Posts

அபிராமிஅந்தாதிபாடல்93

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்93 நகையே இஃது;  இந்த ஞாலம்  எல்லாம் பெற்ற நாயகிக்கு, முகையே முகிழ் முலை;  மானே முதுகண்;  முடிவுஇல்,  அந்த வகையே பிறவியும்;  வம்பே,  மலைமகள்  என்பது நாம்; மிகையே  இவள்தன்  தகைமையை  நாடி விரும்புவதே             #பொருள் உலகமெல்லாம் பெற்றெடுத்த தலைவியாகிய அபிராமி அன்னையின் திரு மார்பகங்களைத் தாமரை மொட்டு என்கிறார்கள். கருணை ததும்பி நிற்கும் முதிர்ந்த கண்களை,  மருட்சி மிக்க மான் கண்கள் என்கிறார்கள்.  முடிவில்லாதவள் என்றெல்லாம் பக்தர்கள் கூறுகின்றார்கள் இவையெல்லாமே மாறுபட்ட கூற்றுகள்.  இவைகளை நினையும் போது எனக்கு நகைப்பே உண்டாகிறது. இனிமேல் நாம் செய்யக்கூடியது இத்தகைய கற்பனைகளைத் தள்ளி அவளின் உண்மை நிலையை அறிதலேயாகும். #பொருளுரை குழந்தைகள் பெற்ற ஒரு பெண்மணிக்கு, ஸ்தனங்கள் சற்றே தளர்ந்து, தாழ்ந்து இருக்கும்.  ஆனால், உலகையே பெற்றெடுத்த பெண்மணியாம் எம் அன்னைக்கு, ஸ்தனங்கள் தாமரை மொட்டு போல் இருக்கின்றன!  இது வியப்பானது இல்லையா!! முதுமை அடைந்துவிட்ட ஒரு பெ...

அபிராமிஅந்தாதிபாடல்92

Image
 மெல்லிய நுன் இடை மின் அனையாளை விரிசடையோன் #அபிராமிஅந்தாதிபாடல்92 புல்லிய மென் முலைப்  பொன் அனையாளை,  புகழ்ந்து மறை சொல்லியவண்ணம்  தொழும் அடியாரைத்  தொழுமவர்க்கு, பல்லியம் ஆர்த்தெழ,  வெண் பகடூரும்  பதம் தருமே               #பொருள் அபிராமித் தேவி!  நீ மின்னல் போலும் மெல்லிய இடையினை உடையவள்;  விரிந்த சடைமுடி நாதர் சிவபிரானோடு இணைந்து  நிற்கும் மென்மையான முலைகளையுடையவள்;  பொன்னைப் போன்றவள். இவ்வாறாகிய உன்னை வேதப்படி தொழுகின்ற அடியார்க்கும் அடியவர்கள்,  பல்வகை இசைக்கருவிகள் இனிதாக முழங்கிவர,  வெள்ளையானையாகிய ஐராவதத்தின் மேலே ஊர்ந்து செல்லும் இந்திரப் பதவி முதலான செல்வ போகங்களைப் பெறுவர். #பொருளுரை அன்னை அபிராமியைத் தொழுபவர்கள் எதைத்தான் அடைய மாட்டார்கள்?  அந்த மெல்லிய இடை உடைய எம்பெருமாட்டியை,  அந்த மின்னல் போலும் ஒளி பொருந்திய எம் தேவியை,  அந்த விரிசடையோனாகிய சிவபெருமானை அணைத்து நிற்கும் எம் அபிராமித் தேவியை,  தினம் தினம் தொழுது, அந்த வேதத்தில் கூறிய வண்ணம்...

