Posts

தஞ்சாவூர் மாநகர் உருவான விதம் மற்றும் அதன் நீர்மேலாண்மைப் பற்றிய பதிவு.

Image
 தஞ்சாவூர் மாநகர் உருவான விதம் மற்றும் அதன் நீர்மேலாண்மைப் பற்றிய பதிவு. தஞ்சாவூர்:  ஆஹா என்ன அழகு எத்தனை அழகு...  கண்ணையும், மனதையும் தழுவி நெஞ்சை நிறைக்கும் தஞ்சையில் உள்ள அனைத்தும் அழகோ அழகுதான். நம் முன்னோர்கள் சிறந்த அறிவு ஜீவிகள்.  முக்கியமாக #நீர்மேலாண்மையில் சிறந்தவர்கள்.  அதனால்தான் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் பொருட்டு தஞ்சையில் குளங்கள் வெட்டினர். சோழமன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தஞ்சை நகரை சுற்றிலும் நான்குபுறமும் தொடர்ச்சியாக தண்ணீர் பயணிக்கக்கூடிய அகழிகள் அமைக்கப்பட்டன.  அன்றே தண்ணீரின் அவசியத்தையும், மேன்மையையும் உணர்ந்து பரந்து, விரிந்து சென்றது. இப்படி பல கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த அகழியில் காவிரி நீரும் மழைநீரும் சேமிக்கப்பட்டன. இதுமட்டுமல்ல பெரிய கோவில் அருகே சிவகங்கை குளம், அய்யன் குளம், சாமந்தன் குளம் உருவாக்க ப் பட்டது.  பெரியக்கோவிலில் விழுக்கின்ற மழை நீரானது வீணாகமல் அருகில் உள்ள சிவகங்கை குளத்திற்கு  சென்றடையும்.  சிவகங்கை குளம் நிரப்பினால் அதிகபடியான நீர் ஊரின் மத்தியில் உள்ள ஐயன் குளத்தில் சேரும் படியான நீ...

தஞ்சாவூர் மேலவீதி கோயிலாகள்

Image
 கடந்த இரு தினங்களாக தஞ்சை பங்காரு காமாக்ஷியைப் பற்றிய பதிவுகளை கண்டோம். தஞ்சை பங்காரு காமாக்ஷியை தவிர மற்றும் கோவில்களை எவ்வாறு நம் முப்பாட்டன் அமைத்துள்ளான்  என்பதை இந்த பதிவில் காணலாம். காரணம் கோவில் இல்லாத ஊரில் குடி இருக்கவேண்டாம் என்பது பழமொழி. அதற்கேற்ப தஞ்சாவூரின் மாநகரின் அமைப்பு அவ்வாறு இருக்கும். அதன் அழகை இராஜக்கள் காலத்தில் நாம் வாழ்ந்து இருந்தால் என்பதை கற்பனைச் செய்து இந்த பதிவை வாசித்தால் நமது மணகண்ணில் மிக அழகாக தோன்றும். ஊரின் அமைப்பே மிக அலதியான அழகு. ஊரின் கட்டமைப்பு என்பது நாலு ராஜ வீதிகளுக்கு நடுவே ஊரின் அமைப்பை. அவை பல சந்துக்களைக் கொண்டு ஒரு தெருவையும் மற்றொரு தெருவையும் இணைப்புதற்கு வசதியாக அமைத்து இருப்பார்கள். ஒவ்வொரு சந்து வெளிபுறமும் கழிவுநீர் வெளியேறுவதற்கு வசதியாக சிறு சாக்கடை அமைப்பு. இந்த ஒவ்வொரு சந்திகள் வழியாக நான்கு வீதிகளை அடையலாம். ஓவ்வொரு சின்ன சின்ன சாக்கடைகளும் வெளிபுரத்தில் உள்ள பெரிய சாக்கடைகளையுடன் இணைப்பு இருக்கும். வெளிபுர சாக்கடை அடுத்து நான்கு வீதிகள். அவை கம்பீரமாக ஊரின் அழகை வெளிச்சம் போட்டு காட்டுகின்ற மாதிரி நாலு பெரிய இராஜவீ...

