Posts

Showing posts from February, 2025

இஷ்ட ப்ராப்தி Getting of all desires

Image
 பகுதி 95 இஷ்ட ப்ராப்தி Getting of all desires  லலிதா சஹஸ்ர நாமத்திற்கு ஒப்புநோக்கதக்க சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி பாடல். #லலிதாசஹஸ்ரநாமம்#. #ஶ்ரீமஹாராஜ்ஞீ# பிரபஞ்சத்தைப் பராமரிக்கும் பேரரசியாகிய அவள் -  அவளுடைய பாதுகாப்புப் பங்கைக் குறிக்கிறாள் #ஶ்ரீமஹாகாமேசமஹிஷீ# காமேஸ்வரனின் பட்டத்துராணி மஹாதிரிபுரசுந்தரி #சௌந்தயலஹரி# அமேரந்தினுக்கு அனுமதி மறுக்கும் அணிமை. புராராத்தேயரந்தஹ புரமாசி ததாஸ்த்வச்சரணயோஹோ சபர்யாமர்யாதா தாரலகரணநாமசுலாபாம்!  தத்தா ஹ்யேத்தே நீதாஹ ஷதமகாமுகாஹ சித்திமதுலாம் தவ த்வாரோபாந்தஸ்திதிபிரானிமாத்யாபிராமராஹா! அம்மா! நீ திரிபுராந்தகனான பரமசிவனின் பட்டமகிஷியாக இருப்பதால் உனது பாதபூஜையானது அடங்காத சித்தமுடையவர்கள் செய்யக் கிடைக்கூடியதில்லை. இதனால் தான் இந்திராதி தேவர்கள் கூட உன்னுடைய க்ருஹத்தில் வாசற்படியருகில் காவல் புரியும் அணிமாதி சித்திகளால் உள்ளே செல்ல இயலாது தடை செய்யப்பட்டு வாயிற்படியிலேயே நின்று நிகரல்லாத சக்தியை பெறுகின்றனர். அம்பிகையின் இல்லமான சிந்தாமணி கிருஹத்தின் ஒம்பது வாசலில் அணிமாசித்திகள் எப்போதும் இருந்து காவல் காப்பதாக ஐதீ...

திரோதானம் - மறைத்தல் - Disappearance

Image
 திரோதானம் - மறைத்தல் - Disappearance. திரோபவம் - பஞ்சகிருத்தியங்களுள் ஒன்றாய். ஆன்மா தன் கன்மம் முடியும் வரையில் உலக அனுபவங்களில் உழன்று மயங்கும்படி உண்மையை மறைத்தலைச் செய்யும். சிவபெருமானது அருட்செயல். சில விஷயங்களுக்கான காரணம் நமக்கு புரியவில்லை என்பதற்கு அவைகளுக்கு தொடர்பு இல்லை என அர்த்தமில்லை. அது அம்பாளின் திரோதானத்தின் செயல். கடந்த நான்கு வாரங்களுக்கு முன் அர்த்தமேரு டிரஸ்டில் தேவிகட்கமால ஸ்துதி புக் கிடைக்கப்பெற்றேன். புத்தகம் கிடைக்கப் பெற்ற மறுநாள் ஷ்யாமளா நவராத்திரி ஆரம்பம். ஷ்யாமளா நவராத்திரியில் கட்கமாலா பாராயணம். அடுத்த சில வாரங்களில் ஶ்ரீமஹாதிரிபுரசுந்தரி சந்நிதியில் வைத்து மஹாமேரு கிடைக்கப் பெற்றேன். தற்போது மஹாமேருக்கு தேவிகட்கமாலா ஸ்துதி பாராயணம். நேற்று தேவிகட்கமாலாவைப் பற்றி எழுதலாம் என்று சிந்திக்கும்போது அதைப்பற்றிய தகவல் கிடைக்கப் பெற்றேன். அதில் தேவிகட்கமாலா பாராயணம் செய்பவர்களை அரணாக இருந்து காப்பாள் என்ற பதிவு. இதன் மூலம் நான் உணர்ந்தது தேவிகட்கமாலா ஸ்துதியை பாராயணம் செய்வதற்காக ஷ்யாமளா நவராத்திரியை தந்து அதில் தேவிகட்கமாலா பாராயணம் செய்ய வைத்தாள். அதை என...

