அபிராமிஅந்தாதிபாடல் 84
அபிராமிஅந்தாதிபாடல் 84 உடையாளை, ஒல்கு செம்பட்டுடையாளை, ஒளிர்மதிச் செஞ்ச்சடையாளை, வஞ்சகர் நெஞ்சடையாளை, தயங்கு நுண்னூல் இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே #பொருள் ஏ அடியார்களே! என் அபிராமி, இடையில் ஒளிவீசும் செம்பட்டு அணிந்தவள். ஒளி வீசும் பிறைச் சந்திரனை அணிந்த சடையை உடையவள். வஞ்சகர்களின் நெஞ்சிலே குடி கொள்ளாதவள். ஒளி விளங்கும் நுண்மையான நூலிடையாள். சிவபெருமானின் இடப்பாகத்தில் குடி கொண்டவள். என் அன்னையாகிய இவள் அந்நாள் என்னை அடிமையாகக் கொண்டாள். என்னை இனி இவ்வுலகில் பிறக்க வைக்க மாட்டாள். அத்தகைய தேவியை நீங்களும் தொழுது போற்றுங்கள். நீங்களும் பிறவி எடுக்காப் பேறெய்த அவளையே தியானம் செய்யுங்கள். #பொருளுரை அவள் நமக்கெல்லாம் தலைவி. நம்மைத் தனது அடிமையாய்க் கொண்டவள். அதனால், 'உடையாளை' என்று தொடங்கினார் பட்டர் இங்கே. நம்மையெல்லாம் தனது உடைமையாய்க் கொண்டவள் எப்படி இருக்கிறாள்? சென்...