தஞ்சாவூர் காஞ்சி காமாக்ஷி

Image
 காஞ்சி காமாக்ஷி தஞ்சாவூரில் எவ்வாறு பங்காரு காமாக்ஷி ஆனால் என்ற வரலாறு. செவ்வாய்கிழமை பங்காரு காமாக்ஷி  வரலாற்று மற்றும் பக்தி பின்னணி  &  சரண் நவராத்திரிக்கான அழைப்பு காஞ்சிபுரத்திலிருந்து பங்காரு காமாக்ஷி இடம்பெயர்வதற்கு முன்பு,  அவளுக்கு மட்டுமே சேவார்த்தி பூஜை (தினசரி சேவைகள்) அங்கு செய்யப்பட்டன. முகலாயர் படையெடுப்புகளின் போது,  கோயில் அழிவு மற்றும்  கொள்ளையிலிருந்து தெய்வத்தைப் பாதுகாக்க,  காஞ்சிபுரத்திலிருந்து செஞ்சி (காஞ்சிக்கு அருகிலுள்ள  ஒரு கிராமம்) மற்றும்  உடையார் பாளையம் வழியாக அவள்  மாற்றப்பட்டாள்.  உடையார்பாளையம் ஜமீனில்,  காஞ்சிபுரத்தின் கோயில்களில்  இருந்து பல உற்சவ மூர்த்திகள் (திருவிழா சிலைகள்) அடைக்கலத்தில் வைக்கப்பட்டன, ஏனெனில் அந்த நேரத்தில் காஞ்சியில் உள்ள அனைத்து கோயில்களும் மூடப்பட்டிருந்தன.  மூலஸ்தான சக்தி  (பிரதான தெய்வத்தின் ஆன்மீக  சாராம்சம்)  இடம் பெயர்வதற்கு   முன்பு அந்தந்த உற்சவ மூர்த்திக்கு சடங்கு ரீதியாக மாற்றப்பட்டது  (ஆகார்ஷணம்). முகலாயப் படைகள் ...

அம்மையும்அப்பனும்

Image
 இந்த மனித பிறவியின் நோக்கம் என்ன?. #அம்மையும்அப்பனும் "அம்மையும் அப்பனும்" என்பது  பொதுவாக "சிவபெருமானும் பார்வதியும்" அல்லது  "இறைவனும் இறைவியும்" என்று பொருள்படும்.  இது இந்து மதத்தில், குறிப்பாக சைவ சமயத்தில்,  பிரபஞ்சத்தின் ஆண்பால் மற்றும் பெண்பால் அம்சங்களைக் குறிக்கும் ஒரு சொல்லாடலாகும்.  மேலும் விளக்கம்:  அம்மை: இது பார்வதி தேவியைக் குறிக்கிறது. சக்தி மற்றும் பிரபஞ்சத்தின் தாய் சக்தியாக கருதப்படுகிறார். அப்பன்: இது சிவபெருமானைக் குறிக்கிறது. பிரபஞ்சத்தின் தந்தை மற்றும் அழிக்கும் கடவுளாகக் கருதப்படுகிறார். அம்மையும் அப்பனும்: இந்தச் சொல்,  பிரபஞ்சத்தின் இருமைத் தன்மையையும்,  ஆண், பெண் அம்சங்களின் ஒன்றிணைப்பையும் குறிக்கிறது.  இது சிவ-சக்தி தத்துவத்தின் ஒரு பகுதியாகும். இந்து மதத்தில் முக்கியத்துவம்: இது இந்து மதத்தில், குறிப்பாக  சைவ மதத்தில், ஒரு முக்கிய கருத்தாகும்.  இது பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் இயக்கம் ஆகியவற்றில்  ஆண், பெண் சக்திகளின் பங்களிப்பை விளக்குகிறது. பரம்பொருள் என்பது பிரபஞ்சத்தின் உயர்ந்த சக்தியைய...

#அபிராமிஅந்தாதிபாடல்# - 37

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்# - 37 நவமணிகளை பெற்று தரும் கைக்கே அணிவது கன்னலும் பூவும்,  கமலம் அன்ன மெய்க்கே அணிவது  வெண்முத்து மாலை,  விட அரவின் பைக்கே அணிவது  பண்மணிக் கோவையும்  பட்டும்,  எட்டுத்திக்கே  அணியும் திருவுடையானிடம்  சேர்பவளே இங்கே அம்பாள் என்னென்னவெல்லாம்  அணிகிறாள் என்பது கூறப்பட்டுள்ளது. கைகளில் - கரும்பு வில், மலர் அம்பு  அவள் நான்கு கைகளிலும் எதை  வைத்துள்ளாள் #லலிதாசஹஸ்ரநாமத்தில்# விளக்கம் [கன்னல் - கரும்பு] [கமலம்-  தாமரை]  சதுர் பாஹு சமன்விதா -  நான்கு கைகள் கொண்டவள். ராக ஸ்வரூப பசாத்யா  கயிறு (பாசா) வடிவ அனைவரையும் நேசிக்கும் அவள் - அவள் இடது கைகளில் ஒன்றில் இதை வைத்திருக்கிறாள் க்ரோதாகரன்குசோஜ்வாலா வலது கைகளில் ஒன்றில் அங்குசா   வடிவில் மினுமினுத்து கோபம் கொண்டவள். மனோ ரூபேசு கோதண்டா  அவள் இடது கைகளில் ஒன்றில் மனம் கொண்ட இனிப்பு கரும்பு  வில் கொண்டவள் மாத்ரா சாயக்காவை விட  பஞ்சா தொடுதல், வாசனை, செவிப்புலன், சுவை மற்றும் பார்வை ஆகிய ஐந்து வில்களைக் கொண்ட அவள் சீர்காழி கோவிந...