தேவி கட்கமாலா

Image
 தேவி கட்கமாலா தேவி.., என்றால் ‘சக்தி’ வடிவான தெய்வீக அன்னை .  கட்க என்றால் -பாதுகாப்பு தரும் ஆயுதம் ( வாள் ) , கவசம் போன்றது , மாலா – மாலை. ஸ்தோத்ரம் – கீர்த்தனை அல்லது ஸ்துதி , பாட்டு ஆகும். எவர் இந்த ஸ்துதியை ஸ்துதிக்கிறார்களோ, அவர்களின் கழுத்தில் அணிந்த மாலை போன்று, கவசமாக இருந்து அவர்களை அன்னை காப்பாள். மிகவும் சக்தி வாய்ந்த, ஆற்றல் மிக்க, மந்திர அதிர்வுகளைக் கொண்ட ஸ்துதி இது.  ஸ்ரீ சக்ரத்தில் வாசம் செய்யும் தெய்வங்களின் பெயர்களைத் தன்னகத்தே கொண்டது. மத்தியத்தில் அமர்ந்த ஸ்ரீ லலிதையைச் சுற்றி,  அமர்ந்துள்ள 98 யோகினிகளையே இதனில் வணங்குகிறோம். அவர்களுக்கு உரிய இடம் மற்றும் சக்திகளை, அவர்களின் செயல்களை மனதினால் நினைத்து, பெயரினை பூரண அன்போடு உச்சரிக்க,  நம்முள் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கும் அதிர்வுகளை தன்னகத்தே கொண்ட மந்த்ரஆற்றல் மிக்க சொற்களால் ஆனது. இதனை பாராயணம் செய்தாலே இயல்பான தியானம் நிகழ்கிறது. அம்பிகையை நோக்கி செல்லும் பாதை கணித அமைப்பு கொண்டதே ஸ்ரீ சக்ரத்தின் அமைப்பாகும்.  சாதகன் இந்த பிரபஞ்சத்தைக் கடந்து நிற்கும் பேரறிவான, ஆற்றலை எவ்வாறு அட...

ஜம்பூத்வீபேபாரதவர்ஷேபரதக்கண்டே

Image
 நாம் உலக்கிற்கு விஷ்வ குரு என்பதற்கு இவையும் ஒரு சான்று. முன்னோர்கள் வேதத்தில் கண்டுபிக்காதது எதுவும் இல்லை. இன்றைய அறிவியலின் மூலம். சின்ன sample - இன்று செய்த சங்கல்பத்தில்.  பூமியில் எத்தனை கண்டங்கள் இருந்தன என்ற பலவற்றைப் பின்வரும் வேத வரிகள் கூறுகின்றன. "அத்³ய ப்³ரஹ்மண​: த்³விதீயபரார்தே,ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வதமன்வந்தரே, அஷ்டாவிம்ʼஸ²திதமே கலியுகே³ ப்ரத²மே பாதே³  #ஜம்பூத்வீபேபாரதவர்ஷேபரதக்கண்டே #  மேரோஹோ, அஸ்மின் வர்தமானே வ்யாவஹாரிகாணாம்,ப்ரபவாதீ³னாம்ʼ ஷஷ்ட்யா​: ஸம்ʼவத்ஸராணாம்ʼ மத்யே  விஜய நாம ஸம்வத்ஸரே..." ஜம்புத்வீபா  (சமஸ்கிருதம்: जम्बुद्वीप;  பாலி:  (Jambudīpa) என்பது பூமிக்குரிய உலகின் த்வீபா. ("தீவு" அல்லது "நிலப்பரப்பு") ஆகும், இது இந்து மதம், பௌத்தம் மற்றும் ஜைனத்தின் அண்டவியல்களில் கற்பனை செய்யப்பட்டுள்ளது,  🌍 ஜம்பூ த்வீபே,  பாரத வர்ஷே, பரதக்கண்டே! 🇮🇳 Jambudweepa,  Bharathavarsha, Bharatakanda! (ஆதாரம் நாஷ்வில்லி,  டி.என். அமெரிக்காவிலிருந்து திரு என்.ஆர். ஸ்ரீநிவாசன் அவர்களின் இந்து பிரதிபலிப்புகள் என்ற இணையக்...

