்வதி,  விஷ்ணு,  பிள்ளையார்  முதலிய தேவதா ரூபங்கள் ஏற்பட்டன. புராணங்களுக்கு முற்பட்ட உபநிஷத்துகளில் இவர்களைப் பற்றிப் பேச்சே இல்லை.  அரூபமான ஞான தத்துவத்தை மட்டும்தான் உபநிஷத்துக்கள் சொல்கின்றன, என்கிறார்கள். ஆனால் இங்கே கேநோபநிஷத்திலோ, ‘ ஹைமவதியான உமா என்கிற ஸ்திரீ வந்து தோன்றினாள்’ என்று பரம ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது.  ‘ஸ்திரீ’, ‘ஹைமவதி’, ‘உமா’ என்பதெல்லாம் உபநிஷத்து மூலத்திலேயே வருகிற வார்த்தைகள். பிரம்மம் யக்ஷமாக நின்ற அதே ஆகாசத்தில்,  மகா சோபையோடு இவள் நின்றாள் என்கிறது.  இரண்டுமே ஒன்றே என்பது உட்பொருள்.  ‘ஸ்திரீ’ என்று சொன்னதால் #ஆண்# #பெண்#கடந்த அரூப தத்துவத்தை மட்டுமே உபநிஷத்துக்குள் தெய்வமாகக் கொண்டிருந்தன என்று சொல்வதை நிராகரித்ததாக ஆகிறது. அவளை #உமா# என்று சொன்னதோடு நில்லாமல் #ஹைமவதி#என்றும் சொன்னதால் ஹிமவானின் புத்திரியாக அவள் அவதரித்த விருத்தாந்தமும்  உபநிஷத் க...