கங்கைகொண்ட சோழபுரம்

Image
 கங்கைகொண்ட சோழபுரத்திற்கு கடன் தீர்த்த காஞ்சி சங்கர மடம். தெற்காசிய நாடுகளை ஆண்ட சோழ பேரரசர்களின் தலைநகராக இருந்த பெருமைக்குரியது கங்கைகொண்ட சோழபுரம்.  இங்கு மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன், சோழீசுவரர் கோவில் என்ற சிவலாயத்தை கட்டினார்.  மாமன்னர் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோவிலை மாதிரியாக கொண்டு,  கட்டப்பட்ட சோழீசுவரர் கோவில், ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் சோழ மன்னர்களின் கட்டிடக் கலைக்கு சான்றாக நிமிர்ந்து நிற்கிறது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புகள் கொண்ட, கலையம்சம் மிக்க சோழீசுவரர் கோவில்,  இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் 1983-ம் ஆண்டுக்கு முன்பாக பெரிய அளவில் பராமரிப்பு இல்லாமல் இருந்தது. பூஜைகள், திருவிழாக்களும் பெரிய அளவில் நடக்கவில்லை. 1983ல் வாரணாசி சென்று திரும்பிய காஞ்சி சங்கர மடத்தின் பக்தர்கள், புனித கங்கை நீருடன், காஞ்சி மகாபெரியவரை சந்திக்க, காஞ்சிபுரம் வந்தனர்.  கங்கை நீரை மகாபெரியவரிடம் கொடுத்தபோது,  "எனக்கு கங்கை நீரை கொண்டு வந்திருக்கிறீர்கள். ஆனால், கங்கைகொண்ட சோழபுரத்தில், கங்கைபெயரைக் கொண்ட சிவபெருமான்...

மஹாபெரியவாளும் திருகோயிலும்

Image
மஹாபெரியவாளுக்கும் ஓவ்வொரு கோயிலுக்கும் நிறைய சம்பந்தங்கள் உள்ளது. அவ்வாறான நிகழ்வு கடந்த வாரம் நடந்தது. எனது வாடிக்கையாளர் ஒருவருக்கு ஆர்டர் கைபேசி வாயிலாக வரும்,வந்த ஆர்டரை எனது ஊழியர் மூலமாக அவருக்கு கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த முறை அவரை தொடர்ப்புக் கொள்ளும்போது,, என்னை அவரது இல்லத்தில் வந்து கொடுக்குமாறு ஒரு விண்ணப்பம். எனவே அவரது வீட்டை நோக்கி இரண்டு நாட்கள் முன்பு சென்று வந்தேன். அவர் என்ன நினைத்தாரோ என தெரியவில்லை. கிட்டத்தட்ட 45நிமிடங்கள் நிறைய விஷயங்களை பேசினார். அதில் அவர்ச் சொன்ன விஷயம்,நான் மஹாபெரியவா பக்தர், மஹாபெரியவாவிடம் நல்ல பழக்கம் உண்டு. ஒரு நாள் ஹாலில் உட்கார்ந்து எதைய யோசித்துக் கொண்டு இருந்தேன். என்னை யாரே ஒருவர் கூப்பிடுவது போல் ஒரு உணர்வு. என்னை யோசித்துக் கொண்டு இருக்கிறாய். யோசிப்பதற்கு பதிலாக எதாவது எழுதலாமே என்று ஒரு கேள்வி அவரிடமிருந்து. எதைப்பற்றி எழுதுவது என்று என்னிடமிருந்து கேள்வி. அதற்கு அவரிடமிருந்து நான் சென்று வந்த கோவில்களைப் பற்றிய எழுது என்ற பதில். அவ்வாறு எழுத ஆரம்பித்தது எழுத பழக்கம். இது நடப்பதற்கு கிட்டத்தட்ட ஒருவாரத்திற்கு முன்பு தான் கங்க...