மனோர சித்தி Fulfillment of desires

Image
 பகுதி 93 ஸ்லோகம் 42 முதல் 92 வரை தலை முதல் பாதம் வரை வர்ணித்ததை. அடுத்ததாக அவளது ஆசனத்தை வர்ணித்ததை இந்த ஸ்லோகத்தில் முழுவதுமாக வர்ணிக்கிறார் பகவத்பாதாள். அம்பாளை முழுவதுமாக பார்த்து இரசிக்குமாறு இந்த ஸ்லோகத்தை அமைத்துள்ளார். மனோர சித்தி Fulfillment of desires  Happiness contentment,sound health and prosperity. லலிதா சஹஸ்ர நாமத்திற்கு ஒப்புநோக்கதக்க சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி. #லலிதாசஹஸ்ரநாமம்# அவளின் இடை #அருணாருணகௌஸும்பவஸ்த்ரபாஸ்வத்கடீதடீ# இடைப்பகுதியில் அவள் கட்டியிருக்கின்ற வஸ்திரத்தினால் அது பிரகாசமாக இருக்கின்றது. ஏனெனில், கௌஸும்ப வஸ்திரத்தை அதாவது செம்மையான வஸ்திரத்தை அணிந்திருக்கிறாள்.  செம்மையான வஸ்திரத்தை அணிந்து ஒளிரக்கூடிய இடைப்பகுதியை உடையவள். #ஆரக்தவர்ணா# அவளின் நிறம் அவள் இளம்சிவப்பு நிறத்தாள். இதன் பொருள் "சிவப்பு நிறம்" ஆகும். #ஸ்பாவமதுரா# அவளின் குணம் ஸ்வபாவ மதுரா என்பது லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் ஒரு சொல். இதன் பொருள், இனிமையானவள், வசீகரமானவள், இயற்கையில் மகிழ்ச்சியானவள் என்பதாகும்.  இந்த குணங்களால் எல்லோரும் அவளிடம் ஈர்க்கப்படுகிற...

தூக்கத்தின் நான்கு நிலைகள்

Image
 தூக்கத்தின் நான்கு நிலைகளை விவரிக்கிறது லலிதா சஹஸ்ர நாமம். பஞ்ச ப்ரம்ம ஸ்வரூபம் விஷ்வரூபா; ஜாகரிணீ'; ஸ்வபந்தீ; தைஜசாத்மிகா; சுப்தா; ப்ராக்ஞாத்மிகா; துர்யா; சர்வாவஸ்த விவர்ஜிதா; விஷ்வ = அண்டம் விஷ்வரூபா = பேரண்ட ரூபமானவள் (ஜாகரித் - விழிப்புடன் நிலை ஜாகரிணீ = விழிப்பு நிலையில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவள் - விழித்திருப்பவள் நான்கு உணர்வு நிலைகளான 01.விழிப்பு,  02.கனவு,  03.உறக்க நிலைகள்  அதனை தாண்டிய 04.துர்யம்  என்று அறியப்படுகிறது.  இந்த நாமாவில் அவள்  விழிப்பு நிலையில் விரவி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.  ஸ்வபந் = சொப்பனம் - கனவு  ஸ்வபந்தீ - கனவு நிலையிலும் வியாபித்திருப்பவள் தைஜஸ = ஒளிமயமான - பிரகாசமான- தேஜசுடன்  தைஜசாத்மிகா = கனவு நிலையில் இயங்கும் சூக்ஷும சரீரத்தின் தைஜசமாக தன்னை வெளிப்படுத்துபவள் கனவு நிலையில் ஸ்தூல உடலின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு, சூக்ஷ்ம வடிவில் மனதின் துணை கொண்டு ஆத்மா ஈடுபட்டிருக்கிறது. தேஜோ மயமாக இருப்பதும், மனவோட்டத்துக்கு கட்டுப்பட்டு உள்முகமாக செயல்படுவது சூக்ஷும உடலின் தன்மை. அன்னை, தைஜச ஆத்மாவாக கனவ...

ஆளும் திறமை Ability to rule

Image
 பகுதி 92 ஆளும் திறமை  Ability to rule  லலிதா சஹஸ்ர நாமத்திற்கு ஒப்புநோக்கதக்க சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி. #பஞ்சப்ரேதாஸநாஸீநா# இது ஒரு விசித்திர நாமமாக தோன்றும்.   அதாவது  அம்பாள் ஸ்ரீ லலிதை ஐந்து பிரேதங்களை ஆசனமாக கொண்டு அவற்றின் மேல் அமர்ந்திருப்பவள். இங்கு பிரேதம் என்று சொல்லப் படுகிறவர்கள் ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசன்,  சதாசிவன்.    ஜீவ சக்தியை பிரித்து விட்டால் பிறகு  எல்லாமே பிரேதங்கள் தானே.  அவளன்றி ஓர் அணுவும் அசையாதே .  ஹயக்ரீவர் அழகாக தான் சொல்கிறார். பஞ்சப்ரமஸ்வரூபிநீ #பஞ்சப்ரஹ்மஸ்வரூபிணீ# பரப்ரம்மத்துக்கு  ஐந்து  காரியங்கள்.  சிருஷ்டி,  ஸ்திதி,  லயம்,  திரோதானம்   அனுக்ரஹம்.  இதில் எதுவுமே  அம்பாளின் சக்தி இல்லையென்றால் நிறைவு பெறாது. தாயில்லாமல் நாம் இல்லை.   தாய் மொழி,  தாய் நாடு.  எல்லாவற்றிலும் அவளே  அடி நாதம். பஞ்சபூதங்களால் ஆன  இந்த பிரபஞ்சத்தை இயற்கை அன்னை  MOTHER  NATURE   என்கிறோமே.  ஜீ...

