Posts

#அபிராமிஅந்தாதிபாடல்67

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்67 தோத்திரம் செய்து,  தொழுது,  மின் போலும் நின் தோற்றம்  ஒரு மாத்திரைப் போதும்  மனத்தில் வையாதவர் வன்மை, குலம், கோத்திரம்,  கல்வி,  குணம்,  குன்றி,  நாளும் குடில்கள் தோரும் பாத்திரம் கொண்டு  பலிக்கு உழலா நிற்பர்- பார் எங்குமே                         #பொருள்# அன்னையே! அபிராமி!  உன்னையே பாடி,  உன்னையே வணங்காமல், மின்போலும் ஒளியுடைய  நின் தோற்றத்தை ஒரு மாத்திரை நேரமாகிலும் மனதில் நினையாத பேர்களுக்கு, என்ன நேரும் தெரியுமா?  அவர்கள் கொடைக்குணம்,  சிறந்த குலம்,  கல்வி குணம் இவையெல்லாம் குன்றி,  வீடு வீடாகச் சென்று,  ஓடேந்தி உலகெங்கும் பிச்சை எடுத்துத் திரிவர். அன்னையைத் தொழுது நிற்போருக்கு என்ன கிடைக்கும் என்று சொல்லி வந்த அபிராமி பட்டர், அவ்வாறு தொழாமல் நிற்போருக்கு என்ன நேரும் என்று இந்தப் பாடலிலே சொல்கிறார். #பொருளுரை# அந்த அபிராமியைத் தோத்திரம் செய்து, கை கூப்பித் தொழுது, அவளின் உருவத்தை ஒரு கண நேரம்...

#அபிராமிஅந்தாதிபாடல்-66

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-66 வல்லபம் ஒன்று அறியேன்; சிறியேன்;  நின் மலரடிச்  செம்பல்லவம்  அல்லது  பற்று ஒன்றிலேன்;  பசும் பொற் பொருப்பு- வில்லவர் தம்முடன்  வீற்றிருப்பாய்!  வினையேன் தொடுத்த சொல் அவமாயினும்,  நின் திரு நாமங்கள்  தோத்திரமே                     பொருள்:- அபிராமியே!  பசுமையான பொன்மலையை வில்லாக உடைய சிவபிரானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே!  நான் அறிவே இன்னதென்று அறியாதவன்   மிகவும் சிறியவன்.  நின் மலர்ப்பாதத் துணையன்றி வேறொரு பற்றுமில்லாதவன்.  ஆகையால் பாவியாகிய நான் உன்னைப் பாடிய பாடலில் சொற் குற்றங்கள் இருப்பினும்,  தாயே!  நீ தள்ளி விடுதல் ஆகாது.  ஏனெனில், அது உன்னைப் பாடிய தோத்திரங்களேயாகும். அபிராமி பட்டருக்கு,  இங்கே மிகப் பெரும் சந்தேகம் எழுகிறது.  அந்த அபிராமி பற்றிப் பாடுகிறோமே, சிந்திக்கிறோமே,  அதற்கெல்லாம் நமக்கு அருகதை உண்டா?  நமது சொற்களை அந்த அன்னை ஏற்றுக்கொள்வாளா?  என்ற சந்தேகம்தான் அது. அந்த சந...

