Posts

Showing posts from January, 2026

அபிராமிஅந்தாதி பாடல்79

Image
#அபிராமிஅந்தாதி பாடல்79 விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு; வேதம் சொன்ன வழிக்கே வழிபட  நெஞ்சு உண்டு எமக்கு,  அவ்வழி கிடக்க, பழிக்கே சுழன்று,  வெம் பாவங்களே செய்து,  பாழ் நரகக் குழிக்கே அழுந்தும்  கயவர் தம்மோடு,  என்ன கூட்டு இனியே?      #பொருள் அபிராமியின் விழிகளில் என்றும் அருளுண்டு.  வேதமுறைப்படி அவளை வழிபட எனக்கு நெஞ்சமும் உண்டு. ஆகையால் பழியையும், பாவத்தையுமே விளைவித்து,  பாழ் நரகக்குழியில் அழுந்தி வாடும் பேதையர்களோடு எனக்கு இனி என்ன தொடர்பு?  (அபிராமி அன்னை சிறந்த துணையாவாள்). #பொருளுரை1 அருளைத் தவிர வேறொன்றில்லாத விழிகளையுடைய அபிராமியை வழிபடும் முறைகளை அறிந்தபின் அந்த வழியில் செல்லாமல்,  பாவச் செயல் புரிந்து நரகத்துக்கு வழி தேடுவோருடன் சேரும் வீண் பிறவி எதற்கு? (தேவையில்லை) 'பிறவாமை தரும் அபிராமியை அடையும் வழியறிந்த பின்,  பிறவிச் சுழலில் சிக்கும் வழிகள் எனக்குத் தேவையில்லை' என்று சுருக்கமாகப் பாடியிருக்கிறார் பட்டர். இந்தப் பாடலின் பின்னணி:  'உன்னை நம்பி நானே உள்ளமிழந்தேனே'  என்று உருகி உருகிப் ப...

#அபிராமிஅந்தாதிபாடல்78

Image
செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல் #அபிராமிஅந்தாதிபாடல்78 செப்பும் கனக கலசமும்  போலும்  திருமுலைமேல் அப்பும் களப அபிராம வல்லி,  அணி தரளக்கொப்பும்,  வயிரக் குழையும்,  விழியின் கொழுங்கடையும், துப்பும்,  நிலவும் எழுதிவைத்தேன்,  என் துணை விழிக்கே       #பொருள் என் தாயே! அபிராமி!  உன்னையே என் இரு கண்களில் எழுதி வைத்தேன்.  அந்த உருவம் எப்படிப் பட்டதெனின், மாணிக்கப் பூண் அணிந்த பொற்கலசம் போன்ற திருமுலை; அம்முலைமேல் பூசிய மணம் வீசும் சிறந்த சந்தனக் கலவை;  அங்கே புரளும் அணிகலன்கள்; சிறந்த முத்துக் கொப்பு;  வைரத்தோடு; செழுமையான கருணைமிகும் கடைக்கண்கள்; குளிர்ச்சியை உமிழ்கின்ற நிலவைப் போன்ற திருமுகம் இவைகளெல்லாம் கொண்ட வடிவையே என் மனத்தில் இருத்தினேன். #பொருளுரை         அபிராமி நமக்கு எல்லாம் தாயானவள்.  அபிராமி பட்டரும் அந்தத் தாய்க்குக் குழந்தை அல்லவா!  சிறு குழந்தையின் பார்வை அன்னையின் ஸ்தனங்களின்மீது படிகிறது. குழந்தைகளின் பசியாற்றுபவை அவைதாமே! செப்பு போன்ற ஸ்தனபாரங்களால் அபி...

அபிராமி அந்தாதிபாடல்77

Image
அபிராமி அந்தாதிபாடல்77 பயிரவி,பஞ்சமி,பாசாங்குசை,பஞாசபாணி பயிரவி,  பஞ்சமி,  பாசாங்குசை, பஞ்ச பாணி,  வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டி,  காளி,  ஒளிரும் கலா வயிரவி,  மண்டலி,  மாலினி,  சூலி,  வராகி-- என்றே செயிர் அவி  நான்மறை சேர்  திருநாமங்கள்  செப்புவரே. #பொருள்:- ஏ, அபிராமி! உன்னை,  பைரவர் வணங்கக்கூடிய பைரவி; பஞ்சமி;  பாசத்தையும், அங்குசத்தையும் உடைய பாசாங்குசை;  ஐவகை மலர் அம்புகளையுடைய பஞ்சபாணி;  வஞ்சகரின் உயிரை மாய்த்து, அவர்கள் இரத்தத்தைக் குடிக்கின்ற மேலான சண்டி;  மகா காளி;  ஒளிவீசும் கலை பொருந்திய வயிரவி,  சூரிய, சந்திர மண்டலத்திலுள் ளோர்க்கு மண்டலி;  சூலத்தையுடைய சூலி;  உலகளந்த வராகி என்றெல்லாம் அடியார் பல்வேறு நாமங்களைச் சொல்லி வணங்குவர்.  குற்றமற்ற வேதங்களிலும், நின் திரு நாமங்கள் இவ்வாறு கூறப்படுகின்றன.  அதையே அடியார்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வாழ்த்தி  வணங்கி வழிபடுகின்றனர். #பொருளுரை:- பைரவன் சிவனின் துணைவியானதால் பைரவி,  பிரம்மா விஷ்ணு சிவன் முருகன...