Posts

செங்கனூர் பகவதி கோவில்-1

Image
முந்தைய நாள் பதிவில் குறிப்பிட்டது போல் செங்கனூர் பகவதி கோவில் பற்றிய பதிவு. செங்கன்னூர்  பகவதி கோவில் பற்றி சுவையான கதைகள் தொடர்ச்சி கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற  108 கோவில்கள்- கதை  ஸ்ரீ ஆயில்யம் திருநாள் மகாராஜாவின் (1860-1880) காலத்தில் அவரிடம்  சூரிய நாராயணன் என்பவர் பணியில் இருந்தார். அவர் காலத்தில்தான் திருவங்கூர் ஒரு முன்னுதாரண ராஜ்யமாக மாறியது மன்னருக்கும் சூரிய நாராயணனுக்கும் இடையே மனத்தாங்கல் ஏற்படவே ,  அவரும் கம்பன் போல கோபித்துக்கொண்டு ‘உண்டோ குரங்கேற்றுக்கொள்ளாத கொம்பு?’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். கற்றவருக்கு சென்றவிடம் எல்லாம் சிறப்பு அல்லவா !  திருவல்லாவில் வித்துவான் பட்டத்திரி யிடம்  சென்று மந்திரம் ஒன்றைக் கற்றார். அதை செங்கன்னூர் பகவதி/ மகா தேவன் கோவிலில் உரு ஏற்றினார் ; 41 நாட்கள் ஆயின;  இதே நேரத்தில் மன்னர் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டது;  எப்படியாவது சூரிய நாராயணனைக்  கண்டுபிடித்து  அழைத்து வாருங்கள்   என்று உத்தரவிட்டார் மகாராஜாவின் ஆட்கள் எங்கெங்கோ தேடி,  கடைசியில், பகவதி கோவிலில் அவரைக...

மஹாபெரியவா கூறிய இருகடமைகள்.

Image
 மஹாபெரியவா கூறிய இருகடமைகள். ஒன்று பித்ருக்களுக்கு செய்ய வேண்டியக்கடமை மற்றொன்று குலத்தெய்வ வழிபாடு. கடந்த 15தினங்கள் மிகவும் அற்புதமான நாட்கள். ஒன்று நவராத்திரி மற்றொன்று புரட்டாசி சனிக்கிழமை குலத்தெய்வம் ஏழுமலையானுக்கு மாவிளக்கு ஏற்றுதள். எங்களுக்கு அடிமை காவு செங்கனூர் பகவதி.  காரணம் எங்கள் மூதாதையர் origin, கேரளா வர்கலா அதாவது கழகூட்டம் என்கிற கிராமத்தை சேர்ந்தவர்கள். அதனால் அம்பாள் செங்கனூர் பகவதி எங்களுக்கு பெண் தெய்வம் ஆவாள். அம்பாள் சிவன் பார்வதி சொரூபமாக இந்த சந்நிதியில் எழுந்தளியுள்ளார். இந்த கோவில் பெண்களுக்கு மிகவும் விசேஷம்.  காரணம் ஏற்படுகின்ற மாத விலக்கு மாதிரி அம்பாளுக்கு ஏற்படும் போது . அம்பாளுக்கு தனி அறையில் வைத்து பூஜை நடக்கும்.  அப்போது அம்பாள் மூலவர் சந்நிதி மூடப்பட்டு இருக்கும். மூன்று நாட்கள் முடிந்த பிறகு ஆராட்டு விழா முடிந்து அம்பாள் சந்நிதிக்கு எழுந்து அருளும்போது சுவாமி அம்பாளை எதிர்க்கொண்டு அழைப்பார். அப்போது அவர்கள் இருவருக்கும் ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அவர்கள் இருவரும் யானை மீதி ஏறி உளபிராகாரம் பவனி வரும்போது இருவரும் குலுங்...