அபிராமிஅந்தாதிபாடல்90

Image
வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து, #அபிராமிஅந்தாதிபாடல்90 இருந்தாள்,  பழைய இருப்பிடமாக;  இனி எனக்குப் பொருந்தாது ஒரு பொருள்  இல்லை-விண் மேவும்  புலவருக்கு விருந்தாக வேலை  மருந்தானதை  நல்கும் மெல்லியலே!     #பொருள் ஏ, அபிராமி! பகைவர்களது முப்புரத்தை எரிக்க மேருமலையை வில்லாகக் கொண்டவரும்,  திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய பிரம்மனின் சிரம் ஒன்றைக் கிள்ளியழித்தவருமான சிவபெருமானின் இடப்பாகத்தில் சிறந்து வீற்றிருப்பவளே!  யாருமே துணையில்லாத நான்,  நீயே கதியென்று சரணடைந்தேன். ஆகையால் எளியோனாகிய என்னிடத்தில்  உன் பக்தருக்குள்ள தரம் இல்லையென்று  நீ தள்ளி விடுதல் தகாது.  அது உன் அருளுக்கும் அறமன்று. #பொருளுரை என்னுடைய மனத் தாமரை,  எம் அன்னை அபிராமியின் இருப்பிடம்.  அவள் இங்கேயே இருந்தவள்தான்.  நானும், அவளின் அடியிணையிலேயே இருந்த வந்தான்.  ஆனாலும், என் செய்வினையால் என் அன்னையை விட்டுப் பிரிந்துவந்து விட்டேன்.  ஆயினும், அபிராமி அன்னை, இன்று, தன்னுடைய அந்தப் பழைய இருப்பிடத்திற்கு வந்...

அபிராமிஅந்தாதிபாடல்89

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்89 சிறக்கும் கமலத் திருவே!  நின் சேவடி சென்னி வைக்கத் துறக்கம் தரும நின்  துணைவரும் நீயும்,  துரியம் அற்ற உறக்கம் தர வந்து, உடம்போடு உயிர் உறவு அற்று  அறிவு மறக்கும் பொழுது,  என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே  #பொருள் அபிராமித் தாயே!  சிறந்த தாமரையில் வீற்றிருக்கும் செல்வமே!  என்னுடைய  உயிருக்கும், உடலுக்கும் தொடர்பற்று, அறிவு மறதி மிகுந்து இருக்கும் வேளையில்  உன்னுடைய சேவடி என்னுடைய சென்னியில் படர வேண்டும்.  மேலும்,  பற்றின்மையை அனுக்கிரகிக்கும் உன்னுடைய துணைவரும் வந்து மோன நிலையில் நான் அறிதுயிலில் அமரும் பேற்றை அருள வேண்டும். #பொருளுரை அம்பிகை தாமரையிலே வீற்றிருக்கிறாள்.  அவள், மனத் தாமரையிலும்கூட வீற்றிருப்பவள்தான்.  சஹஸ்ராகாரம் எனப்படும் அந்தத் தலையில் உள்ள தாமரையிலே அவளது திருவடி பட்டுவிட்டால்,  அந்த மனிதன் நிர்விகல்ப சமாதி நிலையையும் தாண்டிய இன்பம் அடைகிறான் என்பது சக்தி வழிபாடு செய்பவர்களின் கோட்பாடு. இதனையே பட்டர்  இப்போது தெரிவிக்கிறார். அம்மா!  நீ தாமரை மலரிலே...

அபிராமிஅந்தாதிபாடல்88

Image
பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும்; உன் பத்தருக்குள் #அபிராமிஅந்தாதிபாடல்88 பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும்;  உன் பத்தருக்குள் 'தரம் அன்று  இவன்' என்று  தள்ளத் தகாது-தரியலர்தம் புரம் அன்று  எரியப் பொருப்புவில் வாங்கிய போதில்  அயன் சிரம் ஒன்று  செற்ற கையான்  இடப் பாகம் சிரந்தவளே!             #பொருள்# ஏ, அபிராமி!  பகைவர்களது முப்புரத்தை எரிக்க மேருமலையை வில்லாகக் கொண்டவரும்,  திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய பிரம்மனின் சிரம் ஒன்றைக் கிள்ளியழித்தவருமான சிவபெருமானின் இடப்பாகத்தில் சிறந்து வீற்றிருப்பவளே!  யாருமே துணையில்லாத நான், நீயே கதியென்று சரணடைந்தேன். ஆகையால்  எளியோனாகிய என்னிடத்தில்  உன் பக்தருக்குள்ள தரம் இல்லையென்று நீ தள்ளி விடுதல் தகாது.  அது உன் அருளுக்கும் அறமன்று. #பொருளுரை# இவ்வளவு முறையிட்டும்,  அன்னை ! இன்னும் நம்மை முழுதாக எடுத்துக் கொள்ளவில்லையே என்ற ஐயம் அபிராமி பட்டரின் மனதிலே எழுகின்றது.  "உன்னையே எல்லாம்" என்று  நான் சரணடைந்து விட்டேன் அம்மா! ...

