இஷ்ட ப்ராப்தி Getting of all desires
பகுதி 95
இஷ்ட ப்ராப்தி
Getting of all desires
லலிதா சஹஸ்ர நாமத்திற்கு ஒப்புநோக்கதக்க சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி பாடல்.
#லலிதாசஹஸ்ரநாமம்#.
#ஶ்ரீமஹாராஜ்ஞீ#
பிரபஞ்சத்தைப் பராமரிக்கும் பேரரசியாகிய அவள் -
அவளுடைய பாதுகாப்புப் பங்கைக் குறிக்கிறாள்
#ஶ்ரீமஹாகாமேசமஹிஷீ#
காமேஸ்வரனின் பட்டத்துராணி மஹாதிரிபுரசுந்தரி
#சௌந்தயலஹரி#
அமேரந்தினுக்கு அனுமதி மறுக்கும் அணிமை.
புராராத்தேயரந்தஹ புரமாசி ததாஸ்த்வச்சரணயோஹோ சபர்யாமர்யாதா தாரலகரணநாமசுலாபாம்!
தத்தா ஹ்யேத்தே நீதாஹ ஷதமகாமுகாஹ சித்திமதுலாம் தவ த்வாரோபாந்தஸ்திதிபிரானிமாத்யாபிராமராஹா!
அம்மா!
நீ திரிபுராந்தகனான பரமசிவனின் பட்டமகிஷியாக இருப்பதால் உனது பாதபூஜையானது அடங்காத சித்தமுடையவர்கள் செய்யக் கிடைக்கூடியதில்லை.
இதனால் தான் இந்திராதி தேவர்கள் கூட உன்னுடைய க்ருஹத்தில் வாசற்படியருகில் காவல் புரியும் அணிமாதி சித்திகளால் உள்ளே செல்ல இயலாது தடை செய்யப்பட்டு வாயிற்படியிலேயே நின்று நிகரல்லாத சக்தியை பெறுகின்றனர்.
அம்பிகையின் இல்லமான சிந்தாமணி கிருஹத்தின் ஒம்பது வாசலில் அணிமாசித்திகள் எப்போதும் இருந்து காவல் காப்பதாக ஐதீகம்.
அவர்களது உத்தரவு இன்றி யாரும் உள்ளே செல்ல முடியாது. இந்திராதி தேவர்கள் வந்தால் கூட இந்திரிய நிக்ரஹமில்லாத காரணத்தால் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கமாட்டார்களாம் அணிமாசித்திகள்.
இதன் மூலம் இந்திரிய நிக்ரஹம் என்பதன் சிறப்பையும் .
அன்னையின் பக்தர்கள் அணிமாசக்திகளுக்கு இணையாக வாயில்வரை சென்று வசகிக்க கூடிய வாய்ப்பையும் ஒருங்கே கூறியி இருக்கிறார் ஆசார்யார்.
#அபிராமிஅந்தாதி#.
சென்னியது உன் திருவடித்தாமரை (பாடல் 6)
சென்னியது உன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே!
முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது உந்தன் பரமாகமப் பத்ததியே!
சென்னியது உன் திருவடித்தாமரை - எப்பொதும் என் தலையில் உள்ளது உன் தாமரை மலர்கள் போன்ற அழகிய திருவடிகள்.
சிந்தையுள்ளே மன்னியது உன் திருமந்திரம் - என்றும் என் நினைவினில் நிலைத்து நிற்பது உன் திருமந்திரம்.
சிந்துர வண்ணப் பெண்ணே! - செந்தூரம் போன்ற நிறமுடைய அழகிய தேவியே!
முன்னிய நின் அடியாருடன் கூடி - நான் எப்போதும் கூடியிருப்பது உன் அடியார்களையே. என் எல்லா செயல்களையும் அவர்களை முன்னிட்டு செய்கிறேன்.
முறை முறையே பன்னியது - தினந்தோறும் நான் முறையுடன் பாராயணம் செய்வது
உந்தன் பரமாகமப் பத்ததியே - உன்னுடைய மேலான ஆகம வழிமுறைகளையே
செந்தூரம் எனச் சிவந்த திருமேனியைப் பெற்ற அபிராமி அன்னையே!
உன் தாமரை போன்ற அழகிய திருவடிகளை நான் எப்போதும் என் தலையின் மேல் வைத்துள்ளேன்.
உன் திருமந்திரமே எப்போதும் என் நினைவில் நிலை நிற்பது. என் எல்லா செயல்களும் உன் அடியார்களை முன் வைத்தே அவர்களுக்காகவே நடக்கின்றன.
நான் எப்போதும் கூடியிருப்பதும் உன் அடியார்களையே.
தினந்தோறும் நான் முறையுடன் படிப்பதும் உன்னுடைய மேலான ஆகம வழிமுறைகளையே.
Comments
Post a Comment