#அபிராமிஅந்தாதிபாடல்67
#அபிராமிஅந்தாதிபாடல்67 தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வன்மை, குலம், கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தோரும் பாத்திரம் கொண்டு பலிக்கு உழலா நிற்பர்- பார் எங்குமே #பொருள்# அன்னையே! அபிராமி! உன்னையே பாடி, உன்னையே வணங்காமல், மின்போலும் ஒளியுடைய நின் தோற்றத்தை ஒரு மாத்திரை நேரமாகிலும் மனதில் நினையாத பேர்களுக்கு, என்ன நேரும் தெரியுமா? அவர்கள் கொடைக்குணம், சிறந்த குலம், கல்வி குணம் இவையெல்லாம் குன்றி, வீடு வீடாகச் சென்று, ஓடேந்தி உலகெங்கும் பிச்சை எடுத்துத் திரிவர். அன்னையைத் தொழுது நிற்போருக்கு என்ன கிடைக்கும் என்று சொல்லி வந்த அபிராமி பட்டர், அவ்வாறு தொழாமல் நிற்போருக்கு என்ன நேரும் என்று இந்தப் பாடலிலே சொல்கிறார். #பொருளுரை# அந்த அபிராமியைத் தோத்திரம் செய்து, கை கூப்பித் தொழுது, அவளின் உருவத்தை ஒரு கண நேரம்...