Posts

Showing posts from January, 2026

அபிராமிஅந்தாதிபாடல் 84

Image
 அபிராமிஅந்தாதிபாடல் 84 உடையாளை,  ஒல்கு செம்பட்டுடையாளை,  ஒளிர்மதிச் செஞ்ச்சடையாளை,  வஞ்சகர் நெஞ்சடையாளை,  தயங்கு நுண்னூல் இடையாளை,  எங்கள் பெம்மான் இடையாளை,  இங்கு என்னை  இனிப்படையாளை,  உங்களையும்  படையாவண்ணம்  பார்த்திருமே        #பொருள் ஏ அடியார்களே! என் அபிராமி,  இடையில் ஒளிவீசும் செம்பட்டு அணிந்தவள்.  ஒளி வீசும் பிறைச் சந்திரனை அணிந்த சடையை உடையவள்.  வஞ்சகர்களின் நெஞ்சிலே குடி கொள்ளாதவள்.  ஒளி விளங்கும் நுண்மையான நூலிடையாள்.  சிவபெருமானின் இடப்பாகத்தில் குடி கொண்டவள்.  என் அன்னையாகிய இவள் அந்நாள் என்னை அடிமையாகக் கொண்டாள். என்னை இனி இவ்வுலகில் பிறக்க வைக்க மாட்டாள்.  அத்தகைய தேவியை நீங்களும் தொழுது போற்றுங்கள்.  நீங்களும் பிறவி எடுக்காப் பேறெய்த அவளையே தியானம் செய்யுங்கள். #பொருளுரை அவள் நமக்கெல்லாம் தலைவி. நம்மைத் தனது அடிமையாய்க் கொண்டவள்.  அதனால், 'உடையாளை' என்று தொடங்கினார் பட்டர் இங்கே. நம்மையெல்லாம் தனது உடைமையாய்க் கொண்டவள் எப்படி இருக்கிறாள்?  சென்...

அபிராமிஅந்தாதிபாடல்83#

Image
விரவும் புது மலர் இட்டு,  நின் பாத விரைக்கமலம் #அபிராமிஅந்தாதிபாடல்83# விரவும் புது மலர் இட்டு,  நின் பாத விரைக்கமலம் இரவும் பகலும் இரைஞ்ச வல்லார்,  இமையோர் எவரும் பரவும் பதமும்,  அயிராவதமும், பகீரதியும், உரவும் குலிகமும்,  கற்பகக் காவும் உடையவரே              #பொருள்# அன்னையே, அபிராமி!  உன்னுடைய மணம்மிக்க திருவடித் தாமரைகளில் தேன் சிந்தும் புதுமலர்களை வைத்து  இரவு, பகலாக தியானம் செய்யும் பெரியோர்கள்,  தேவர்கள் முதலிய யாவரும்  இந்திர பதவி, ஐராவதம் என்ற யானை, ஆகாய கங்கை, வலிமையான வஜ்ஜிர ஆயுதம், கற்பகச் சோலை முதலியவைகளை முறையாகப் பெற்று பெருவாழ்வு வாழ்கின்றனர்.  (எனக்கும் அருள்வாயாக!) #பொருளுரை#        அந்த அன்னையின் பாத கமலங்களிலே,  மலரிட்டு பூசனை செய்பவர்கள் என்னவெல்லாம் அடைவார்கள் என்று பட்டியலிடுகிறார் பட்டர்.  அந்த அன்னையின் பாதங்களே மலர்கள் போன்றுதாம் இருக்கின்றன. அந்த மலர்த்தாள்களிலே  நாம் புது மலரிட்டுஅவளைத் தொழுதால், அவள் நமக்கு என்னதான் தர மாட்டாள்? அந்த அன்ன...

அபிராமி அந்தாதி பாடல் 82

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்82 அளியார் கமலத்தில் ஆரணங்கே! அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற  ஒளிர் திருமேனியை  உள்ளுந்தொரும், களியாகி, அந்தக்கரணங்கள் விம்மி,  கரைபுரண்டு வெளியாய்விடின்,  எங்கனே மறப்பேன்,  நின் விரகினையே?       #பொருள் ஏ, அபிராமி!  வண்டுகள் ஆர்க்கும் தாமரையில் வாழ்பவளே! பேரழகானவளே! உலகமெல்லாம் ஒளியாக நின்ற,  ஒளிவீசும் உன்னுடைய திருமேனியை நான் நினைக்கும்தோறும் களிப்படை கின்றேன்.  அக்களிப்பின் மிகுதியால் அந்தக் காரணங்கள் விம்மிக் கரைபுரண்டு, பரவெளியாகவுள்ள ஆகாயத்தில் ஒன்றி விடுகின்றன.  இவ்வளவு பேரருள் காட்டியருளிய உன் தவநெறியை நான் எவ்வாறு மறப்பேன்?  (மறவேன் ஒருபோதும்). #பொருளுரை அந்த அம்பிகை ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரின் மீது வீற்றிருக்கிறாள்.  வண்டுகள் முரலும் அந்த சோலையிலே புன்முறுவல் பூத்து அவள் அமர்ந்திருக்கிறாள். அழகெல்லாம் ஓருருவாகத் திகழும் ஆரணங்காக அவள் அங்கே இருக்கிறாள். இப்படி அம்பிகையை உருத்தோற்றமாய்ப் பார்த்த பட்டர், பின்னர் அன்னையை ஒளித் தோற்றமாய்க் காண்கிறார்.  இந்த உலகெல்லாம...

