அபிராமிஅந்தாதிபாடல்- 26#

 #அபிராமிஅந்தாதிபாடல்- 26#


பலன்: செல்வாக்கு, சொல்வாக்கு அருளும்


ஏத்தும் அடியவர் 


ஈரேழ் உலகினையும் 


படைத்தும்


காத்தும் 


அழித்தும் 


திரிபவராம், 


கமழ் பூங்கடம்பு


சாத்தும் குழல் அணங்கே, 


மணம் நாறும் 


நின்தாளிணைக்கு 


என்


நாத் தங்கு 


புன்மொழி 


ஏறியவாறு 


நகையுடைத்தே


பொருள்:


மணம் கமழ் கடம்ப மாலையினை கூந்தலில் அணிந்திருக்கும் ஆரணங்கு (அழகிய பெண்) அபிராமி.


அவளை அவள் அடியவர்கள் மற்றும் 14 உலகினையும் முறையே படைத்து,


 காத்து, 


அழிக்கும் 


தொழில்கள் 


செய்யும் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய தேவர்களும் வணங்குகின்றனர். 


அத்தகைய அன்னையின் மணம் கமழ் திருவடிகளை எளியவனான என் நாவலிருந்து தோன்றிய பாடல்கள் அவற்றை நன்றாக வர்ணிக்கின்றன. 


இவ்வாறு எண்ணும்போது சிறிய நகை உண்டாகிறது. 


ஏனென்றால், நீ கொடுத்த வாக்கு சக்தியால், 


உன்னையே தொழுகிறேன். 


அதை பெரிதாக கருதி சொல்வதால்.


இப்படியே, 


ஆதி சங்கரர் தனது சௌந்தர்ய லஹரி 100-வது ஸ்லோகத்தில், வினயத்தோடு கூறியுள்ளார்.


பிரதீப-ஜ்வாலாபி:


திவஸகர-நீராஜன-விதி:


ஸுதா-ஸூதே:


சந்த்ரோ-பல-ஜல-லவை:


 அர்க்ய-ரசனா


ஸ்வகீயை: அம்போபி:


 ஸலில-நிதி-ஸௌஹித்யகரணம்

த்வதீயாபி: 


வாக்பி: 


தவ ஜனனி வாசாம் ஸ்துதி: 


இயம்


அதாவது, 


அன்னையை இப்படி 100 ஸ்லோகங்களால் தாம் துதித்தது,


ஒளியின் பிதாவான சூரியனுக்கு கற்பூரத்தால் ஆரத்தி எடுப்பது போன்றது. 


சந்திரகாந்த கல்லிற்கு சந்திரனால் தான் குளிர்ச்சியே. 


அந்த சந்திரனுக்கு சந்திரகாந்த கல்லிலிருந்து வடியும் நீரை எடுத்து அர்க்யம் அளிப்பது போல் ஆகும்.


மேலும் சமுத்திரத்தில் இருந்து நீரை எடுத்து சமுத்திரத்திற்கே அபிஷேகம் செய்வது போல் ஆகும்.


நாம் ஒரு ஸ்லோகம் ஸ்வயமாக எழுதினாலும் நான் செய்தேன் நான் செய்தேன் என்று இன்றெல்லாம் copy-rights பதிவு செய்கிறோம்.


சங்கரர், அபிராமி பட்டர் போன்ற மகான்கள், 


உலக நலனுக்காக பல ஸ்தோத்திரங்கள் செய்தாலும், 


தான் எதுவும் செய்யவில்லை.


 எல்லாம் அம்பாளின் அருள் என்று இருக்கிறார்கள். 


அதனால் அவர்கள் மகான்கள்.


ஆனால் நாம் செய்த சிறு காரியத்தை நான் நான் செய்தேன் என்கிறோம்.


அந்த நான் யார் என்பதே கேள்வி.


மஹான்கள் பக்குவம் அடைந்தவர்கள் அதனால் உன்னால் முடிந்தது என்று அம்பாளை நோக்கி கூறுகின்றனர்.


ஆனால் நாம் பக்குவம் அடையவில்லை அதனால் நான் செய்தேன் என கூறுகிறோம்.


இதற்கு உதாரணம் மஹாபாரத போரில் அர்ஜீனன் கிருஷ்ணரிடம் நான் அர்ஜீனனை கொன்றேன் என்ற பொழுது.


அதற்கு கிருஷ்ணர் உனக்கு முன்பு உன் தாய் இரண்டு வரங்கள் கேட்டால் அதன் பிறகு இந்திரன் கவச குண்டலங்களை கேட்டுப் பெற்றான் 


நானோ உனக்காக அவன் தர்மமத்தை யாசகம் செய்தேன்.


இவை அனைத்திற்கு பிறகு அவன் செத்த பாம்பே அதை செய்து விட்டேன்.


இவை அனைத்திற்கும் மூலகாரணம் நான் என கிருஷ்ணர் கூறி, கர்வத்தின் மாயையில் இருந்த அர்ஜீனனை நல்வழிபடுத்தினார்.


அதுவே குருவின் கடமையைச் செய்தார்.


இதை உணர்ந்ததால் தான் அவர்கள் மஹான்கள் நாம் பாமரர்கள்.


Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.