#அபிராமிஅந்தாதி-52 பாடல்

Image
 #அபிராமிஅந்தாதி-52 பாடல் வையம் துரகம் மதகரி  மாமகுடம்  சிவிகை பெய்யும் கனகம்  பெருவிலை ஆரம்  பிறை முடித்த ஐயன் திருமனையாள்  அடித் தாமரைக்கு  அன்பு முன்பு செய்யும் தவமுடையார்க்கு  உளவாகிய சின்னங்களே. ஏ, அபிராமி!  உன்னிடம் அன்பு கொண்டு தவம் செய்யும் ஞானிகள் உன் திருவடித் தாமரைகளையே வணங்குகிறார்கள். அத்திருவடிகளைக் கண்டுகொள்ள அடையாளம் எதுவென்றால், பிறையணிந்த சிவபெருமானின் துணைவியே!  கேள்:  வையம், தேர், குதிரை, யானை, உயர்ந்த மணிமுடிகள், பல்லக்குகள், கொட்டும் பொன், உயர்ந்த முத்து மாலைகள் - இவையே நின் திருவடிச் சின்னம்! வையம் - ஆளுவதற்குப் பெரும் பூமி துரகம் - ஏறி ஊரையும் நாட்டையும் வலம் வர அழகிய குதிரைகள் மதகரி - பெரிய பெரிய யானைகள் மாமகுடம் - உயர்ந்த மணிமுடிகள் சிவிகை - அழகிய பல்லக்கு பெய்யும் கனகம் - சிற்றரசர்கள் வந்துப் பணிந்து, கப்பமாகக் கொட்டும் தங்கம் பெருவிலை ஆரம் - விலை மதிப்பு வாய்ந்த மணி மாலைகள் பிறை முடித்த ஐயன் திருமனையாள் - நிலாத்துண்டைத் திருமுடியில் சூடிய ஐயனின் மனையாளாகிய அன்னையின் அடித் தாமரைக்கு - திருவடித்தாமரைகளுக்கு...

நவதுர்க்கை (தேவநாகரி)

Image
 நவதுர்க்கை (தேவநாகரி) :नवदुर्गा) என்பது துர்க்கா தேவியின் ஒன்பது வடிவங்களைக் குறிக்கும். சமஸ்கிருதத்தில் '#நவ#என்றால் ஒன்பது என பொருள்படும். #வேதங்கள்# #துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றன.  அவை சைலபுத்ரி, பிரமசாரிணி,  சந்திரகாண்டா, கூஷ்மாண்டா,  ஸ்கந்தமாதா,  காத்யாயினி,  காளராத்திரி,  மகாகௌரி,  சித்திதாத்திரி என அன்னை  ஒன்பது வடிவம் கொண்டிருக்கிறாள்.  இந்த ஒன்பது வடிவங்களுக்கும் வட இந்தியாவில் நவராத்திரி நாட்களில் பூஜை செய்வர்.  இந்த ஒன்பது நாட்களும் அன்னையை முறையாக பூஜை செய்தால் அவள் அனைத்து நலன்களும் அள்ளித் தருவாள் என்பது ஐதீகம். 01.#சைலபுத்ரி (Shailaputri),  என்பதற்கு மலைகளின் மகள் என்பது பொருளாகும்.  இவர், இந்து தெய்வமான துர்காவின் வெளிப்பாடாக அறியப்படுகிறார். இந்த வடிவம், #நவராத்திரியின்முதல் நாளில் வணங்கப்படும் நவதுர்காவின் வடிவங்களில் ஒன்றாக உள்ளது இவர், #சதிபவானிபார்வதி அல்லது #ஹேமாவதி என்றும் அழைக்கப் படுகிறார்.  தாய் சைலபுத்ரி என்பது அன்னை இயற்கையின் முழுமையான வடிவம் ஆகும் 02.பிரம்மச்சாரின...

மூன்று கூடங்களுக்கும் மூன்று சக்திகளும்

Image
 நேற்றைய பதிவில் பஞ்ச தசிமந்திரம் மற்றும் மூன்று கூடங்களைக் கண்டோம். மூன்று கூடங்களுக்கும் மூன்று சக்திகளும் உள்ள தொடர்பு என்ன என்ற பதிவைக் காணாலாம். மூன்று கூடங்களுக்கும் மூன்று சக்திகளும் என்பது  இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய மூன்று சக்திகளையும் குறிக்கிறது.  இச்சை என்பது விருப்பம் அல்லது லட்சியம், ஞானம் என்பது அறிவு, கிரியா என்பது செயலில் ஈடுபடும் திறன், இந்த மூன்று சக்திகளும் மனிதர்களுக்கு இன்றியமையாதவை.  மூன்று சக்திகள் விளக்கம் இச்சா சக்தி ( इच्छा शक्ति ):  இது நமது விருப்பங்கள், லட்சியங்கள், மற்றும் குறிக்கோள்களை உள்ளடக்கியது. நாம் எதையாவது விரும்பும் போது அல்லது அடைய வேண்டும் என்று நினைக்கும் போது இந்த சக்தி செயல்படுகிறது. ஞான சக்தி ( ज्ञान शक्ति ):  இது அறிவையும், உணர்வையும் குறிக்கிறது. சரியான புரிதலுக்கும், விவேகத்திற்கும் இது அவசியம். கிரியா சக்தி ( क्रिया शक्ति ):  இது செயலில் ஈடுபடும் திறனைக் குறிக்கிறது. திட்டமிட்ட இலக்கை அடைய தேவையான செயல்களைச் செய்வதற்கும், உருவாக்குவதற்கும் இந்த சக்தி துணை புரிகிறது. இந்த மூன்று சக்திகளும...

