அபிராமிஅந்தாதிபாடல்93
#அபிராமிஅந்தாதிபாடல்93 நகையே இஃது; இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு, முகையே முகிழ் முலை; மானே முதுகண்; முடிவுஇல், அந்த வகையே பிறவியும்; வம்பே, மலைமகள் என்பது நாம்; மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே #பொருள் உலகமெல்லாம் பெற்றெடுத்த தலைவியாகிய அபிராமி அன்னையின் திரு மார்பகங்களைத் தாமரை மொட்டு என்கிறார்கள். கருணை ததும்பி நிற்கும் முதிர்ந்த கண்களை, மருட்சி மிக்க மான் கண்கள் என்கிறார்கள். முடிவில்லாதவள் என்றெல்லாம் பக்தர்கள் கூறுகின்றார்கள் இவையெல்லாமே மாறுபட்ட கூற்றுகள். இவைகளை நினையும் போது எனக்கு நகைப்பே உண்டாகிறது. இனிமேல் நாம் செய்யக்கூடியது இத்தகைய கற்பனைகளைத் தள்ளி அவளின் உண்மை நிலையை அறிதலேயாகும். #பொருளுரை குழந்தைகள் பெற்ற ஒரு பெண்மணிக்கு, ஸ்தனங்கள் சற்றே தளர்ந்து, தாழ்ந்து இருக்கும். ஆனால், உலகையே பெற்றெடுத்த பெண்மணியாம் எம் அன்னைக்கு, ஸ்தனங்கள் தாமரை மொட்டு போல் இருக்கின்றன! இது வியப்பானது இல்லையா!! முதுமை அடைந்துவிட்ட ஒரு பெ...