அபிராமிஅந்தாதிபாடல்87

Image
 மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம், எந்தன் #அபிராமிஅந்தாதிபாடல்87 விழிக்கும் வினைக்கும்  வெளிநின்றதால், விழியால் மதனை அழிக்கும் தலைவர்,  அழியா விரதத்தை அண்டம்  எல்லாம பழிக்கும்படி,  ஒரு பாகம்  கொண்டு  ஆளும் பராபரையே!                  #பொருள் ஏ, அபிராமி!  நெற்றிக்கண் கொண்டு மன்மதனை எரித்த எம்பிரானாகிய சிவபெருமானின் அழியாத யோக விரதத்தை எவ்வுலகத்தவரும் பழிக்குமாறு  அவனது இடப்பக்கத்தில் இடம்கொண்டு ஆள்பவளே! எளியோனாகிய என் கண்களிலும், என் செயல்களிலும் வாக்குக்கும், மனத்திற்கும் எட்டாத நின் திருவுருவமே தோன்றிக் காட்சியளிக்கின்றதே!  (ஈதென்ன வியப்போ!) #பொருளுரை அந்த அன்னையின் திருவுருவம், யாருக்கும் எளிதில் கிட்டாதது.  சொல்லினால் விளம்பிவிட முடியாதது. உலகெல்லாம் பார்த்து வியக்கும்படி மோனத்தவத்தில் இருந்த அந்த சிவபெருமானை,  ஒரு சமயம் மன்மதன் சென்று மயக்க நினத்தான்.  அவனாக நினைக்கவில்லை. தேவர்கள் அனைவரும் வேண்டிக்கொண்டதற்கிணங்கவே அப்படிச் செய்தான்.  சூரபத்மனின் அர...

#அபிராமி அந்தாதி பாடல்86ர

Image
 #அபிராமி அந்தாதி பாடல்86 # மால் அயன் தேட, மறை தேட,  வானவர் தேட  நின்ற காலையும், சூடகக் கையையும்,  கொண்டு-கதித்த கப்பு வேலை வெங்காலன் என்மேல் விடும்பொது,  வெளி நில் கண்டாய் பாலையும் தேனையும் பாகையும்  போலும் பனிமொழியே!             #பொருள்# அபிராமி!  பாலையும், தேனையும், பாகையும் ஒத்த இனிய மொழியுடையவளே! இயமன் கோபித்துப் பல கிளைகளைக் கொண்ட சூலத்தை என்மீது செலுத்தும்போது, திருமாலும்,  பிரம்மனும்,  வேதங்களும்,  வானவர்களும்  தேடியும் காணாத திருப்பாதங்களையும் சங்கையணிந்த திருக்கரங்களையும் கொண்டு  நீ என் முன்னே காட்சி தந்தருள வேண்டும். #பொருளுரை# அம்மா!  உனது திருப் பாதங்கள், அந்த நான்முகனும்,  திருமாலும் தேடியும்கூடக் கிட்டாதவை.  அந்த மறைகளும் தேடியும்கூடக் காணமுடியாதவை.  அப்படிப்பட்ட உனது திருப் பாதங்களையும்,  வளையல் சூடிய திருக் கைகளையும் கொண்டு வந்து எனக்குக் காட்சி அளிக்க வேண்டும். எப்போது தெரியுமா? எனது நேரம் முடிந்து,  இந்த உடலை விட்டு,  எனது ஆவி பிரியும...