#அபிராமிஅந்தாதிபாடல்81#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்81# அணங்கே!  அணங்குகள்  நின் பரிவாரங்கள்  ஆகையினால், வணங்கேன் ஒருவரை; வாழ்த்துகிலேன் நெஞ்சில்;  வஞ்சகரோடு இணங்கேன்;  எனது உனது என்றிருப்பார்  சிலர் யாவரொடும் பிணங்கேன்;  அறிவு ஒன்றிலேன்;  #பொருள் ஏ, அபிராமி! என்னிடத்தில் நீ வைத்த பெருங்கருணையினால் நான் கள்ள நெஞ்சம் உடையவரிடம் நெருங்க மாட்டேன். உலகத்தில் மற்ற சக்திகளெல்லாம் உன்னுடைய பரிவாரத் தேவதைகளேயாகும். ஆதலினால் நான் அவர்களை வணங்க மாட்டேன்; ஒருவரையும் போற்றவும் மாட்டேன்; நான் அறிவில்லாதவனாயினும், என்னுடையதெல்லாம் உன்னுடையது என்று உன்னை வணங்கும் சில ஞானிகளோடு மட்டுமே பிணங்காது சேர்ந்து உறவாடுவேன்! #பொருளுரை# என் கண் நீ வைத்த பேரளியே!    இந்த உலகில் உள்ள அனைத்து சக்திகளும் அன்னையைப் பணிந்து நிற்கின்றன.  அன்னையின் பரிவாரங்களாக இருக்கின்றன.  ஆகையினால், தனித் தனியே வேறு வேறு சக்திகளையும் தெய்வங்களையும் தொழுவதிலோ, பணிந்து நிற்பதிலோ, பொருள் ஒன்றும் இல்லை.  ஆகையினால், உன்னைத் தவிர வேறு யாரையும் நான் பணிந்து நிற்க மாட்டேன்.  உன்னைத் தவிர வேறு...

அபிராமிஅந்தாதிபாடல்80

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்80 கூட்டியவா  என்னைத் தன்னடியாரில்  கொடிய வினை ஓட்டியவா  என்கண் ஓடியவா  தன்னை  உள்ள வண்ணம் காட்டியவா கண்ட கண்ணும்  மனமும் களிக்கின்றவா ஆட்டியவா  நடமாடகத் தாமரை  ஆரணங்கே. #பொருள் ஏ, அபிராமித்தாயே! பொற்றாமரையில் வாழும் பேரழகானவளே!  என்னை உன் அடியார்கள் கூட்டத்தில் சேர்த்தவளே!  நான் செய்த கொடிய வினைகளையெல்லாம் ஒழித்தவளே! ஒன்றையும் அறியாத எனக்கு, உன்னுடைய உண்மை உருவைக் காட்டியவளே!  உன்னைக் கண்ட என் கண்ணும், மனமும் களிநடம் புரிகின்றது. இவ்வாறெல்லாம் என்னை நாடகமாடச் செய்தவளே! உன்னுடைய கருணையத்தான் என்னவென்பேன். #பொருளுரை தாமரை மலர் போன்ற அழகியே,  உன் உண்மையான உருவைக் கண்ட என் கண்ணும் நெஞ்சும் பெரும் மகிழ்ச்சியடைகிறது.  என் தீவினைகளை ஒழித்து உன்னுடைய அடியார்களில் ஒருவனாக அழைத்து ஏற்றுக்கொள்ளும் பொருட்டு என் முன்னே தோன்றுவதற்கென்றே நீ நடத்திய நாடகமா இது? தன்னுடைய பக்தர்களைச் சோதிப்பது கடவுளரின் பொழுதுபோக்கு. இதெற்கென்றே நூற்றுக்கணக்கில் புராணக்கதைகள் இருக்கின்றன. சோதனையின் ஆழம் பலனின் பெருமையைப் பொருத்து...