#அபிராமிஅந்தாதிபாடல்-50

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-50 சகலும் அவளே! அவள் என்றாள் எவள் அவளே ஆதிபராசக்தி அவளின் பலசொரூபங்களை பட்டர் இங்கு விவரிக்கிறார். அவை நாயகி  நான்முகி நாராயணி  கை நளின  பஞ்சசாயகி  சாம்பவி  சங்கரி  சாமளை சாதி நச்சு வாயாகி மாலினி  வாராகி  சூலினி  மாதங்கி  என்று ஆயகியாதி உடையாள்  சரணம் அரண் நமக்கே பொருள் நாயகி - உலகனைத்துக்கும் தலைவி அவளே அன்னை ஆதிபராசக்தி நான்முகி -  நான்முகனான பிரம்மதேவரின் சக்தி அவளே சரஸ்வதி நாராயணி -  நாராயணனின் சக்தி லெக்ஷ்மியும் அவளே கை நளின பஞ்ச சாயகி - தாமரை போன்ற திருக்கரங்களில் ஐந்து மலரம்புகளைத் தாங்கியவள் அவளே லலிதா சாம்பவி -  சம்புவான சிவபெருமானின் சக்தி  அவளே மலைமகள் சங்கரி - சங்கரனின் மனைவி இன்பம் அருள்பவள் சாமளை -  பச்சை வண்ணமுடையவள் அவளே மாதாங்கி மற்றும் மீனாக்ஷி சாதி நச்சு வாய் அகி -  கொடிய நச்சினை வாயில் உடைய பாம்பை அணிந்தவள் அவளே காளி மாலினி -  பலவிதமான மாலைகளை அணிந்தவள்  வாராகி -  உலகங்கள் காக்கும் வராக ரூபிணி வராஹத்தின் பெண் சொரூபம் சூலினி -  திரிசூலம் ...

நவராத்திரி மேன்மை

Image
 நவராத்திரி-4 மஹாபெரியவா தனது பக்தைக்கு நவராத்திரி மேன்மை யைச் சொல்லி அருளிய கதை. நவராத்ரி பரிசு ” ஒன்னோட ஆத்துக்காரர் போனதுக்கு அப்றம் நீ……நவராத்ரி கொலுவையும் மறந்துட்டே!.அதோட, என்னையும் மறந்துட்டே! ரமணியை ஒடனே எங்கிட்ட அனுப்பு…” கனவு கலைந்து திடுக்கிட்டு நெஞ்சு படபடக்க எழுந்து உட்கார்ந்தவள் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த ரமணியை எழுப்பினாள். “ரமணி….கண்ணா ..பெரியவா வந்தாடா ஸொப்பனத்ல ! நாம் நவராத்ரி கொலு ஏன் வைக்கிறதில்லேன்னு கேக்கறா.ஒன்னை பெரியவா ஒடனே வரச் சொல்றா டா!..” ‘பெரியவா இப்போ எங்கியோ வடக்கேலேன்னா இருக்கார். அங்க போக, வர செலவுக்கு நீ எங்கம்மா போவே? ஏதோ கனவு வந்திருக்கு உனக்கு .” ” நான் இதை வெறும் கனவா நினைக்கலேடா ரமணி. பெரியவா கூப்டிருக்கா? கட்டளை. கவலைப்படாத! அவரே வழி காட்டுவார்டா ….” விடிந்ததும், மாடி போர்ஷனில் குடியிருக்கும் ஸர்மா வந்தார். மிகவும் நல்ல மனுஷ்யர். அவரும் அவர் மனைவியும் இவர்களிடம் மிகவும் ஆதரவோடும், அனுஸரணையோடும் இருப்பவர்கள். “அம்மா….நானும், எங்காத்துக்காரியும் நாளன்னிக்கி நார்த் இண்டியா டூர் போறோம். திரும்பி வர எப்டியும் ரெண்டு மாஸம் ஆகலாம். ஒன்னோட ரெண்ட...