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.

Image
 தினசரி சௌந்தயலஹரி ஸ்லோகம் பாராயணம் செய்வது வழக்கம். இன்று அவ்வாறே 28வது ஸ்லோகம் பாராயணம். அதில் அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை. இன்று அகிலாண்டேஸ்வரிக்கு தாடங்கள்கள் புதுபிக்கப்பட்டு. இன்று காமகோடி ஆச்சார்யாள் முன்னிலையில் அம்பாளுக்கு சமர்பிக்கும் வைபவம். நம் மனது எதில் லயிக்கிறதோ, நீ அதுவாகிறாய் என்பதற்கு   உதாரணம் இதுவாக இருக்கும். என் மனச்சிந்தனையில் அம்பாளின் அதனால் , இன்றைய 28வது ஸ்லோக பாராயணம் அதே நாளில் அகிலாண்டவேஸ்வரிக்கு தாடங்கள்கள் சமர்ப்பணம். ஆலகலா விஷத்தை உண்ட ருத்ரன்,விஷம் வயிறு பகுதியில் இறங்கினால் உயிர் இனங்களுக்கு ஆபத்து என்பதால்,  அம்மாவாக அம்பாளின் தாடங்கம் அந்த விஷயத்தை கண்டத்தில் நிறுத்தித்தால் அது கீழே இறங்காதுஅது அங்கே நின்றது அதனால் அவ நீலகண்டர் ஆனார் இதை இந்த சௌந்தயலஹரி 28வது ஸ்லோகம் மூலமாக ஆச்சாரியர் நமக்கு உணர்த்துகிறார். அதை சற்று விரிவாக காண்போம். ஸுதம் அப்யஸ்வாத்யா ப்ரதிபய-ஜரா-மிருத்யு-ஹாரிணீம் விபத்யந்தே விஷ்வே விதி-ஷதமகாத்யா திவிஷதா | கரலம் யத் க்ஷ்வேலம் கபாலிதவதா கால-கலனா ந சம்போஸ் தன்-மூலம் தவ ஜனனி ததங்க-மஹிமா ||  சௌந்தர்ய லஹர...

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

Image
  இன்று புதுப்பிக்கப்பட்ட சிவசக்ர மற்றும் ஶ்ரீசக்ர தாடங்கங்கள் அணிவிக்கப்படுக்கிறது. இதைப்பற்றி பரமசார்யாளின் அருள்வாக்கு தினம்ஒரு(தெய்வத்தின்)குரல் அந்தத் தாலி பாக்யத்தைதான் அவளுடைய “தாடங்க மஹிமா” என்று சொல்லியிருக்கிறார். வேதம் ச்ருதி என்றால், ரிஷிகள் பண்ணிய தர்ம சாஸ்திரங்களும், கிருஷ்ண பரமாத்மா உபதேசித்த கீதையும் ஸ்ம்ருதி என்பார்கள். ஆசார்யாள் வாக்கையும் ஸ்ம்ருதியோடு சேர்க்கலாம். ஸ்வாமிக்கு அம்பாள் மருந்து என்ற ச்ருதி வாக்கைத்தான் ஆசார்யாள் இங்கே ஸ்ம்ருதி வாக்காகக் கொடுத்திருக்கிறார். அப்படியே காப்பியடித்தால் அழகில்லை என்பதால், ஸ்வாமியின் உயிரை ரக்ஷிப்பது அம்பாள் என்றே திருப்பிச் சொல்லாமல், [அவ்வாறு ரக்ஷிப்பது] அவளுடைய ஸெளமாங்கால்யச் சின்னமான தாடங்கம் என்று நூதன நயம் சேர்த்துச் சொல்லியிருக்கிறார்! ‘தாலி பாக்யம்’ என்று பொதுவில் சொல்வதைத் ‘தாடங்க மஹிமை’ என்கிறார். வேடிக்கையாக, அந்தத் தாடங்கமும் தாலிதான்! இதென்ன புதிர் போடுகிறேனே என்றால், நான் ஒன்றும் புதுசாகச் சொல்லவில்லை. காளிதாஸன் சொன்னதைத் தான் ஒப்பிக்கிறேன். “தாலீ பலாச தாடங்காம்” என்பது காளிதாஸன் வாக்கு. (“ச்யாமளா நவரத்ன ...

