செங்கனூர் பகவதி கோவில்-1

முந்தைய நாள் பதிவில் குறிப்பிட்டது போல் செங்கனூர் பகவதி கோவில் பற்றிய பதிவு. செங்கன்னூர் பகவதி கோவில் பற்றி சுவையான கதைகள் தொடர்ச்சி கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- கதை ஸ்ரீ ஆயில்யம் திருநாள் மகாராஜாவின் (1860-1880) காலத்தில் அவரிடம் சூரிய நாராயணன் என்பவர் பணியில் இருந்தார். அவர் காலத்தில்தான் திருவங்கூர் ஒரு முன்னுதாரண ராஜ்யமாக மாறியது மன்னருக்கும் சூரிய நாராயணனுக்கும் இடையே மனத்தாங்கல் ஏற்படவே , அவரும் கம்பன் போல கோபித்துக்கொண்டு ‘உண்டோ குரங்கேற்றுக்கொள்ளாத கொம்பு?’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். கற்றவருக்கு சென்றவிடம் எல்லாம் சிறப்பு அல்லவா ! திருவல்லாவில் வித்துவான் பட்டத்திரி யிடம் சென்று மந்திரம் ஒன்றைக் கற்றார். அதை செங்கன்னூர் பகவதி/ மகா தேவன் கோவிலில் உரு ஏற்றினார் ; 41 நாட்கள் ஆயின; இதே நேரத்தில் மன்னர் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டது; எப்படியாவது சூரிய நாராயணனைக் கண்டுபிடித்து அழைத்து வாருங்கள் என்று உத்தரவிட்டார் மகாராஜாவின் ஆட்கள் எங்கெங்கோ தேடி, கடைசியில், பகவதி கோவிலில் அவரைக...