#அபிராமிஅந்தாதிபாடல்65#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்65# ககனமும் வானும்  புவனமும் காண,  விற் காமன் அங்கம் தகனம் முன் செய்த  தவப்பெருமாற்கு,  தடக்கையும் செம்முகனும், முன்னான்கிரு மூன்று எனத் தொன்றிய  மூதரிவின்மகனும்  உண்டாயது அன்றோ?-வல்லி!  நீ செய்த வல்லபமே!           பொருள்:-  ஏ ,ஆனந்தவல்லி அபிராமி!  உனது கணவனாகிய சிவபெருமான் ஒரு காலத்தில் மன்மதனை அண்டமும், வானமும், பூமியும் காணும்படியாக எரித்தார். அப்படிப்படவருக்கும் நீ ஆறுமுகமும், பன்னிரு கைகளும் சிறந்த அறிவும் கொண்ட அழகனாகிய முருகனைப் பெற சக்தியைக் கொடுத்தாய். உன்னுடைய அன்புதான் என்னவோ! பொருளுரை:- பட்டர் நமக்கு முருகக் கடவுள் தோன்றிய வரலாற்றைக் கூறுகிறார். தேவர்கள் அனைவரும் சூரபத்மனால் துயரப்பட்ட போது,  இந்த சூரனை அழிக்க, சிவபெருமானிடமிருந்து தோன்றிய ஒரு மகனால்தான் முடியும் என்று தெரிந்து கொண்டு,  சிவ பெருமானைப் போய்ப் பார்க்கிறார்கள்.  சிவ பெருமானோ, ஆழ்ந்த தவத்தில் இருந்தார்.  என்ன செய்வது?  தவக் கோலத்தில் இருப்பவரிடமிருந்து எப்படி ஒரு சிசு தோன்ற முடி...

அபிராமி அந்தாதி பாடல்64

Image
  #அபிராமிஅந்தாதிபாடல்64 வீணெ பலி கவர் தெய்வங்கள்பால் சென்று, மிக்க அன்பு பூணேன்; உனக்கு அன்பு பூண்டுகொண்டேன்; நின்புகழ்ச்சி அன்றிப் பேணேன், ஒரு பொழுதும்; திருமேனி ப்ரகாசம் அன்றிக் காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே        #பொருள் :- ஏ, அபிராமி! உன்னையன்றி வீணாகப் பலி வாங்கும் வேறொரு தெய்வத்தை நாடேன். உன்னையே அன்பு செய்தேன். உன்னுடைய புகழ் வார்த்தையன்றி வேறொரு வார்த்தை பேசேன். எந்நேரமும் உன்னுடைய திருமேனிப் பிரகாசத்தைத் தவிர, வேறொன்றும் இவ்வுலகத்திலும், நான்கு திசைகளிலும் காண மாட்டேன் #விளக்கம் :- பட்டர், இந்தப் பாடலில், அபிராமியிடம் தாம் வைத்த பக்தி பற்றிப் பேசுகிறார். ஹிந்து மதத்தில் நிறைய தெய்வங்கள் உண்டு. சிவனும் விஷ்ணுவும் இரு பெருமதத்தாரால் போற்றப்பட்டு வந்தாலும், சிறு தெய்வங்களும் நிரம்ப உண்டு. மாடன், காடன், வேடன் என்று, எல்லை காக்கும் தெய்வங்கள் என்ற பல தெய்வ உருவங்கள் இங்கே ஊருக்கு ஊர் உண்டு. அவற்றோடு, பட்டர் வாழ்ந்த காலத்தில், பலி கொடுத்தலும், அவ்வாறு பலி கொடுத்தால் அதனால் மிக்க நன்மைகள் விளையு...

#அபிராமிஅந்தாதிபாடல்63#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்63# தேரும்படி சில ஏதுவும் காட்டி,  முன் செல்கதிக்குக் கூறும் பொருள்,  குன்றில் கொட்டும் தறி குறிக்கும்-சமயம் ஆறும் தலைவி இவளாய்  இருப்பது அறிந்திருந்தும், வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே             பொருள்:-       ஆறு சமயங்களுக்கு தலைவியாக இருக்கக் கூடியவள், அபிராமி அன்னையாகும்.  அவளே பேதையர்களுக்கு நற்கதியடைவதற்குச் சில உண்மையான வழிகளைக் காட்டுபவள்.  அப்படியிருந்தும் சில வீணர்கள் பிற சமயம் உண்டென்று அலைந்து திரிகிறார்கள்.  இவர்களின் செயல் பெரிய மலையைத் தடி கொண்டு தகர்ப்பேன் என்பது போல் உள்ளது. விளக்கவுரை:- சமயங்கள் ஆறு உண்டு.  சைவம், வைணவம்,  கௌமாரம்,  காணாபத்யம்,  சௌரம், சாக்தம் எனப்படுபவை அவை. சிவபெருமானை வழிபடுவது சைவம். விஷ்ணுவை வழிபடுவது வைணவம். குமரக் கடவுளை வழிபடுவது கௌமாரம்.  கணபதியை வழிபடுவது காணாபத்யம்.  சூரியனை வழிபடுவது சௌரம். சக்தியை, அந்த அன்னை அபிராமியை வழிபடுவது, சாக்தம். இப்படி ஆறு சமயங்கள் இருந்தாலும், அவை அனைத்திற...