தாடங்க யுகளீபூத தபனோடுப மண்டலா!

Image
 சில விஷயங்கள் எதற்கு எது முன்னோடி என்ற ஒரு கேள்வி எழும் தாடங்க யுகளீபூத தபனோடுப மண்டலா! என்ற சஹஸ்ர நாமம் முன் தோன்றியதா அல்லது சங்கர பகவத்பாதாள் அகிலாண்டேஸ்வரி தங்க காதணிகள் பிரதிஷ்டை செய்தாரா என்ற கேள்வி. இதற்கு லலிதா சஹஸ்ர நாமமே முன் தோன்றியதாக இருக்கும். காரணம் பகவத்பாதாள் லலிதா சஹஸ்ர நாமத்திற்கு உரை எழுத நினைத்து தனது சிஷ்யரிடம் கொடு வருமாறு வினாவிய போது உள்ளே அம்பாள் கன்னி பொண்ணாக இருந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் ஏடு எடுத்துக்கொடுகிறாள். இது ஒரு தடவை இல்லை இரு தடவை இவ்வாறாக நடந்தது. சங்கரருக்கு கோபம் வந்து சிஷ்யரை கடிந்துக்கொள்ள நினைக்கும் போது அம்பாள் லலிதா சஹஸ்ர நாமத்திற்கு உரை எழுத ஒரு மஹான் பிறப்பான். நீ எனது அண்ணணின் விஷ்ய சஹஸ்ரநாமத்திற்கு உரை எழுது கூறுகிறனாள் என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். அவ்வாறாக வாக்தேவிகள் உருவாக்கிய லலிதா சஹஸ்ர நாமத்திற்கு வலுசேர்க்கும் விதமாக அம்பாள் சங்கரரிடம் ஆடிய திருவிளையாடலே இந்த அகிவாடேஸ்வரிக்கு ஶ்ரீசக்ரம் மற்றும் சிவசக்ரத்தினாள் ஆன காதணிகள் என தோன்றுகிறது. ஶ்ரீசக்கரத்தின் அருமை அனைவரும் அறிந்ததே. எப்பொழுத்தெல்லாம் அம்பாள் உக்ரமாக இருந்த...

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

Image
 பகவான் அன்புடன் விளக்குகிறார்...  காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?   காயத்ரி மந்திரம் உடலின் பல முக்கிய புள்ளிகளில் அதிர்வுகளையும் விளைவுகளையும் கொண்டுள்ளது என்பதை இந்தப் படத்தில் இருந்து நீங்கள் புரிந்துகொண்டிருக்க வேண்டும். ஒரு மந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை முதலில் புரிந்துகொள்வோம், உண்மையில் அது மந்திரத்தின் சரியான மற்றும் துல்லியமான உச்சரிப்பால் செயல்படுகிறது,  ஒரு மந்திரத்தை நாம் பேசும் போது, ​​அந்த ஒலி நம் உடலின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து தோன்றி வெவ்வேறு பாகங்களை பாதிக்கிறது.  உதாரணமாக, நீங்கள் பிரணவ் அதாவது ॐ என்று உச்சரிக்கும்போது, ​​அது வெவ்வேறு பகுதிகளிலிருந்து தோன்றியதாகவும் தோன்றும்.  எனவே இந்த படத்தின் படி காயத்ரி மந்திரம் உடலின் வெவ்வேறு புள்ளிகளையும் பாதிக்கிறது.  இரண்டாவதாக காயத்ரி மந்திரம் என்றால் என்ன, தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம், அது உண்மையில் சவிதா தேவ்தாவின் மந்திரம், அதாவது அதன் ஆற்றல் சவிதா தேவ்தாவுடன் தொடர்புடையது, சவிதா தேவ்தாவை சூர்யா என்று கருதுங்கள்,  சூரியனின் சக்தியே சவிதா என...