அபிராமிஅந்தாதி பாடல்79

Image
#அபிராமிஅந்தாதி பாடல்79 விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு; வேதம் சொன்ன வழிக்கே வழிபட  நெஞ்சு உண்டு எமக்கு,  அவ்வழி கிடக்க, பழிக்கே சுழன்று,  வெம் பாவங்களே செய்து,  பாழ் நரகக் குழிக்கே அழுந்தும்  கயவர் தம்மோடு,  என்ன கூட்டு இனியே?      #பொருள் அபிராமியின் விழிகளில் என்றும் அருளுண்டு.  வேதமுறைப்படி அவளை வழிபட எனக்கு நெஞ்சமும் உண்டு. ஆகையால் பழியையும், பாவத்தையுமே விளைவித்து,  பாழ் நரகக்குழியில் அழுந்தி வாடும் பேதையர்களோடு எனக்கு இனி என்ன தொடர்பு?  (அபிராமி அன்னை சிறந்த துணையாவாள்). #பொருளுரை1 அருளைத் தவிர வேறொன்றில்லாத விழிகளையுடைய அபிராமியை வழிபடும் முறைகளை அறிந்தபின் அந்த வழியில் செல்லாமல்,  பாவச் செயல் புரிந்து நரகத்துக்கு வழி தேடுவோருடன் சேரும் வீண் பிறவி எதற்கு? (தேவையில்லை) 'பிறவாமை தரும் அபிராமியை அடையும் வழியறிந்த பின்,  பிறவிச் சுழலில் சிக்கும் வழிகள் எனக்குத் தேவையில்லை' என்று சுருக்கமாகப் பாடியிருக்கிறார் பட்டர். இந்தப் பாடலின் பின்னணி:  'உன்னை நம்பி நானே உள்ளமிழந்தேனே'  என்று உருகி உருகிப் ப...

#அபிராமிஅந்தாதிபாடல்78

Image
செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல் #அபிராமிஅந்தாதிபாடல்78 செப்பும் கனக கலசமும்  போலும்  திருமுலைமேல் அப்பும் களப அபிராம வல்லி,  அணி தரளக்கொப்பும்,  வயிரக் குழையும்,  விழியின் கொழுங்கடையும், துப்பும்,  நிலவும் எழுதிவைத்தேன்,  என் துணை விழிக்கே       #பொருள் என் தாயே! அபிராமி!  உன்னையே என் இரு கண்களில் எழுதி வைத்தேன்.  அந்த உருவம் எப்படிப் பட்டதெனின், மாணிக்கப் பூண் அணிந்த பொற்கலசம் போன்ற திருமுலை; அம்முலைமேல் பூசிய மணம் வீசும் சிறந்த சந்தனக் கலவை;  அங்கே புரளும் அணிகலன்கள்; சிறந்த முத்துக் கொப்பு;  வைரத்தோடு; செழுமையான கருணைமிகும் கடைக்கண்கள்; குளிர்ச்சியை உமிழ்கின்ற நிலவைப் போன்ற திருமுகம் இவைகளெல்லாம் கொண்ட வடிவையே என் மனத்தில் இருத்தினேன். #பொருளுரை         அபிராமி நமக்கு எல்லாம் தாயானவள்.  அபிராமி பட்டரும் அந்தத் தாய்க்குக் குழந்தை அல்லவா!  சிறு குழந்தையின் பார்வை அன்னையின் ஸ்தனங்களின்மீது படிகிறது. குழந்தைகளின் பசியாற்றுபவை அவைதாமே! செப்பு போன்ற ஸ்தனபாரங்களால் அபி...

அபிராமி அந்தாதிபாடல்77

Image
அபிராமி அந்தாதிபாடல்77 பயிரவி,பஞ்சமி,பாசாங்குசை,பஞாசபாணி பயிரவி,  பஞ்சமி,  பாசாங்குசை, பஞ்ச பாணி,  வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டி,  காளி,  ஒளிரும் கலா வயிரவி,  மண்டலி,  மாலினி,  சூலி,  வராகி-- என்றே செயிர் அவி  நான்மறை சேர்  திருநாமங்கள்  செப்புவரே. #பொருள்:- ஏ, அபிராமி! உன்னை,  பைரவர் வணங்கக்கூடிய பைரவி; பஞ்சமி;  பாசத்தையும், அங்குசத்தையும் உடைய பாசாங்குசை;  ஐவகை மலர் அம்புகளையுடைய பஞ்சபாணி;  வஞ்சகரின் உயிரை மாய்த்து, அவர்கள் இரத்தத்தைக் குடிக்கின்ற மேலான சண்டி;  மகா காளி;  ஒளிவீசும் கலை பொருந்திய வயிரவி,  சூரிய, சந்திர மண்டலத்திலுள் ளோர்க்கு மண்டலி;  சூலத்தையுடைய சூலி;  உலகளந்த வராகி என்றெல்லாம் அடியார் பல்வேறு நாமங்களைச் சொல்லி வணங்குவர்.  குற்றமற்ற வேதங்களிலும், நின் திரு நாமங்கள் இவ்வாறு கூறப்படுகின்றன.  அதையே அடியார்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வாழ்த்தி  வணங்கி வழிபடுகின்றனர். #பொருளுரை:- பைரவன் சிவனின் துணைவியானதால் பைரவி,  பிரம்மா விஷ்ணு சிவன் முருகன...