#அபிராமிஅந்தாதிபிடல்62#

Image
 #அபிராமிஅந்தாதிபிடல்62# தங்கச் சிலை கொண்டு,  தானவர்  முப்புரம் சாய்த்து, மதவெங்கண்  உரி போர்த்த  செஞ்சேவகன்  மெய்யடையக் கொங்கைக் குரும்பைக்  குறியிட்ட நாயகி,  கோகனகச் செங்கைக் கரும்பும்,  மலரும்,  எப்போதும் என் சிந்தையதே        அபிராமி அந்தாதியிலே  மறுபடி மறுபடி வரக்கூடிய சிந்தனைகள் சில. அவற்றில் ஒன்று,  'தவ மா முனிவராக' இருந்த  சிவ பெருமானையும் தன் அழகினால் சாய்த்த அம்மையின் பெருமை. அந்தச் சிவனார் எப்படிப் பட்டவர்? தங்கத்தினால் ஆன வில் கொண்டு, அரக்கர்களின் முப்புரங்கள் எனச் சொல்லப்படும் மூன்று கோட்டைக் கலையும் சாய்த்த பெருமை உடையவர்.  அனைவரையும் அழித்துவிடுமாறு எதிர்த்து வந்த,  தாருகா வனத்து முனிவர்களால் ஏவப்பட்ட யானையினைக் கொன்று,  அதன் தோலை எடுத்துத் தனக்கு ஆடையாகப் போர்த்திக் கொண்டவர். அப்படிப்பட்ட பரமசிவனாரையும் அவரது உடல் தளர்ந்து போகுமாறு தனது குரும்பை ஒத்த கொங்கைகளால் சாய்த்த பெருமை உடைவள் அல்லவோ நமது அம்மை அபிராமி! அந்த பெருமையும் சிறப்பும் உடைய அபிராமி அன்னையின் ...

அபிராமிஅந்தாதிபாடல்_61

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்_61 . நாயேனையும்  இங்கு ஒரு பொருளாக  நயந்து வந்து, நீயே நினைவின்றி  ஆண்டு கொண்டாய்;  நின்னை உள்ளவண்ணம் பேயேன் அறியும்  அறிவு தந்தாய்;  என்ன பேறு பெற்றேன்!-- தாயே,  மலைமகளே,  செங்கண்மால்  திருத் தங்கைச்சியே :  என் தலை மீது உனது திருப் பாதம் வைத்து என்னை நீ ஆண்டு கொண்டாய்.  இந்த நாயேனையும் ஒரு பொருளாக அல்லவோ கருதி,  நீ அருள் புரிந்து விட்டாய். உலகம் முழுக்க ஆளும் மஹா ராணி அல்லவோ நீ!  நீயே வந்து இந்த சிறியேனுக்கும் அருள் செய்ய முன் வந்தாயே!  அந்த அருளை என்ன என்று சொல்வேன்! அதுவும் எப்படி நீ செய்திருக்கிறாய்?  நீ என்னை வந்து ஆண்டு கொண்டது கூட எனக்குத் தெரியவில்லை. அப்படி, எனக்கு சற்றேனும் தெரியக்கூட இல்லாமல்,  என் நினைவுக்கும் தெரியாமல் அல்லவா நீ எனக்கு அருள் செய்திருக்கிறாய்! அப்படி அருள் செய்து, உன்னை அறிந்து கொள்ளும்படியான அறிவும் எனக்குத் தந்துவிட்டாய். உனது அருளை என்னவென்று சொல்வது? அம்மா!  தாயே! மலைமகளே!  அந்த செங்கண்மாலின் தங்கையல்லவா நீ!  அதனால்தான்,...